பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | ஆவாரம் பூ |
Adukku Malli Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…
பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…
ஆண் : அச்சாரம் அப்பா தந்த முத்தாரம்…
பெண் : அதை அடகு வைக்காம…
காத்து வந்தேன் இந்நாளா…
தள்ளி விலகி நிக்காம…
தாளம் தட்டு கண்ணாளா…
ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
பெண் : மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…
—BGM—
ஆண் : வெற்றி மாலை போட்டானய்யா…
கெட்டிக்கார ராசா…
முத்துப் போல கண்டான் அங்கே…
மொட்டுப் போல ரோசா…
பெண் : சொந்தம் இங்கே வந்தாளுன்னு…
சொன்னான் அவன் லேசா…
காணாதத கண்டா அப்பா…
ஆனான் அய்யா பாசா…
ஆண் : என்னாச்சு இந்த மனம் பொன்னாச்சு…
அட எப்போதோ ரெண்டும் மட்டும் ஒண்ணாச்சு…
பெண் : அட வாய்யா மச்சானே…
யோகம் இப்போ வந்தாச்சு…
ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
பெண் : மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…
—BGM—
பெண் : மெட்டுப் போடும் செந்தாழம்பூ…
கெட்டிமேளம் போட…
எட்டிப் பாக்கும் ஆவாரம்பூ…
வெக்கத்தோடு ஓட…
ஆண் : அக்கம் பக்கம் சொல்லாமத்தான்…
உள்ளுக்குள்ளே வாட…
சுத்தும் மனம் நில்லாமத்தான்…
கெட்டானய்யா கூட…
பெண் : சந்தோஷம் தங்கத்துக்கு சந்தோஷம்…
இப்போதும் கிட்டவரும் எப்போதும்…
ஆண் : அட வாய்யா ராசாவே…
அய்யா இப்ப உன் நேரம்…
பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…
ஆண் : அச்சாரம் அப்பா தந்த முத்தாரம்…
பெண் : அதை அடகு வைக்காம…
காத்து வந்தேன் இந்நாளா…
தள்ளி விலகி நிக்காம…
தாளம் தட்டு கண்ணாளா…
ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…
பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…
Notes : Adukku Malli Song Lyrics in Tamil. This Song from Aavarampoo (1992). Song Lyrics penned by Pulamaipithan. அடுக்கு மல்லி பாடல் வரிகள்.