Category Archives: சிகரம்

உன்னை கண்ட பின்பு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். பி. பாலசுப்ரமணியம்சிகரம்

Unnai Kanda Pinbu Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னை கண்ட பின்புதான்…
என்னை கண்டு கொண்டேன்…
உன் கண்ணை கண்ட பின்புதான்…
காதல் கண்டு கொண்டேன்…

ஆண் : உன்னை கண்ட பின்புதான்…
என்னை கண்டு கொண்டேன்…
உன் கண்ணை கண்ட பின்புதான்…
காதல் கண்டு கொண்டேன்…

BGM

ஆண் : நேற்று முதல் புத்தி மாறி பேதலிக்கிறேன்…
நானும் நிறை குடத்தை வைத்துக்கொண்டு…
நீர் இறைக்கிறேன்…

ஆண் : நேற்று முதல் புத்தி மாறி பேதலிக்கிறேன்…
நானும் நிறை குடத்தை வைத்துக்கொண்டு…
நீர் இறைக்கிறேன்…

ஆண் : பூ பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன்…
பூ பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன்…
இன்று பால் குடித்த பின்புதானே பல் துலக்கிறேன்…

ஆண் : உன்னை கண்ட பின்புதான்…
என்னை கண்டு கொண்டேன்…
உன் கண்ணை கண்ட பின்புதான்…
காதல் கண்டு கொண்டேன்…

BGM

ஆண் : புடவையோடு விரலை சேர்த்து தைத்து கொள்கிறேன்…
சாந்து பொட்டெடுத்து மூக்கின் மீது வைத்து கொள்கிறேன்…
புடவையோடு விரலை சேர்த்து தைத்து கொள்கிறேன்…
சாந்து பொட்டெடுத்து மூக்கின் மீது வைத்து கொள்கிறேன்…

ஆண் : தனிமையோடு சத்தமாக பேசி கொள்கிறேன்…
தனிமையோடு சத்தமாக பேசி கொள்கிறேன்…
ஒரு சபை நிறைந்த வேளையிலே மௌனம் ஆகிறேன்…

ஆண் : உன்னை கண்ட பின்புதான்…
என்னை கண்டு கொண்டேன்…
உன் கண்ணை கண்ட பின்புதான்…
காதல் கண்டு கொண்டேன்…


Notes : Unnai Kanda Pinbu Song Lyrics in Tamil. This Song from Sigaram (1991). Song Lyrics penned by Vairamuthu. உன்னை கண்ட பின்பு பாடல் வரிகள்.


இதோ இதோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். பி. பாலசுப்ரமணியம்சிகரம்

Idho Idho En Pallavi Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதோ இதோ என் பல்லவி…
எப்போது கீதம் ஆகுமோ…
இவள் உந்தன் சரணமென்றால்…
அப்போது வேதம் ஆகுமோ…

ஆண் : இதோ இதோ என் பல்லவி…

BGM

பெண் : என் வானமெங்கும் பௌர்ணமி…
இது என்ன மாயமோ…
என் காதலா உன் காதலால்…
நான் காணும் கோலமோ…

BGM

ஆண் : என் வாழ்க்கை என்னும் கோப்பையில்…
இது என்ன பானமோ…
பருகாமலே ருசியேறுதே…
இது என்ன ஜாலமோ…

பெண் : பசியென்பதே ருசியல்லவா…
அது என்று தீருமோ…

பெண் : இதோ இதோ என் பல்லவி…
எப்போது கீதம் ஆகுமோ…
இவள் உந்தன் சரணமென்றால்…
அப்போது வேதம் ஆகுமோ…

பெண் : இதோ இதோ என் பல்லவி…

BGM

ஆண் : அந்த வானம் தீர்ந்து போகலாம்…
நம் வாழ்க்கை தீருமா…
பருவங்களும் நிறம் மாறலாம்…
நம் பாசம் மாறுமா…

BGM

பெண் : ஒரு பாடல் பாட வந்தவள்…
உன் பாடலாகிறேன்…
விதி மாறலாம் உன் பாடலில்…
சுதி மாறக் கூடுமா…

ஆண் : நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை…
பொருந்தாமல் போகுமா…

ஆண் : இதோ இதோ என் பல்லவி…
எப்போது கீதம் ஆகுமோ…

பெண் : இவள் உந்தன் சரணமென்றால்…
அப்போது வேதம் ஆகுமோ…

ஆண் : இதோ…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் : இதோ…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் : என் பல்லவி…
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்…


Notes : Idho Idho En Pallavi Song Lyrics in Tamil. This Song from Sigaram (1991). Song Lyrics penned by Vairamuthu. இதோ இதோ பாடல் வரிகள்.


