Category Archives: வருஷம் 16

வருஷம் 16 – Varusham Padhinaaru (1989)

பழமுதிர்ச் சோலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாவருஷம் 16

Pazhamuthir Cholai Song Lyrics in Tamil


BGM

ஆண் : பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்…
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்…

ஆண் : நான்தான் அதன் ராகம் தாளமும்…
கேட்டேன் தினம் காலை மாலையும்…
நான்தான் அதன் ராகம் தாளமும்…
கேட்டேன் தினம் காலை மாலையும்…
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்…

ஆண் : பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்…
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்…

BGM

ஆண் : தூரத்தில் போகின்ற மேகங்களே…
தூரல்கள் போடுங்கள் பூமியிலே…
வேர் கொண்ட பூஞ்சோலை நீர் கொண்டு ஆட…

ஆண் : ஏரியில் மீன் கொத்தும் நாரைகளே…
இறகுகள் எனக்கில்லை தாருங்களே…
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட…

ஆண் : பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்…
பனி மலை மேல் நாம் மிதந்திட வேண்டும்…
ஏதோ ஒரு போதைமனம் கொண்டாடுதே…

ஆண் : பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்…
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்…

BGM

ஆண் : பந்தங்கள் யாவும் தொடர்க்கதை போல்…
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்…

BGM

ஆண் : நூலிழை போல் இங்கு நெருங்கிய இதயங்கள்…
பாலுடன் நெய்யென கலந்திடும் நாள்…

BGM

ஆண் : தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி…
சிந்தை இனித்திட உறவுகள் மேவி…
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே…
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே…

ஆண் : நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை…

BGM

ஆண் : வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை…

BGM

ஆண் : நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை…
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை…

ஆண் : இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க…
இடை விடாது மனமொரு மகிழ்ச்சியில் திளைத்திட…

ஆண் : பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்…
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்…

ஆண் : நான்தான் அதன் ராகம் தாளமும்…
கேட்டேன் தினம் காலை மாலையும்…
நான்தான் அதன் ராகம் தாளமும்…
கேட்டேன் தினம் காலை மாலையும்…
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்…

ஆண் : பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்…
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்…


Notes : Pazhamuthir Cholai Song Lyrics in Tamil. This Song from Varusham 16 (1989). Song Lyrics penned by Vaali. பழமுதிர்ச் சோலை பாடல் வரிகள்.


கரையாத மனமும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & கே. எஸ். சித்ராஇளையராஜாவருஷம் 16

Karayatha Manamum Song Lyrics in Tamil


ஆண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு…

ஆண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…

பெண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு…

பெண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…

BGM

ஆண் : அருள் மழை வார்த்திடும் மா முகிலே…
அருள் மழை வார்த்திடும் மா முகிலே…
அடைக்கலம் உந்தன் பூங்கழலே…

பெண் : இருள் வழி மேவிய சேய் எனக்கு…
இணையடிதானே கை விளக்கு…

ஆண் : தாமரைத் தாள் தொழுதேன் அழுதேன்…
பெண் : நாளொரு திசையாக நான் அலைந்தேன்…
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு…

ஆண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…
பெண் : தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு…

ஆண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…

BGM

ஆண் : மூவரும் தேவரும் யாவரும் போற்றிடும்…
காவல் தெய்வமும் நீயே…

BGM

ஆண் : பூ விழி பார்த்திட புன்னகை வார்த்திட…
கூடிட நீ வருவாயே…

BGM

பெண் : பாவலர் நாவிலும் பங்கையர் பூவிலும்…
மேவிடும் ஆனந்தத் தேனே…

BGM

பெண் : சேவடி நாடிடும் சிந்துகள் பாடிடும்…
பாவையும் உன்னடிதானே…

ஆண் : உனதருள் வேண்டி இசைப்பவன் நானே…
பெண் : அனல் மெழுகாக உருகி நின்றேனே…

ஆண் : இங்கே நின் மனம் என்ன…
கல்லோ கற்ச்சிலையோ…

பெண் : இங்கே நான் தினம் வாட சரியோ சம்மதமோ…
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு…

ஆண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு…

பெண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…

BGM


Notes : Karayatha Manamum Song Lyrics in Tamil. This Song from Varusham 16 (1989). Song Lyrics penned by Vaali. கரையாத மனமும் பாடல் வரிகள்.


