ஆலோலம் பாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜாஇளையராஜாஆவாரம் பூ

Alolam Paadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே…
அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே…
தனியானால் என்ன துணை இங்கே…
நான் பாடும் பாட்டுண்டு…

ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே…
இனி துன்பம் ஏன் இங்கு…

ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே…
அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே…

BGM

ஆண் : ஆஆ… மண்ணுலகில் வந்தோர்க்கெல்லாம்…
இன்பம் துன்பம் என்றும் உண்டு…
தாய் இழந்த துன்பம் போலே…
துன்பம் அது ஒன்றுமில்லை…

ஆண் : பூமி என்ற தாயும் உண்டு…
வானம் என்ற தந்தை உண்டு…
நீங்கிடாத சொந்தம் என்று…
நீரும் காற்றும் எங்கும் உண்டு…

ஆண் : பூபாளம் பாடும் காலை வந்து வரவேற்கும்…
தாய் இன்றி நின்ற பிள்ளை…
தன்னை என்றும் காக்கும்…
நீ காணும் எல்லாம் உன் சொந்தம்…

ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே…
அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே…
தனியானால் என்ன துணை இங்கே…
நான் பாடும் பாட்டுண்டு…

ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே…
இனி துன்பம் ஏன் இங்கு…

ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே…
அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே…

BGM

ஆண் : சோகம் எதுவும் சுமையே இல்லை…
சுகங்கள் கூட சுகமே இல்லை…
ஆதரவை தந்தால் கூட…
அதையும் இங்கு அறிந்தாய் இல்லை…

ஆண் : வந்ததுண்டு போனதுண்டு…
உன் கணக்கில் ரெண்டும் ஒன்று…
வரவும் உண்டு செலவும் உண்டு…
உன் கணக்கில் வரவே உண்டு…

ஆண் : ஊர் எங்கள் பிள்ளை என்று…
இன்று சொல்லக் கூடும்…
உலகம் உந்தன் சொந்தமென்று…
உந்தன் உள்ளம் பாடும்…
நீ யாரோ அன்பே அமுதே…

ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே…
அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே…
தனியானால் என்ன துணை இங்கே…
நான் பாடும் பாட்டுண்டு…

ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே…
இனி துன்பம் ஏன் இங்கு…

ஆண் : ஆலோலம் பாடிஅசைந்தாடும் காற்றே…
அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே…


Notes : Alolam Paadi Song Lyrics in Tamil. This Song from Aavarampoo (1992). Song Lyrics penned by Gangai Amaran. ஆலோலம் பாடி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top