Category Archives: ஐ லவ் இந்தியா

எங்கிருந்தோ என்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஐ லவ் இந்தியா

Engiruntho Ennai Azhaithathu Song Lyrics in Tamil


BGM

பெண் : எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
உந்தன் கானம்தானா…

BGM

பெண் : என் மனதில் அன்பை விதைத்ததென்ன…
உந்தன் மோகம்தானா…

BGM

பெண் : அடிமானே மரகதமே…
மலைத்தேனே திரவியமே…
என தேவன் தழுவிடவே…
இந்த ஜீவன் தவித்திடவே…

பெண் : தொலைவினில் எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
உந்தன் கானம் தானா…

BGM

பெண் : எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
அழைத்ததென்ன…

BGM

ஆண் : சில்லென்று தென்றல் ஒன்று…
என்னோடு ஒட்டிக்கொண்டு…
பொன்னூஞ்சல் ஆடாதோ… ஓஓ…

ஆண் : மின்சார மின்னல் ஒன்று…
மேலோடு கீழும் இன்று…
சொல்லாமல் பாயோதோ… ஓஓ…

குழு : தண்ணீரிலே…
பெண் : செம்மீனும் ஆடுகின்ற சந்தோஷமோ…
குழு : உல்லாசமே…
பெண் : உண்டாக கூடுகின்ற சல்லாபமோ…

பெண் : காம்போடு நீ கிள்ள…
காபூலின் திராட்சைகள்…
வந்தாடும் நேரத்தில் வேறென்ன தேவைகள்…

குழு : தேனாற்றில் தாகம் தீர நீராடலாம்…

ஆண் : எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
உந்தன் கானம்தானா…

BGM

ஆண் : என் மனதில் அன்பை விதைத்ததென்ன…
உந்தன் மோகம்தானா…

BGM

ஆண் : அடிமானே மரகதமே…
மலைத்தேனே திரவியமே…
அடிமானே மரகதமே…
மலைத்தேனே திரவியமே…

ஆண் : தொலைவினில் எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
உந்தன் கானம்தானா…

BGM

ஆண் : எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
அழைத்ததென்ன…

BGM

பெண் : வற்றாத கங்கை நதி…
போல் இந்த மங்கை நதி…
உன் மீது சாய்ந்தாட… ஆஆ…

பெண் : இன்னேரம் நானும் தொட…
பொன்மேனி நீயும் தொட…
நாணங்கள் தான் ஓட… ஆஆ…

ஆண் : உல்லாடியே உற்சாகம் ஊற்றெடுக்கும் நன்னாளிது…
செம்மாங்குயில் பெண்ணாகி பாட்டெடுக்கும் பொன்னாளிது…

பெண் : செவ்வானம் எங்கேயும் என்னென்ன கோலங்கள்…
பொன்மாலை வெயில்தான் செய்கின்ற ஜாலங்கள்…
குழு : போவோமா கல்யாண ஊர்கோலம்தான்…

ஆண் : எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
உந்தன் கானம்தானா…

BGM

ஆண் : என் மனதில் அன்பை விதைத்தென்ன…
உந்தன் மோகம்தானா…

BGM

ஆண் : அடிமானே மரகதமே…
மலைத்தேனே திரவியமே…
அடிமானே மரகதமே…
மலைத்தேனே திரவியமே…

ஆண் : தொலைவினில் எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
உந்தன் கானம்தானா…

BGM

ஆண் : எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
அழைத்ததென்ன…

BGM


Notes : Engiruntho Ennai Azhaithathu Song Lyrics in Tamil. This Song from I Love India (1993). Song Lyrics penned by Vaali. எங்கிருந்தோ என்னை பாடல் வரிகள்.


