Category Archives: தர்மத்தின் தலைவன்

ஒத்தடி ஒத்தடி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & சுனந்தாஇளையராஜாதர்மத்தின் தலைவன்

Othadi Othadi Song Lyrics in Tamil


BGM

பெண் : நீல விழி ஓரம் நிலவே காயும்…
இசைதான் இங்கே நதியாய் பாயும்…
ரசித்தால் போதும் மடிமேல் சாயும்…
பாவை நான்…

BGM

ஆண் : ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி…
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மடி…

ஆண் : பட்டணம் அறிஞ்ச போக்கிரி…
அடி பட்டியம் தெரிஞ்ச பக்கிரி…

ஆண் : அட என்னோட மோதாம வாமா பாப்பம்மா…
ஆடி பாப்போமா…
வேட்டுதான் போட்டுதான் பாப்போமா…

ஆண் : அட வாமா பாப்பம்மா…
ஆடி பாப்போமா…
வேட்டுதான் போட்டுதான் பாப்போமா…

ஆண் : ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி…

BGM

ஆண் : வில்லாதி வில்லனடி…
எனக்கு இணையா கில்லாடி இல்லையடி…
அட வெச்சாலும் வச்சானடி…
உனக்கு சரியாகத்தான் மச்சானும் ஒத்த வெடி…

ஆண் : சொல்லனும் வந்தனம்…
இல்ல மூலையில் குந்தனும்…

ஆண் : மக்கு போல் நிக்குற செக்கு போல் சுத்துற…
சிக்கலில் சிக்கலாமா…
அட எப்பவும் துள்ளுற சொப்பன சுந்தரி…
இப்படி முழிக்கலாமா…

ஆண் : சக்கர கட்டியே சந்தன தொட்டியே…
அஞ்சாத ஆண்சிங்கம் நானடி…

ஆண் : ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி…
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மடி…

ஆண் : பட்டணம் அறிஞ்ச போக்கிரி…
அடி பட்டியம் தெரிஞ்ச பக்கிரி…

ஆண் : அட என்னோட மோதாம வாமா பாப்பம்மா…
ஆடி பாப்போமா…
வேட்டு தான் போட்டுதான் பாப்போமா…

ஆண் : அட வாமா பாப்பம்மா…
ஆடி பாப்போமா…
வேட்டுதான் போட்டுதான் பாப்போமா…

ஆண் : ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மாடி…

BGM

ஆண் : தெம்மாங்கு பாடட்டுமா மயிலே ஜதியோடு நான்…
தில்லானா ஆடட்டுமா…
அட இந்தாடி டப்பாங்குத்து இதுல பெரிய ஆளு நான்…
சும்மா நீ வாய பொத்து…

ஆண் : வித்தையா கத்தவன்…
அடி பேருதான் பெத்தவன்…
பத்து பேர் மத்தியில் சொத்தையா சொல்லையா…
என்னை நீ என்னலாமா…

ஆண் : அட சட்டிய தொட்டதும் கையிலே சுட்டதும்…
சந்தியில் நிக்கலாமா…
என்னடி சங்கதி அம்மணி உங்கதி…
பின்னாலே என்னாகும் பாரடடி…

ஆண் : ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி…
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மடி…

ஆண் : பட்டணம் அறிஞ்ச போக்கிரி…
அடி பட்டியம் தெரிஞ்ச பக்கிரி…

ஆண் : அட என்னோட மோதாம வாமா பாப்பம்மா…
ஆடி பாப்போமா…
வேட்டுதான் போட்டுதான் பாப்போமா…

ஆண் : அட வாமா பாப்பம்மா…
ஆடி பாப்போமா…
வேட்டுதான் போட்டுதான் பாப்போமா…

ஆண் : அடி ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி…


Notes : Othadi Othadi Song Lyrics in Tamil. This Song from Dharmathin Thalaivan (1988). Song Lyrics penned by Vaali. ஒத்தடி ஒத்தடி பாடல் வரிகள்.


முத்தமிழ் கவியே வருக

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ்.சித்ராஇளையராஜாதர்மத்தின் தலைவன்

Muthamizh Kaviyae Song Lyrics in Tamil


BGM

பெண் : முத்தமிழ் கவியே வருக…
முக்கனி சுவையே வருக…
முத்தமிழ் கவியே வருக…
முக்கனிச் சுவையே வருக…
காதலென்னும் தீவினிலே…
காலங்கள் நாம் வாழ நாள் வந்தது…

ஆண் : முத்தமிழ் கலையே வருக…
முக்கனிச் சுவையும் தருக…
காதல் என்னும் தீவினிலே…
காலங்கள் நாம் வாழ நாள் வந்தது…

ஆண் : முத்தமிழ் கலையே வருக…
முக்கனிச் சுவையும் தருக… ஓ…

BGM

பெண் : காதல் தேவன் மார்பில் ஆடும் பூமாலை நான்…
காவல் கொண்ட மன்னன் நெஞ்சில் நான் ஆடுவேன்…

ஆண் : கண்கள் மீது ஜாடை நூறு நான் பார்க்கிறேன்…
கவிதை நூறு தானே வந்து நான் பாடினேன்…

