Category Archives: உனக்காகவே வாழ்கிறேன்

உனக்காகவே வாழ்கிறேன் – Unakkaagave Vaazhgiren (1986)

ஓ எந்தன் வாழ்விலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். ஜானகிஇளையராஜாஉனக்காகவே வாழ்கிறேன்

Oh Endhan Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓ எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா…
ஓ எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா…
இது இளம் கனவுகள் மலரும் நேரமே…
அதில் மன சிறகுகள் விரியும் காலமே…

பெண் : ஓ எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா…
ஓ எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா…

BGM

பெண் : பண்ணோடு நாளும் இணையும் தாளம்…
என்னோடு வாழ்வில் இணைந்தாய் நீயும்…
கல்யாண ராகம் விழிகள் பாடும்…
கால் போடும் கோலம் கவிதை ஆகும்…

பெண் : சந்தோச தென்றல் என் வாழ்வில் வீசும்…
என்னாசை நெஞ்சம் ஊர்கோலம் போகும்…
அன்பாலே அன்பாலே பண்பாடி உன் நினைவில் நகருவேன்…

பெண் : ஓ எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா…
ஓ எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா…

BGM

பெண் : செந்தாழம் பூவே கதைகள் பேசு…
சிங்கார காற்றே மெதுவாய் வீசு…
என் காதல் தேவன் அருகே வந்தான்…
எனக்காகதானே இதயம் என்றான்…

பெண் : நான் அந்த நேரம் நானாக இல்லை…
நாணங்களாலே வாய் பேசவில்லை…
விழாவே விழாவே பண்பாடல் கொண்டாடுது கிளியே…

பெண் : ஓ எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா…
ஓ எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா…
இது இளம் கனவுகள் மலரும் நேரமே…
அதில் மன சிறகுகள் விரியும் காலமே…

பெண் : ஓ எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா…
ஓ எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா…


Notes : Oh Endhan Song Lyrics in Tamil. This Song from Unakkaagave Vaazhgiren (1986). Song Lyrics penned by Muthulingam. ஓ எந்தன் வாழ்விலே பாடல் வரிகள்.


கண்கள் ரெண்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாஉனக்காகவே வாழ்கிறேன்

Kangal Rendum Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
காதல் என்னும் சொந்தம் கொள்ள…
மாலை ஆனதே வேளை ஆனதே…
மாலை ஆனதே வேளை ஆனதே…

ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
காதல் என்னும் சொந்தம் கொள்ள…
மாலை ஆனதே வேளை ஆனதே…
மாலை ஆனதே வேளை ஆனதே…

ஆண் : காதல் என்பது ஜீவனானது…
தேவி கைகளில் தேவனானது…

பெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
காதல் என்னும் சொந்தம் கொள்ள…
மாலை ஆனதே வேளை ஆனதே…
மாலை ஆனதே வேளை ஆனதே…

BGM

ஆண் : நாளும் எந்தன் வானம் தன்னில்…
காதல் என்னும் ஆனந்தம்…
நாளை என்ற காலம் தன்னில்…
கூடும் நாள் வரும்…

பெண் : தேகம் என்ற மேடை தன்னில்…
நாடகங்கள் ஆரம்பம்…
தேவியோடு தேவன் ஆடும்…
ஜீவ காவியம்…

ஆண் : கூடாமல் இனி நாளென்ன…
நீ இன்றி இனி நான் என்ன…
தூங்கவில்லையே தாங்கவில்லையே…
கூறவில்லையே சேரவில்லையே…

பெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
காதல் என்னும் சொந்தம் கொள்ள…
மாலை ஆனதே வேளை ஆனதே…
மாலை ஆனதே வேளை ஆனதே…

பெண் : காதல் என்பது ஜீவனானது…
தேவன் கைகளில் தேவியானது…

ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
பெண் : காதல் என்னும் சொந்தம் கொள்ள…
ஆண் : மாலை ஆனதே வேளை ஆனதே…
பெண் : மாலை ஆனதே வேளை ஆனதே…

BGM

ஆண் : தேவலோகம் தேவை இல்லை…
இங்கு அந்த சொர்க்கங்கள்…
தேவ பானம் தேவை இல்லை…
போதும் முத்தங்கள்…

பெண் : தேகம் என்ற மஞ்சம் தன்னில்…
மோகம் என்ற முத்துக்கள்…
மூழ்கி இன்று சேர்த்துக் கொண்டேன்…
காதல் சொத்துக்கள்…

ஆண் : ஏந்துங்கள் அதில் நீந்துங்கள்…
மோகங்கள் பரிமாறுங்கள்…
காணும் போதெல்லாம் கூட வேண்டுமே…
காதல் ராகமே பாட வேண்டுமே…

பெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
காதல் என்னும் சொந்தம் கொள்ள…
மாலை ஆனதே வேளை ஆனதே…
மாலை ஆனதே வேளை ஆனதே…

பெண் : காதல் என்பது ஜீவனானது…
தேவன் கைகளில் தேவியானது…

ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
காதல் என்னும் சொந்தம் கொள்ள…
மாலை ஆனதே வேளை ஆனதே…
மாலை ஆனதே வேளை ஆனதே…


Notes : Kangal Rendum Song Lyrics in Tamil. This Song from Unakkaagave Vaazhgiren (1986). Song Lyrics penned by Gangai Amaran. கண்கள் ரெண்டும் பாடல் வரிகள்.


