Category Archives: சின்னத்தாயி

சின்னத்தாயி – Chinna Thayee (1992)

அரும்பரும்பா சரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. சுசீலாஇளையராஜாசின்னத்தாயி

Arumbarumba Saram Song Lyrics in Tamil


BGM

பெண் : அரும்பரும்பா சரம் தொடுத்த…
அழகு மலர் மாலை இது ஆராரோ…
தரையினிலே தவழ்ந்து வந்த…
தங்க நிலா மேனியிது ஆராரோ…

பெண் : மகளே நீ மயங்காதே…
மணி விழியே கலங்காதே…
பூச்சூடும் மணி பூந்தேரே…
கூத்தாடும் பசும் பாலாறே…

பெண் : அரும்பரும்பா சரம் தொடுத்த…
அழகு மலர் மாலை இது ஆராரோ…
தரையினிலே தவழ்ந்து வந்த…
தங்க நிலா மேனியிது ஆராரோ…

BGM

பெண் : ஒருவன் இசையினிலே விரித்த வலையினிலே…
இரையாக நான் விழுந்தேனே…
மனிதன் குணங்களையும் மாறும் நிறங்களையும்…
அறியாமல் நான் இருந்தேனே…

பெண் : நஞ்சை விட கொடிது ஆடவனின் மனது…
அன்னை இதை அறிந்தால் அல்லல் பட்ட பிறகு…

பெண் : ஏமாந்தால் தாயும் என்னை போல நீயும்…
ஆசை வைக்காதே பின்பு அவதிபடாதே…

பெண் : அரும்பரும்பா சரம் தொடுத்த…
அழகு மலர் மாலை இது ஆராரோ…
தரையினிலே தவழ்ந்து வந்த…
தங்க நிலா மேனியிது ஆராரோ…

BGM

பெண் : புதிய தலைமுறையே வளரும் இளம் பிறையே…
தேயாமல் வாழ்ந்திடு நீயே…
இளமை தலைவிரிக்க எனையே விலை கொடுத்து…
மடி மீது வாங்கிய சேயே…

பெண் : உன்னை விட எனக்கு சொத்து சுகம் எதற்கு…
இந்த உயிர் உடலில் உன்னை நம்பி இருக்கு…

பெண் : நாம் காண கூடும் இள வேனில் காலம்…
மார்பினில் ஆடும் சிறு மாதுளம் பூவே…

பெண் : அரும்பரும்பா சரம் தொடுத்த…
அழகு மலர் மாலை இது ஆராரோ…

பெண் : மகளே நீ மயங்காதே…
மணி விழியே கலங்காதே…
பூச்சூடும் மணி பூந்தேரே…
கூத்தாடும் பசும் பாலாறே…

பெண் : அரும்பரும்பா சரம் தொடுத்த…
அழகு மலர் மாலை இது ஆராரோ…


Notes : Arumbarumba Saram Song Lyrics in Tamil. This Song from Chinna Thayee (1992). Song Lyrics penned by Vaali. அரும்பரும்பா சரம் பாடல் வரிகள்.


கோட்டையவிட்டு வேட்டைக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாசின்னத்தாயி

Kottaiya Vittu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கோட்டையவிட்டு வேட்டைக்கு போகும்…
சுடலை மாடசாமி…
சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான்…
சூடம் ஏத்தி காமி…

ஆண் : கோட்டையவிட்டு வேட்டைக்கு போகும்…
சுடலை மாடசாமி…
சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான்…
சூடம் ஏத்தி காமி…

ஆண் : கொட்ட வேணும் மேளம்…
கைய தட்ட வேணும் யாரும்…
அஞ்சி நிக்கும் ஊரும்…
அருள் வாக்கு சொல்லும் நேரம்…

ஆண் : கோட்டையவிட்டு வேட்டைக்கு போகும்…
சுடலை மாடசாமி…
சுடலை மாடசாமியும் நான்தான் பூசாரி நீதான்…
சூடம் ஏத்தி காமி…


Notes : Kottaiya Vittu Song Lyrics in Tamil. This Song from Chinna Thayee (1992). Song Lyrics penned by Vaali. கோட்டையவிட்டு வேட்டைக்கு பாடல் வரிகள்.


நான் இப்போதும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாசின்னத்தாயி

Naan Ippodhum Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்க வேணும்…
அட முப்போதும் தப்பாம மந்திரம் படிக்க வேணும்…
அடை மழைக்கு ஒதுங்கும் மைனா குருவி…
மயங்கி கிடக்கும் மெய்தான் தழுவி…

ஆண் : இப்போதும் அட எப்போதும்…

பெண் : நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்க வேணும்…
அட முப்போதும் தப்பாம மந்திரம் படிக்க வேணும்…

BGM

ஆண் : தண்ணீரில் வாழும் செம்மீன தூக்கி…
கண்ணீரில் நான் போட மாட்டேனே…

BGM

ஆண் : அடி கஸ்தூரி மானே கண்ணாலே நானே…
கல்யாண பூமாலை போட்டேனே…

பெண் : உன் பேரை சொல்லி ஓயாது…
உள் மூச்சு வாங்கும் பூமாது…
கை விட்டு போனால் தாளாது…
மண் விட்டு போகும் வாழாது…

ஆண் : அடி ஆத்தாடி உன் மேல நான் வச்ச பாசம்…
ஆகாயம் போல் இங்கே சாகாமல் வாழும்…

பெண் : நீதான் நான் என்று…
நான்தான் நீ என்று…
ஜீவன் ஒன்று தேகம் ரெண்டு…

ஆண் : நான் இப்போதும் அடி எப்போதும்…
நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்க வேணும்…
அட முப்போதும் தப்பாம மந்திரம் படிக்க வேணும்…