வண்ணம் கொண்ட

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். பி. பாலசுப்ரமணியம்சிகரம்

Vannam Konda Vennilave Song Lyrics in Tamil


BGM

ஆண் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே…
வானம் விட்டு வாராயோ…
வண்ணம் கொண்ட வெண்ணிலவே…
வானம் விட்டு வாராயோ…

ஆண் : விண்ணிலே பாதை இல்லை…
உன்னை தொட ஏணி இல்லை…
விண்ணிலே பாதை இல்லை…
உன்னை தொட ஏணி இல்லை…

ஆண் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே…
வானம் விட்டு வாராயோ…
வண்ணம் கொண்ட வெண்ணிலவே…

BGM

ஆண் : பக்கத்தில் நீயும் இல்லை…
பார்வையில் ஈரம் இல்லை…
சொந்தத்தில் பாஷை இல்லை…
சுவாசிக்க ஆசை இல்லை…

ஆண் : பக்கத்தில் நீயும் இல்லை…
பார்வையில் ஈரம் இல்லை…
சொந்தத்தில் பாஷை இல்லை…
சுவாசிக்க ஆசை இல்லை…

ஆண் : கண்டு வந்து சொல்வதற்கு…
காற்றுக்கு ஞானம் இல்லை…
நீளத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை…
தள்ளி தள்ளி நீ இருந்தால்…
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை…

ஆண் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே…
வானம் விட்டு வாராயோ…
வண்ணம் கொண்ட வெண்ணிலவே…

BGM

ஆண் : நங்கை உந்தன் கூந்தலுக்கு…
நட்சத்திர பூ பறித்தேன்…
நங்கை வந்து சேரவில்லை…
நட்சத்திரம் வாடுதடி…

ஆண் : நங்கை உந்தன் கூந்தலுக்கு…
நட்சத்திர பூ பறித்தேன்…
நங்கை வந்து சேரவில்லை…
நட்சத்திரம் வாடுதடி…

ஆண் : கன்னி உன்னை பார்த்திருப்பேன்…
கால் கடுக்க காத்திருப்பேன்…
ஜீவன் வந்து சேரும் வரை…
தேகம் போல் நான் கிடப்பேன்…
தேவி வந்து சேர்ந்துவிட்டால்…
ஆவி கொண்டு நான் நடப்பேன்…

ஆண் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே…
வானம் விட்டு வாராயோ…

ஆண் : விண்ணிலே பாதை இல்லை…
உன்னை தொட ஏணி இல்லை…

ஆண் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே…
வானம் விட்டு வாராயோ…
வண்ணம் கொண்ட வெண்ணிலவே…


Notes : Vannam Konda Vennilave Song Lyrics in Tamil. This Song from Sigaram (1991). Song Lyrics penned by Vairamuthu. வண்ணம் கொண்ட பாடல் வரிகள்.


agaram-ippo-sigaram-aachu-song-lyrics

அகரம் இப்போ சிகரம் ஆச்சு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ்எஸ். பி. பாலசுப்ரமணியம்சிகரம்

Agaram Ippo Sigaram Aachu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

ஆண் : சங்கீதமே சந்நிதி…
சந்தோசம் சொல்லும் சங்கதி…
சங்கீதமே சந்நிதி…
சந்தோசம் சொல்லும் சங்கதி…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

BGM

ஆண் : கார்காலம் வந்தால் என்ன…
கடும் கோடை வந்தால் என்ன…
மழை வெள்ளம் போகும்…
கரை ரெண்டும் வாழும்…

ஆண் : காலங்கள் போனால் என்ன…
கோலங்கள் போனால் என்ன…
பொய் அன்பு போகும்…
மெய் அன்பு வாழும்…

ஆண் : அன்புக்கு உருவம் இல்லை…
பாசத்தில் பருவம் இல்லை…
வானோடு முடிவும் இல்லை…
வாழ்வோடு விடையும் இல்லை…

ஆண் : இன்றென்பது உண்மையே…
நம்பிக்கை உங்கள் கையிலே…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

BGM

ஆண் : தண்ணீரில் மீன்கள் வாழும்…
கண்ணீரில் காதல் வாழும்…
ஊடல்கள் எல்லாம் தேடல்கள்தானே…

ஆண் : பசியாற பார்வை போதும்…
பரிமாற வார்த்தை போதும்…
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்…

ஆண் : தலை சாய்க்க இடமா இல்லை…
தலை கோத விரலா இல்லை…
இளங்காற்று வரவா இல்லை…
இளைப்பாறு பரவா இல்லை…

ஆண் : நம்பிக்கையே நல்லது…
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

ஆண் : சங்கீதமே சந்நிதி…
சந்தோசம் சொல்லும் சங்கதி…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

BGM


Notes : Agaram Ippo Sigaram Aachu Song Lyrics in Tamil. This Song from Sigaram (1991). Song Lyrics penned by Vairamuthu. அகரம் இப்போ சிகரம் ஆச்சு பாடல் வரிகள்.