கண்ணா உனைத் தேடுகிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஉனக்காகவே வாழ்கிறேன்

Kanna Unnai Thedukiren Song Lyrics in Tamil


பெண் : கண்ணா கண்ணா கண்ணா…

BGM

பெண் : கண்ணா உனைத் தேடுகிறேன் வா…
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா…

பெண் : உன்னோடுதான் வாழ்க்கை…
உள்ளே ஒரு வேட்கை…
கண்ணீர் இன்னும் ஓயவில்லை…
கன்னங்களும் காயவில்லை…

பெண் : கண்ணா உனைத் தேடுகிறேன் வா…
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா…

BGM

பெண் : ஏன் இந்த காதல் என்னும் எண்ணம் தடை போடுமா…
என்பாடல் கேட்ட பின்னும் இன்னும் பிடிவாதமா…

பெண் : என்ன நான் சொல்வது இன்று வந்த சோதனை…
மௌனமே கொல்வதால் தாங்கவில்லை வேதனை…

பெண் : உன்னை தேடி வந்தேன்…
உண்மை சொல்ல வேண்டும்…
இந்த சோகம் கொள்ள என்ன காரணம்…

பெண் : கண்ணா உனைத் தேடுகிறேன் வா…
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா…

BGM

ஆண் : கண்ணே உனை தேடுகிறேன் வா…
காதல் குயில் பாடுகிறேன் வா…

ஆண் : உன்னோடு தான் வாழ்க்கை…
உள்ளே ஒரு வேட்கை…
காதல் என்றும் தீர்வதில்லை…
கண்ணே இனி சோகம் இல்லை…

ஆண் : கண்ணே உனை தேடுகிறேன்…
வா காதல் குயில் பாடுகிறேன் வா…

BGM

ஆண் : சோகத்தின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா…
கங்கை நீர் காயகூடும் கண்ணீர் அது காயுமா…

பெண் : சோதனை நேரலாம் பாசம் என்ன போகுமா…
மேகங்கள் போய்விடும் வானம் என்ன போகுமா…

ஆண் : ஈரமுள்ள கண்ணில் தூக்கம் இல்லை பெண்ணே…
தோகை வந்த பின்னே சோகமில்லையே…

ஆண் : கண்ணே உனை தேடுகிறேன் வா…
காதல் குயில் பாடுகிறேன் வா…

பெண் : உன்னோடுதான் வாழ்க்கை…
உள்ளே ஒரு வேட்கை…

ஆண் : காதல் என்றும் தீர்வதில்லை…
கண்ணே இனி சோகம் இல்லை…

பெண் : கண்ணா உனைத் தேடுகிறேன் வா…
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா…

BGM


Notes : Kanna Unnai Thedukiren Song Lyrics in Tamil. This Song from Unakkaagave Vaazhgiren (1986). Song Lyrics penned by Vairamuthu. கண்ணா உனைத் தேடுகிறேன் பாடல் வரிகள்.


இளஞ்சோலை பூத்ததா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉனக்காகவே வாழ்கிறேன்

Ilanjolai Poothatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : இளஞ்சோலை பூத்ததா…
என்ன ஜாலம் வண்ண கோலம்…
இளஞ்சோலை பூத்ததா…
என்ன ஜாலம் வண்ண கோலம்…

ஆண் : ஒரு பூந்தென்றல் தாலாட்ட…
சில மேகங்கள் நீரூற்ற…

ஆண் : இளஞ்சோலை பூத்ததா…

BGM

ஆண் : எந்த சொந்தங்கள் யாரோடு என்று…
காலம்தான் சொல்லுமா… ஆஆ…
பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம்…
தேதிதான் சொல்லுமா…

ஆண் : சோலை எங்கும் சுகந்தம்…
மீண்டும் இங்கே வசந்தம்…

BGM

ஆண் : நெஞ்சம் ஏன்தான் மயங்கும்…
கண்கள் சொன்னால் விளங்கும்…
ஒரு மௌனம் தீர்ந்தது…
சுதியோடு சேர்ந்தது…

ஆண் : ஒரு தாளம் ராகம் சொல்ல…
சந்தம் பொங்கும் மெல்ல…
மாயமல்ல மந்திரம் அல்ல…

ஆண் : இளஞ்சோலை பூத்ததா…
இளஞ்சோலை பூத்ததா…

BGM

ஆண் : ஊமையாய் போன சங்கீதம் ஒன்று…
இன்றுதான் பேசுதோ… ஓ…
மேடை இல்லாமல் ஆடாத கால்கள்…
இன்றுதான் ஆடுதோ…

ஆண் : கண்ணில் என்ன கனவோ… ஓ…
நெஞ்சில் என்ன நினைவோ…

ஆண் : நம்மை யார்தான் கேட்ப்பது…
விதிதானே சேர்ப்பாது…

ஆண் : இந்த பாசம் பாவம் இல்லை…
நேசம் மோசம் இல்லை…
கங்கை என்றும் காய்வதுமில்லை…

ஆண் : இளஞ்சோலை பூத்ததா…
என்ன ஜாலம் வண்ண கோலம்…

ஆண் : ஒரு பூந்தென்றல் தாலாட்ட…
சில மேகங்கள் நீரூற்ற…

ஆண் : இளஞ்சோலை பூத்ததா…
என்ன ஜாலம் வண்ண கோலம்…


Notes : Ilanjolai Poothatha Song Lyrics in Tamil. This Song from Unakkaagave Vaazhgiren (1986). Song Lyrics penned by Vairamuthu. இளஞ்சோலை பூத்ததா பாடல் வரிகள்.