கங்கைக்கரை மன்னனடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாவருஷம் 16

Gangai Karai Mannanadi Song Lyrics in Tamil


ஆண் : கண்மணியே ராதை எனும்…
காதலியே நான் விரும்பும்…
பெண்மணியே ஆடை கட்டும் பைங்கிளியே…
கண்ணன் வந்தான் பாட்டிசைக்க…
கவலைகளை விட்டு விடு…
காற்சதங்கை சத்தமிட மேடையிலே வட்டமிடு…

BGM

ஆண் : கங்கைக்கரை மன்னனடி…
கண்ணன் மலர்க் கண்ணனடி…
வங்கக்கடல் வண்ணனடி…
உள்ளம் கவர் கள்வனடி…

ஆண் : நெஞ்சில் எழும் அலைகளிலே…
நீச்சல் இடும் இளைஞனடி…
வஞ்சிக் கொடி மடியினிலே…
மஞ்சம் இடும் தலைவனடி…

ஆண் : உள்ளத்தை எடுத்தேன்…
உன் கையில் கொடுத்தேன்…
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்…

ஆண் : கங்கைக்கரை மன்னனடி…
கண்ணன் மலர்க் கண்ணனடி…
வங்கக்கடல் வண்ணனடி…
உள்ளம் கவர் கள்வனடி…

BGM

ஆண் : தத்தும் சிறு தாமரைப் பாதங்கள்…
நடைதான் பயில…
கத்தும் கடல் நீரலை போல் இங்கு…
குழல்தான் நெளிய…

ஆண் : இல்லை என யாவரும் கூறிடும்…
இடைதான் ஒடிய…
இன்பம் என என் விழி பார்த்தது…
இமைதான் விரிய…

ஆண் : காற்சதங்கை பாடுதடி…
நாள் வரத்தான் வாடுதடி…
காற்சதங்கை பாடுதடி…
நாள் வரத்தான் வாடுதடி…

ஆண் : முன்னம் பல ஜென்மம் வழியே…
உண்டானது உன் உறவே…
இன்னும் என்னைத் தொட்டுத் தொடர்ந்தே…
பந்தாடுது உன் நினைவே…
உயிர் வாழும் பெண்ணா வா வா கண்ணா…

ஆண் : கங்கைக்கரை மன்னனடி…
கண்ணன் மலர்க் கண்ணனடி…
வங்கக்கடல் வண்ணனடி…
உள்ளம் கவர் கள்வனடி…

ஆண் : நெஞ்சில் எழும் அலைகளிலே…
நீச்சல் இடும் இளைஞனடி… …
வஞ்சிக் கொடி மடியினிலே
மஞ்சம் இடும் தலைவனடி…

ஆண் : உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன்…
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்…

ஆண் : கங்கைக்கரை மன்னனடி…
கண்ணன் மலர்க் கண்ணனடி…
வங்கக்கடல் வண்ணனடி…
உள்ளம் கவர் கள்வனடி…

BGM

ஆண் : சந்தம் தரும் ஆடலும் பாடலும்…
சுகமாய் மலரும்…
சுட்டும் விழிப் பார்வையில்…
ஆயிரம் நிலவாய் பொழியும்…

ஆண் : அங்கம் ஒரு ஆலிலை போல்…
இங்கு நடனம் புரியும்…
அன்பே என மாதவன் தோள் தொட…
நெடுநாள் உருகும்…

ஆண் : காத்திருப்பான் கை அணைக்க…
காதலியாள் மெய் அணைக்க…
காத்திருப்பான் கை அணைக்க…
காதலியாள் மெய் அணைக்க…

ஆண் : கண்ணன் மனம் அந்தப்புரமே…
வந்தாடிடும் முத்துச் சரமே…
அச்சம் விடும் பச்சைக் கிளியே…
அவன் தாள் தினம் நத்தும் கனியே…
நாளும் ஓதும் காதல் வேதம்…

ஆண் : கங்கைக்கரை மன்னனடி…
கண்ணன் மலர்க் கண்ணனடி…
வங்கக்கடல் வண்ணனடி…
உள்ளம் கவர் கள்வனடி…