அடி ஆடிவரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஐ லவ் இந்தியா

Adi Aadivarum Pallaakku Song Lyrics in Tamil


BGM

பெண் : அடி ஆடிவரும் பல்லாக்கு…
இது சாமி வரும் தேரு…
நம்ம ஆதிசனம் எல்லார்க்கும்…
அருள் கூடிவரும் பாரு…

பெண் : சஞ்சலம் சஞ்சலம்…
ஓடட்டும் ஓடட்டும்…
நெஞ்சிலும் நெஞ்சிலும்…
நிம்மதி வந்தே கைகூடும்…

BGM

பெண் : பாட்டுச்சந்தம் எங்கேயும் என்னானந்தம்…
தன தம்தம் தன தம்தம்…
நெஞ்சில் நித்தம் தித்திக்கும் பஞ்சாமிர்தம்…
அமிர்தம் தம் தம் அமிர்தம் தம் தம்…

பெண் : எட்டு திக்கும் எட்டும் இந்த நாதம்…
எண்ணம் எல்லாம் நாளும் பாடும் கீதம்…
நீர் கொண்ட மேகம் பூத்தூவும் நேரம்…
ஓர் ஆனந்தம் அம்மம்மா என் சொல்ல…

பெண் : அடி ஆடிவரும் பல்லாக்கு…
இது சாமி வரும் தேரு…
நம்ம ஆதிசனம் எல்லார்க்கும்…
அருள் கூடிவரும் பாரு…

பெண் : சஞ்சலம் சஞ்சலம்…
ஓடட்டும் ஓடட்டும்…
நெஞ்சிலும் நெஞ்சிலும்…
நிம்மதி வந்தே கைகூடும்…

BGM

பெண் : வெள்ளி அலை துள்ளி எழுந்திட பாரு…
பனி ஆறு பனி ஆறு…
நெஞ்சை அள்ளுவதை கட்டுப்படுத்துவது யாரு…
இங்கு யாரு இங்கு யாரு…

பெண் : உன்னை என்னை கேட்டா பூக்கள் பூக்கும்…
மண்ணில் நின்று கண்கள் தன்னை ஈர்க்கும்…
நிலமோடு நீரும் நீரோடு சோறும்…
யார் தந்தது சொல்லடி பைங்கிளி…

பெண் : அடி ஆடிவரும் பல்லாக்கு…
இது சாமி வரும் தேரு…
நம்ம ஆதிசனம் எல்லார்க்கும்…
அருள் கூடிவரும் பாரு…

பெண் : சஞ்சலம் சஞ்சலம்…
ஓடட்டும் ஓடட்டும்…
நெஞ்சிலும் நெஞ்சிலும்…
நிம்மதி வந்தே கைகூடும்…

BGM

குழு : ஐ லவ் இந்தியா…
ஐ லவ் இந்தியா…
ஐ லவ் இந்தியா…
ஐ லவ் லவ் லவ் இந்தியா…

BGM


Notes : Adi Aadivarum Pallaakku Song Lyrics in Tamil. This Song from I Love India (1993). Song Lyrics penned by Vaali. அடி ஆடிவரும் பாடல் வரிகள்.


kurukku-paathaiyile-song-lyrics-in-tamil

குறுக்கு பாதையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & மின்மினிஇளையராஜாஐ லவ் இந்தியா

Kurukku Paathaiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : குறுக்குப் பாதையிலே…
மறிச்சி வழியில் நிக்க…
உறுத்தும் இளமனசின்…
அருத்தம் தெரிஞ்சு நிக்க…

ஆண் : கூறாமப் போரவளே குருவம்மா…
பதில் கூறாமப் போனவளே குருவம்மா…
அட வருத்தம் என்ன வருத்தம்…
என்ன பருவமா…
நாம வெலகி நிக்க ரெண்டும்…
ரெண்டு துருவமா…

பெண் : குறுக்குப் பாதையிலே…
மறிச்சி வழியில் நின்னு…
உறுத்தும் இளமனசின்…
அருத்தம் தெரிஞ்சு நின்னு…

பெண் : கேட்காம கேட்டு நிக்கும் மருதையா…
மேளம் கொட்டாம கேட்குறியே உரிமையா…
ஒன்ன பாக்குறப்போ உள்ளார…
ஒன்னு வருதையா…
நீயும் பரிசம் போட்டு…
ஒரசி பார்க்க வருவியா…

BGM

பெண் : சுண்ணாம்பு வெத்தல வச்சு…
குழு : ஹோய்…
பெண் : சாயப் பாக்கு சந்தனம் வச்சு…
குழு : ஹோய்…
பெண் : பொண்ணு பாக்க வந்த…
என்ன மாமாவே…
குழு : ஹோய்…

குழு : பஞ்சாங்கம் ஐயரு வச்சு…
பெண் : ஹோய்…
குழு : பந்தலிலே நாளு குறிச்சு…
பெண் : ஹோய்…
குழு : கண்ணாலம் செஞ்சா என்ன மாமாவே…
பெண் : ஹோய்…

