பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.ஜே. யேசுதாஸ் | இளையராஜா | வருஷம் 16 |
Gangai Karai Mannanadi Song Lyrics in Tamil
ஆண் : கண்மணியே ராதை எனும்…
காதலியே நான் விரும்பும்…
பெண்மணியே ஆடை கட்டும் பைங்கிளியே…
கண்ணன் வந்தான் பாட்டிசைக்க…
கவலைகளை விட்டு விடு…
காற்சதங்கை சத்தமிட மேடையிலே வட்டமிடு…
—BGM—
ஆண் : கங்கைக்கரை மன்னனடி…
கண்ணன் மலர்க் கண்ணனடி…
வங்கக்கடல் வண்ணனடி…
உள்ளம் கவர் கள்வனடி…
ஆண் : நெஞ்சில் எழும் அலைகளிலே…
நீச்சல் இடும் இளைஞனடி…
வஞ்சிக் கொடி மடியினிலே…
மஞ்சம் இடும் தலைவனடி…
ஆண் : உள்ளத்தை எடுத்தேன்…
உன் கையில் கொடுத்தேன்…
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்…
ஆண் : கங்கைக்கரை மன்னனடி…
கண்ணன் மலர்க் கண்ணனடி…
வங்கக்கடல் வண்ணனடி…
உள்ளம் கவர் கள்வனடி…
—BGM—
ஆண் : தத்தும் சிறு தாமரைப் பாதங்கள்…
நடைதான் பயில…
கத்தும் கடல் நீரலை போல் இங்கு…
குழல்தான் நெளிய…
ஆண் : இல்லை என யாவரும் கூறிடும்…
இடைதான் ஒடிய…
இன்பம் என என் விழி பார்த்தது…
இமைதான் விரிய…
ஆண் : காற்சதங்கை பாடுதடி…
நாள் வரத்தான் வாடுதடி…
காற்சதங்கை பாடுதடி…
நாள் வரத்தான் வாடுதடி…
ஆண் : முன்னம் பல ஜென்மம் வழியே…
உண்டானது உன் உறவே…
இன்னும் என்னைத் தொட்டுத் தொடர்ந்தே…
பந்தாடுது உன் நினைவே…
உயிர் வாழும் பெண்ணா வா வா கண்ணா…
ஆண் : கங்கைக்கரை மன்னனடி…
கண்ணன் மலர்க் கண்ணனடி…
வங்கக்கடல் வண்ணனடி…
உள்ளம் கவர் கள்வனடி…
ஆண் : நெஞ்சில் எழும் அலைகளிலே…
நீச்சல் இடும் இளைஞனடி… …
வஞ்சிக் கொடி மடியினிலே
மஞ்சம் இடும் தலைவனடி…
ஆண் : உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன்…
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்…
ஆண் : கங்கைக்கரை மன்னனடி…
கண்ணன் மலர்க் கண்ணனடி…
வங்கக்கடல் வண்ணனடி…
உள்ளம் கவர் கள்வனடி…
—BGM—
ஆண் : சந்தம் தரும் ஆடலும் பாடலும்…
சுகமாய் மலரும்…
சுட்டும் விழிப் பார்வையில்…
ஆயிரம் நிலவாய் பொழியும்…
ஆண் : அங்கம் ஒரு ஆலிலை போல்…
இங்கு நடனம் புரியும்…
அன்பே என மாதவன் தோள் தொட…
நெடுநாள் உருகும்…
ஆண் : காத்திருப்பான் கை அணைக்க…
காதலியாள் மெய் அணைக்க…
காத்திருப்பான் கை அணைக்க…
காதலியாள் மெய் அணைக்க…
ஆண் : கண்ணன் மனம் அந்தப்புரமே…
வந்தாடிடும் முத்துச் சரமே…
அச்சம் விடும் பச்சைக் கிளியே…
அவன் தாள் தினம் நத்தும் கனியே…
நாளும் ஓதும் காதல் வேதம்…
ஆண் : கங்கைக்கரை மன்னனடி…
கண்ணன் மலர்க் கண்ணனடி…
வங்கக்கடல் வண்ணனடி…
உள்ளம் கவர் கள்வனடி…
ஆண் : நெஞ்சில் எழும் அலைகளிலே…
நீச்சல் இடும் இளைஞனடி…
வஞ்சிக் கொடி மடியினிலே…
மஞ்சம் இடும் தலைவனடி…
ஆண் : உள்ளத்தை எடுத்தேன்…
உன் கையில் கொடுத்தேன்…
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்…
ஆண் : உள்ளத்தை எடுத்தேன்…
உன் கையில் கொடுத்தேன்…
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்…
—BGM—
Notes : Gangai Karai Mannanadi Song Lyrics in Tamil. This Song from Varusham 16 (1989). Song Lyrics penned by Vaali. கங்கைக்கரை மன்னனடி பாடல் வரிகள்.