பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் & கிருஷ்ணமூர்த்தி | இளையராஜா | தூறல் நின்னுபோச்சு |
Yen Soga Kadhaiye Song Lyrics in Tamil
ஆண் : என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
குழு : ஆமாம் தாய்க்குலமே…
ஆண் : நம்ம தாய்க்குலமே…
குழு : நம்ம தாய்க்குலமே…
ஆண் : அத கேட்டாதான் தாங்காதம்மா உங்க மனமே…
குழு : ஆமாம் உங்க மனமே…
ஆண் : ஆமாம் உங்க மனமே…
ஆண் : இந்த ஊரு பொண்ண நம்பி…
என் மனச தொறந்து வச்சேன்…
சொந்த ஊரு சாதி சனம்…
அத்தனையும் மறந்து வந்தேன்…
ஆண் : என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
குழு : ஆமாம் தாய்க்குலமே…
ஆண் : நம்ம தாய்க்குலமே…
—BGM—
ஆண் : ஆத்தங்கரை தோப்புக்குள்ள ஓடி விளையாண்டதும்…
யாருமில்லா சமயத்துல ஜாடையில சிரிச்சதும்…
தோப்புக்குள்ள வரப்புக்குள்ள தொட்டு தொட்டு புடிச்சதும்…
தூண்டில் போட்டு மீன சுட்டு ரெண்டு பேரும் கடிச்சதும்…
ஆண் : அத்தனையும் மறந்து புட்டு இவன் நெஞ்ச வதைக்கிறா…
அப்பனோட பேச்ச மட்டும் பெருசாக நினைக்கிறா…
ஆசை பட்ட மாப்பிள்ளையோ அம்போனு முழிக்கிறான்…
குழு : ஆசை பட்ட மாப்பிள்ளையோ அம்போனு முழிக்கிறான்…
ஆண் : என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
குழு : ஆமாம் தாய்க்குலமே…
ஆண் : நம்ம தாய்க்குலமே…
குழு : நம்ம தாய்க்குலமே…
ஆண் : அத கேட்டாதான் தாங்காதம்மா உங்க மனமே…
குழு : ஆமாம் உங்க மனமே…
ஆண் : ஆமாம் உங்க மனமே…
—BGM—
ஆண் : ஆசை வச்ச ஆம்பள நான் ஆண்டியா அலையுறேன்…
அல்லும்பகல் உன்ன எண்ணி தெருவுல திரியுறேன்…
நேத்து வர நடந்த எல்லாம் தெய்வம் செஞ்ச சோதனை…
நீ மட்டும் மனசு வெச்சா தீந்துவிடும் வேதனை…
ஆண் : நான் மட்டும் இல்லையினா சன்யாசம் வாங்கிருப்பான்…
காசி முதல் ராமேஸ்வரம் காவி கட்டி போயிருப்பான்…
மங்களத்த பெத்தவனே உன் மனச மாத்திக்கடா…
குழு : மங்களத்த பெத்தவனே உன் மனச மாத்திக்கடா…
ஆண் : என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
குழு : ஆமாம் தாய்க்குலமே…
ஆண் : நம்ம தாய்க்குலமே…
குழு : நம்ம தாய்க்குலமே…
ஆண் : அத கேட்டாதான் தாங்காதம்மா உங்க மனமே…
குழு : ஆமாம் உங்க மனமே…
ஆண் : ஆமாம் உங்க மனமே…
ஆண் : இந்த ஊரு பொண்ண நம்பி…
என் மனச தொறந்து வச்சேன்…
சொந்த ஊரு சாதி சனம்…
அத்தனையும் மறந்து வந்தேன்…
குழு : என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
ஆமாம் தாய்க்குலமே…
நம்ம தாய்க்குலமே…
குழு : அத கேட்டாதான் தாங்காதம்மா உங்க மனமே…
ஆமாம் உங்க மனமே…
ஆமாம் உங்க மனமே…
Notes : Yen Soga Kadhaiye Song Lyrics in Tamil. This Song from Thooral Ninnu Pochu (1982). Song Lyrics penned by Gangai Amaran. என் சோக கதைய பாடல் வரிகள்.