என் சோக கதைய

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கிருஷ்ணமூர்த்திஇளையராஜாதூறல் நின்னுபோச்சு

Yen Soga Kadhaiye Song Lyrics in Tamil


ஆண் : என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
குழு : ஆமாம் தாய்க்குலமே…
ஆண் : நம்ம தாய்க்குலமே…
குழு : நம்ம தாய்க்குலமே…

ஆண் : அத கேட்டாதான் தாங்காதம்மா உங்க மனமே…
குழு : ஆமாம் உங்க மனமே…
ஆண் : ஆமாம் உங்க மனமே…

ஆண் : இந்த ஊரு பொண்ண நம்பி…
என் மனச தொறந்து வச்சேன்…
சொந்த ஊரு சாதி சனம்…
அத்தனையும் மறந்து வந்தேன்…

ஆண் : என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
குழு : ஆமாம் தாய்க்குலமே…
ஆண் : நம்ம தாய்க்குலமே…

BGM

ஆண் : ஆத்தங்கரை தோப்புக்குள்ள ஓடி விளையாண்டதும்…
யாருமில்லா சமயத்துல ஜாடையில சிரிச்சதும்…
தோப்புக்குள்ள வரப்புக்குள்ள தொட்டு தொட்டு புடிச்சதும்…
தூண்டில் போட்டு மீன சுட்டு ரெண்டு பேரும் கடிச்சதும்…

ஆண் : அத்தனையும் மறந்து புட்டு இவன் நெஞ்ச வதைக்கிறா…
அப்பனோட பேச்ச மட்டும் பெருசாக நினைக்கிறா…
ஆசை பட்ட மாப்பிள்ளையோ அம்போனு முழிக்கிறான்…
குழு : ஆசை பட்ட மாப்பிள்ளையோ அம்போனு முழிக்கிறான்…

ஆண் : என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
குழு : ஆமாம் தாய்க்குலமே…
ஆண் : நம்ம தாய்க்குலமே…
குழு : நம்ம தாய்க்குலமே…

ஆண் : அத கேட்டாதான் தாங்காதம்மா உங்க மனமே…
குழு : ஆமாம் உங்க மனமே…
ஆண் : ஆமாம் உங்க மனமே…

BGM

ஆண் : ஆசை வச்ச ஆம்பள நான் ஆண்டியா அலையுறேன்…
அல்லும்பகல் உன்ன எண்ணி தெருவுல திரியுறேன்…
நேத்து வர நடந்த எல்லாம் தெய்வம் செஞ்ச சோதனை…
நீ மட்டும் மனசு வெச்சா தீந்துவிடும் வேதனை…

ஆண் : நான் மட்டும் இல்லையினா சன்யாசம் வாங்கிருப்பான்…
காசி முதல் ராமேஸ்வரம் காவி கட்டி போயிருப்பான்…
மங்களத்த பெத்தவனே உன் மனச மாத்திக்கடா…
குழு : மங்களத்த பெத்தவனே உன் மனச மாத்திக்கடா…

ஆண் : என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
குழு : ஆமாம் தாய்க்குலமே…
ஆண் : நம்ம தாய்க்குலமே…
குழு : நம்ம தாய்க்குலமே…

ஆண் : அத கேட்டாதான் தாங்காதம்மா உங்க மனமே…
குழு : ஆமாம் உங்க மனமே…
ஆண் : ஆமாம் உங்க மனமே…

ஆண் : இந்த ஊரு பொண்ண நம்பி…
என் மனச தொறந்து வச்சேன்…
சொந்த ஊரு சாதி சனம்…
அத்தனையும் மறந்து வந்தேன்…

குழு : என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
ஆமாம் தாய்க்குலமே…
நம்ம தாய்க்குலமே…

குழு : அத கேட்டாதான் தாங்காதம்மா உங்க மனமே…
ஆமாம் உங்க மனமே…
ஆமாம் உங்க மனமே…


Notes : Yen Soga Kadhaiye Song Lyrics in Tamil. This Song from Thooral Ninnu Pochu (1982). Song Lyrics penned by Gangai Amaran. என் சோக கதைய பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top