பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | பி. சுசீலா | இளையராஜா | சின்னத்தாயி |
Arumbarumba Saram Song Lyrics in Tamil
—BGM—
பெண் : அரும்பரும்பா சரம் தொடுத்த…
அழகு மலர் மாலை இது ஆராரோ…
தரையினிலே தவழ்ந்து வந்த…
தங்க நிலா மேனியிது ஆராரோ…
பெண் : மகளே நீ மயங்காதே…
மணி விழியே கலங்காதே…
பூச்சூடும் மணி பூந்தேரே…
கூத்தாடும் பசும் பாலாறே…
பெண் : அரும்பரும்பா சரம் தொடுத்த…
அழகு மலர் மாலை இது ஆராரோ…
தரையினிலே தவழ்ந்து வந்த…
தங்க நிலா மேனியிது ஆராரோ…
—BGM—
பெண் : ஒருவன் இசையினிலே விரித்த வலையினிலே…
இரையாக நான் விழுந்தேனே…
மனிதன் குணங்களையும் மாறும் நிறங்களையும்…
அறியாமல் நான் இருந்தேனே…
பெண் : நஞ்சை விட கொடிது ஆடவனின் மனது…
அன்னை இதை அறிந்தால் அல்லல் பட்ட பிறகு…
பெண் : ஏமாந்தால் தாயும் என்னை போல நீயும்…
ஆசை வைக்காதே பின்பு அவதிபடாதே…
பெண் : அரும்பரும்பா சரம் தொடுத்த…
அழகு மலர் மாலை இது ஆராரோ…
தரையினிலே தவழ்ந்து வந்த…
தங்க நிலா மேனியிது ஆராரோ…
—BGM—
பெண் : புதிய தலைமுறையே வளரும் இளம் பிறையே…
தேயாமல் வாழ்ந்திடு நீயே…
இளமை தலைவிரிக்க எனையே விலை கொடுத்து…
மடி மீது வாங்கிய சேயே…
பெண் : உன்னை விட எனக்கு சொத்து சுகம் எதற்கு…
இந்த உயிர் உடலில் உன்னை நம்பி இருக்கு…
பெண் : நாம் காண கூடும் இள வேனில் காலம்…
மார்பினில் ஆடும் சிறு மாதுளம் பூவே…
பெண் : அரும்பரும்பா சரம் தொடுத்த…
அழகு மலர் மாலை இது ஆராரோ…
பெண் : மகளே நீ மயங்காதே…
மணி விழியே கலங்காதே…
பூச்சூடும் மணி பூந்தேரே…
கூத்தாடும் பசும் பாலாறே…
பெண் : அரும்பரும்பா சரம் தொடுத்த…
அழகு மலர் மாலை இது ஆராரோ…
Notes : Arumbarumba Saram Song Lyrics in Tamil. This Song from Chinna Thayee (1992). Song Lyrics penned by Vaali. அரும்பரும்பா சரம் பாடல் வரிகள்.