ஆண் : கண்ணாலம் கட்டும் முன்னே…
குழு : ஹோய்…
ஆண் : கெட்டு மேளம் கொட்டும் முன்னே…
குழு : ஹோய்…
ஆண் : கை விரலும் பட்டா என்ன ஆகாதா…
குழு : ஹோய்…

குழு : வண்ணாத்து பூச்சி போல…
ஆண் : ஹோய்…
குழு : வெள்ளருக்கு பூவ போல…
ஆண் : ஹோய்…
குழு : முன்னழகு கண்டா நெஞ்சம் வாடாதா…

ஆண் : அடி மஞ்ச கிழங்கே…
சிறு இன்ப கிழங்கே…

பெண் : கட்டிக் கரும்பே…
கொடி முல்லை அரும்பே…

ஆண் : அடி பாக்காம போனவளே குருவம்மா…
ஒரு பெண்ணென வந்தது…
பொன்னுல பண்ணியே உருவமா…

பெண் : குறுக்குப் பாதையிலே…
மறிச்சி வழியில் நின்னு…
கேட்காம கேட்டு நிக்கும் மருதையா…
உன்ன பாக்குறப்போ உள்ளார…
ஒன்னு வருதையா…
நீயும் பரிசம் போட்டு…
ஒரசி பார்க்க வருவியா…

BGM

ஆண் : பெண்ணான பெண்ணுறங்க…
குழு : ஹோய்…
ஆண் : பொன்னுமணி கண்ணுறுங்க…
குழு : ஹோய்…
ஆண் : பச்ச புல்ல போட்டு வைப்பேன்…
பாய் போல…
குழு : ஹோய்…

குழு : முத்தான முத்தழகி…
ஆண் : ஹோய்…
குழு : பச்ச மல பொட்டழகி…
ஆண் : ஹோய்…
குழு : முத்தம் ஒன்னு வச்சா…
என்ன பூ போலே…
ஆண் : ஹோய்…

பெண் : வெட்டாம வெட்டுது கண்ணு…
குழு : ஹோய்…
பெண் : கப்பம் விட்டு ஒட்டுது பொண்ணு…
குழு : ஹோய்…
பெண் : என்ன வேணும் கண்டுபுடி மாமாவே…
குழு : ஹோய்…

குழு : மெய்யாண்டி மேளத்த கொட்டு…
பெண் : ஹோய்…
குழு : கையிரண்டும் தாளத்த தட்டு…
பெண் : ஹோய்…
குழு : ஒன்னாட்டம் நானும் ரெடி மாமாவே…

ஆண் : அடி தொட்டுப் புடிக்க…
புது மெட்டுப் படிக்க…

பெண் : அள்ளி அணைக்க…
கனி கிள்ளி பறிக்க…

ஆண் : ஆத்தோரம் எடம் இருக்கு வசதியா…
ஒரு ஒத்தடம் வைக்க…
ஒத்திக பாக்க வருவியா…

பெண் : குறுக்குப் பாதையிலே…
மறிச்சி வழியில் நின்னு…
உறுத்தும் இளமனசின்…
அருத்தம் தெரிஞ்சு நின்னு…

பெண் : கேட்காம கேட்டு நிக்கும் மருதையா…
மேளம் கொட்டாம கேட்குறியே உரிமையா…

குழு : ஒன்ன பாக்குறப்போ உள்ளார…
ஒன்னு வருதையா…
ஆண் : ஹையோ…
குழு : நீயும் பரிசம் போட்டு…
ஒரசிப் பார்க்க வருவியா…

ஆண் : அடடடட… குறுக்குப் பாதையிலே…
மறிச்சி வழியில் நிக்க…
உறுத்தும் இளமனசின்…
அருத்தம் தெரிஞ்சு நிக்க…

ஆண் : கூறாமப் போனவளே குருவம்மா…
பதில் கூறாமப் போனவளே குருவம்மா…

குழு : ஒனக்கு வருத்தம் என்ன வருத்தம்…
என்ன பருவமா…
நாம வெலகி நிக்க ரெண்டும்…
ரெண்டு துருவமா…


Notes : Kurukku Paathaiyile Song Lyrics in Tamil. This Song from I Love India (1993). Song Lyrics penned by Vaali. குறுக்கு பாதையிலே பாடல் வரிகள்.