BGM

பெண் : வைகாசி மாசம் கை வீசி வந்த…
சங்கீத பூங்காத்து நீதானா…

BGM

பெண் : உன் சங்கீதம் கேட்டு சதிராட்டம் போடும்…
சிங்கார பூந்தோப்பு நான்தானா…

ஆண் : உன் தேகம் எங்கும் பூ வாசம்…
கண்டாலே தீரும் ஆயாசம்…
ஒன்றல்ல நூறு மாமங்கம்…
ஆனாலும் வாழும் நம் நேசம்…

பெண் : என் வாய் பேசும் பேச்செல்லாம் உன் பேச்சி தானே…
உள் வாங்கும் மூச்செல்லாம் உன் மூச்சு தானே…

ஆண் : ஆடும் பூந்தேரே ஓடும் பாலாறே…
என்னை சேரு ஏக்கம் தீரு…

பெண் : நான் இப்போதும் அடி எப்போதும்…
நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்க வேணும்…
அட முப்போதும் தப்பாம மந்திரம் படிக்க வேணும்…

ஆண் : அடை மழைக்கு ஒதுங்கும் மைனா குருவி…
மயங்கி கிடக்கும் மெய்தான் தழுவி…
இப்போதும் ஹோய் எப்போதும்…

ஆண் : நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்க வேணும்…
பெண் : அட முப்போதும் தப்பாம மந்திரம் படிக்க வேணும்…


Notes : Naan Ippodhum Song Lyrics in Tamil. This Song from Chinna Thayee (1992). Song Lyrics penned by Vaali. நான் இப்போதும் பாடல் வரிகள்.


நான் ஏரிக்கரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & சுவர்ணலதாஇளையராஜாசின்னத்தாயி

Naan Erikarai Song Lyrics in Tamil


ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து…
எட்டுத் திசை பார்த்திருந்து…
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல…

ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும்…
ஊரடங்கி போன பின்னும்…
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல…

ஆண் : என் தெம்மாங்கு பாட்ட கேட்டு…
தென்காத்து ஓடி வந்து…
தூதாக போக வேணும் அக்கரையில…

ஆண் : நான் உண்டான ஆசைகள…
உள்ளார பூட்டி வச்சி…
ஒத்தையில வாடுறேனே இக்கரையில…

பெண் : நான் மாமரத்தின் கீழிருந்து…
முன்னும் பின்னும் பார்த்திருந்து…
மாமனுக்கு காத்திருந்தேன் காணல…

பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும்…
சந்தை மூடி போன பின்னும்…
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணல…

BGM

பெண் : நான் மாமரத்தின் கீழிருந்து…
முன்னும் பின்னும் பார்த்திருந்து…
மாமனுக்கு காத்திருந்தேன் காணல…

பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும்…
சந்தை மூடி போன பின்னும்…
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணல…

பெண் : என் தெம்மாங்கு பாட்ட கேட்டு…
தென்காத்து ஓடி வந்து…
தூதாக‌ போக வேணும் அக்கரையில…

பெண் : நான் உண்டான ஆசைகள…
உள்ளார பூட்டி வச்சி…
திண்டாடி நிக்கிறேனே இக்கரையில…

ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து…
எட்டுத் திசை பார்த்திருந்து…
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல…

ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும்…
ஊரடங்கி போன பின்னும்…
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல…

BGM

ஆண் : தூரக் கிழக்கு கரை ஓரம்தான்…
தாழப் பறந்து வரும் மேகம்தான்…

ஆண் : உன்கிட்ட சேராதோ…
என் பாட்ட கூறாதோ…
ஒண்ணாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ…

பெண் : உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே…
செந்நாரை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே…

ஆண் : கண்ணாலம் காட்சி எப்போது…
எந்நாளும் என் நேசம் தப்பாது…

பெண் : நான் மா மரத்தின் கீழிருந்து…
முன்னும் பின்னும் பார்த்திருந்து…
மாமனுக்கு காத்திருந்தேன் காணல…

ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும்…
ஊரடங்கி போன பின்னும்…
சோறு தண்ணி வேணுமின்னு தோணல…

BGM

பெண் : மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான்…
மாசக் கணக்கில் கொண்ட நோயிதான்…
மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ…
அக்காளின் பொண்ணுக்கோர் பொற்காலம் வாராதோ…

ஆண் : கையேந்தும் ஆட்டு குட்டி…
கன்னிப் பெண்ணாய் மாறாதோ…
மையேந்தும் கண்ணை காட்டி…
மையல் தீர பேசாதோ…

பெண் : உன்னாலே தூக்கம் போயாச்சு…
உள்ளார ஏதேதோ ஆயாச்சு…

ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து…
எட்டுத் திசை பார்த்திருந்து…
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல…

ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும்…
ஊரடங்கி போன பின்னும்…
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல…

பெண் : என் தெம்மாங்கு பாட்ட கேட்டு…
தென்காத்து ஓடி வந்து…
தூதாக‌ போக வேணும் அக்கரையில…

பெண் : நான் உண்டான ஆசைகள…
உள்ளார பூட்டி வச்சி…
திண்டாடி நிக்கிறேனே இக்கரையில…

ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து…
எட்டுத் திசை பார்த்திருந்து…
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல…

பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும்…
சந்தை மூடி போன பின்னும்…
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணல…


Notes : Naan Erikarai Song Lyrics in Tamil. This Song from Chinna Thayee (1992). Song Lyrics penned by Vaali. நான் ஏரிக்கரை பாடல் வரிகள்.