ஆண் : நெஞ்சில் எழும் அலைகளிலே…
நீச்சல் இடும் இளைஞனடி…
வஞ்சிக் கொடி மடியினிலே…
மஞ்சம் இடும் தலைவனடி…

ஆண் : உள்ளத்தை எடுத்தேன்…
உன் கையில் கொடுத்தேன்…
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்…

ஆண் : உள்ளத்தை எடுத்தேன்…
உன் கையில் கொடுத்தேன்…
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்…

BGM


Notes : Gangai Karai Mannanadi Song Lyrics in Tamil. This Song from Varusham 16 (1989). Song Lyrics penned by Vaali. கங்கைக்கரை மன்னனடி பாடல் வரிகள்.


பூ பூக்கும் மாசம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. சுசீலாஇளையராஜாவருஷம் 16

Poo Pookum Masam Song Lyrics in Tamil


பெண் : பொங்கல பொங்கல வைக்க…
மஞ்சள மஞ்சள எடு…
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி…

குழு : பொங்கல பொங்கல வைக்க…
மஞ்சள மஞ்சள எடு…
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி…

பெண் : புஞ்சையும் நஞ்சையும்…
இந்த பூமியும் சாமியும் இனி…
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி…

குழு : புஞ்சையும் நஞ்சையும்…
இந்த பூமியும் சாமியும் இனி…
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி…

பெண் : பூ பூக்கும் மாசம் தை மாசம்…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்…

பெண் : சின்னக் கிளிகள் பறந்து ஆட…
சிந்துக் கவிகள் குயில்கள் பாட…

குழு : சின்னக் கிளிகள் பறந்து ஆட…
சிந்துக் கவிகள் குயில்கள் பாட…

பெண் : புது ராகம் புதுத் தாளம்…
ஒன்று சேரும் நேரம் இந்நேரம்…

பெண் : பூ பூக்கும் மாசம் தை மாசம்…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்…

குழு : பொங்கல பொங்கல வைக்க…
மஞ்சள மஞ்சள எடு…
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி…

குழு : புஞ்சையும் நஞ்சையும்…
இந்த பூமியும் சாமியும் இனி…
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி…

BGM

பெண் : வாய்க்காலையும் வயல் காட்டையும்…
படைத்தாள் எனக்கென கிராம தேவதை…
தெம்மாங்கையும் தெருக்கூத்தையும்…
நினைத்தால் இனித்திடும் வாழும் நாள் வரை…

பெண் : குழந்தைகள் கூட…
குமரியும் ஆட…
மந்தமாருதம் வீசுது…
மலயமாருதம் பாடுது…

BGM

பெண் : பூ பூக்கும் மாசம் தை மாசம்…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்…

BGM

பெண் : நான் தூங்கியே நாள் ஆனது…
அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது…
பால் மேனியும் நூலானது…
அது ஏன் அதுக்கொரு தாகம் வந்தது…

பெண் : மனதினில் கோடி…
நினைவுகள் ஓடி…
மன்னன் யார் எனத் தேடுதோ…
உன்னைப் பார்த்ததும் கூடுதோ…

BGM

பெண் : பூ பூக்கும் மாசம் தை மாசம்…
குழு : ம்ம்ம்…ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்…

பெண் : சின்னக் கிளிகள் பறந்து ஆட…
சிந்துக் கவிகள் குயில்கள் பாட…

குழு : சின்னக் கிளிகள் பறந்து ஆட…
சிந்துக் கவிகள் குயில்கள் பாட…

பெண் : புது ராகம் புதுத் தாளம்…
ஒன்று சேரும் நேரம் இந்நேரம்…

பெண் : பூ பூக்கும் மாசம் தை மாசம்…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்…

குழு : பொங்கல பொங்கல வைக்க…
மஞ்சள மஞ்சள எடு…
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி…

குழு : புஞ்சையும் நஞ்சையும்…
இந்த பூமியும் சாமியும் இனி…
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி…


Notes : Poo Pookum Masam Song Lyrics in Tamil. This Song from Varusham 16 (1989). Song Lyrics penned by Vaali. பூ பூக்கும் மாசம் பாடல் வரிகள்.