பெண் : மூடாத தோட்டத்தில் ரோஜாக்கள் ஆட…
என்னோடு நீ ஆட ஓடோடி வா…

ஆண் : காணாத சொர்க்கங்கள் நான் காணத்தானே…
பூந்தென்றல் தேர் ஏறி நீ ஓடி வா…

பெண் : காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்…
இன்பம் கோடி… ஆஆ…

ஆண் : ஆ… முத்தமிழ் கலையே வருக…
முக்கனிச் சுவையும் தருக… ஓ…

BGM

ஆண் : தங்கம் கொள்ளும் தமிழ் காதல் சிந்து…
கொஞ்சம் கெஞ்சும் வண்ணம் ஒரு ராகம் சிந்து…

பெண் : நெஞ்சம் எந்தன் மஞ்சம் அதில் அன்பை தந்து…
தந்தோம் தந்தோம் என்று புது தாளம் சிந்து…

ஆண் : வார்த்தைக்குள் அடங்காத ரசமான சரசம்…
நான் ஆட ஒரு மேடை நீ கொண்டு வா…

பெண் : என்றைக்கும் விளங்காத பல கோடி இன்பம்…
யாருக்கும் தெரியாமல் நீ சொல்ல வா…

ஆண் : காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்…
இன்பம் கோடி… ஆஆ…

பெண் : ஆஆ… முத்தமிழ் கவியே வருக…
முக்கனி சுவையே வருக…

ஆண் : காதலென்னும் தீவினிலே…
காலங்கள் நாம் வாழ நாள் வந்தது…

பெண் : முத்தமிழ் கவியே வருக…
முக்கனி சுவையே வருக…

ஆண் : முத்தமிழ் கலையே வருக…
முக்கனி சுவையும் வருக… ஓ…


Notes : Muthamizh Kaviyae Song Lyrics in Tamil. This Song from Dharmathin Thalaivan (1988). Song Lyrics penned by Panju Arunachalam. முத்தமிழ் கவியே வருக பாடல் வரிகள்.


thenmadurai-vaigainadhi-song-lyrics-in-tamil

தென்மதுரை வைகை நதி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா & மலேசியா வாசுதேவன்இளையராஜாதர்மத்தின் தலைவன்

Thenmadurai Vaigainadhi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தென்மதுரை வைகை நதி…
தினம் பாடும் தமிழ் பாட்டு…
தென்மதுரை வைகை நதி…
தினம் பாடும் தமிழ் பாட்டு…

ஆண் : தேய்கின்றது…
தேய்கின்றது பொன் மாலை நிலா…
தேயாதது நம் ஆசை நிலா…
இது வானம் போலே வாழும் பாசம்…

ஆண் : தென்மதுரை வைகை நதி…
தினம் பாடும் தமிழ் பாட்டு…
தென்மதுரை வைகை நதி…

BGM

ஆண் : நம்மை போல நெஞ்சம் கொண்ட…
அண்ணன் தம்பி யாரும் இல்லை…
தன்னை போல என்னை என்னும்…
நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை…

ஆண் : தம்பி உந்தன் உள்ளம்தானே…
அண்ணன் என்றும் வாழும் எல்லை…
ஒன்றாய் காணும் வானம் எங்கும்…
ரெண்டாய் மாற நியாயம் இல்லை…

ஆண் : கண்ணோடு தான் உன் வண்ணம்…
நெஞ்சோடு தான் உன் எண்ணம்…
முன்னேறு நீ மென்மேலும்…
என் ஆசைகள் கை கூடும்…
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க…

ஆண் : தென்மதுரை வைகை நதி…
தினம் பாடும் தமிழ் பாட்டு…
தென்மதுரை வைகை நதி…

BGM

ஆண் : நெஞ்சில் என்னை நாளும் வைத்து…
கொஞ்சும் வண்ண தோகை ஒன்று…
மஞ்சள் மாலை மேளம் யாவும்…
கண்ணில் காணும் காலம் உண்டு…

ஆண் : பூவை சூடி பொட்டும் வைக்க…
மாமன் உண்டு மானே மானே…
உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட…
கள்வன் இங்கு நானே நானே…

ஆண் : உன்னோடுதான் என் ஜீவன்…
ஒன்றாக்கினான் நம் தேவன்…
நீ தானம்மா என் தாரம்…
மாறாதம்மா என் நாளும்…
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க…

ஆண் : தென்மதுரை வைகை நதி…
தினம் பாடும் தமிழ் பாட்டு…
தென்மதுரை வைகை நதி…
தினம் பாடும் தமிழ் பாட்டு…

பெண் : தேய்கின்றது பொன் மாலை நிலா…
தேய்கின்றது பொன் மாலை நிலா…
தேயாதது நம் ஆசை நிலா…

ஆண் : இது வானம் போலே வாழும் பாசம்…

ஆண் & பெண் : தென்மதுரை வைகை நதி…
தினம் பாடும் தமிழ் பாட்டு…
தென்மதுரை வைகை நதி…


Notes : Thenmadurai Vaigainadhi Song Lyrics in Tamil. This Song from Dharmathin Thalaivan (1988). Song Lyrics penned by Vaali. தென்மதுரை வைகை நதி பாடல் வரிகள்.