பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.ஜே. யேசுதாஸ் | இளையராஜா | வருஷம் 16 |
Pazhamuthir Cholai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்…
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்…
ஆண் : நான்தான் அதன் ராகம் தாளமும்…
கேட்டேன் தினம் காலை மாலையும்…
நான்தான் அதன் ராகம் தாளமும்…
கேட்டேன் தினம் காலை மாலையும்…
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்…
ஆண் : பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்…
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்…
—BGM—
ஆண் : தூரத்தில் போகின்ற மேகங்களே…
தூரல்கள் போடுங்கள் பூமியிலே…
வேர் கொண்ட பூஞ்சோலை நீர் கொண்டு ஆட…
ஆண் : ஏரியில் மீன் கொத்தும் நாரைகளே…
இறகுகள் எனக்கில்லை தாருங்களே…
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட…
ஆண் : பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்…
பனி மலை மேல் நாம் மிதந்திட வேண்டும்…
ஏதோ ஒரு போதைமனம் கொண்டாடுதே…
ஆண் : பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்…
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்…
—BGM—
ஆண் : பந்தங்கள் யாவும் தொடர்க்கதை போல்…
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்…
—BGM—
ஆண் : நூலிழை போல் இங்கு நெருங்கிய இதயங்கள்…
பாலுடன் நெய்யென கலந்திடும் நாள்…
—BGM—
ஆண் : தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி…
சிந்தை இனித்திட உறவுகள் மேவி…
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே…
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே…
ஆண் : நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை…
—BGM—
ஆண் : வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை…
—BGM—
ஆண் : நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை…
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை…
ஆண் : இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க…
இடை விடாது மனமொரு மகிழ்ச்சியில் திளைத்திட…
ஆண் : பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்…
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்…
ஆண் : நான்தான் அதன் ராகம் தாளமும்…
கேட்டேன் தினம் காலை மாலையும்…
நான்தான் அதன் ராகம் தாளமும்…
கேட்டேன் தினம் காலை மாலையும்…
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்…
ஆண் : பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்…
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்…
Notes : Pazhamuthir Cholai Song Lyrics in Tamil. This Song from Varusham 16 (1989). Song Lyrics penned by Vaali. பழமுதிர்ச் சோலை பாடல் வரிகள்.