Category Archives: முதல் வசந்தம்

முதல் வசந்தம் – Muthal Vasantham (1986)

பொன்னி நதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாமுதல் வசந்தம்

Ponni Nadhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொங்கும் இன்பமே சொந்தமே…

BGM

ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொங்கும் இன்பமே சொந்தமே…
பூவின் வாசமே பூஜை நேரமே…
என் காதலின் சங்கமம் இன்றுதான்…

ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொங்கும் இன்பமே சொந்தமே…

BGM

ஆண் : பனியில் நனைந்த பூமேனி…
பருகத் துடிக்கும் நான் தேனீ…
அது தந்த சுகம் இன்ப சுகமே…
புது தங்க முகம் இந்த முகமே…

ஆண் : தெய்வம் சேர்த்த நம் கைகள்…
சொந்தம் பாடுது…
தென்றல் காற்றில் நம் பாடல்…
சொர்க்கம் தேடுது…
இது இளமை இனிமை புதுமை…

ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொங்கும் இன்பமே சொந்தமே…

BGM

ஆண் : தென்றல் இசைக்கின்ற சங்கீதம்…
சொல்லி வருவது உல்லாசம்…
மனம் தன்னில் சுகம் சொல்ல வந்தது…
மலர் தந்த மணம் கொண்டு வந்தது…

ஆண் : பொங்கும் ஆசை வேகங்கள்…
மங்கை தந்தது…
அங்கம் கூறும் மோகங்கள்…
தங்கம் போன்றது…
இனி இனிமையின் கனவுகள் உதயம்…

ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொங்கும் இன்பமே சொந்தமே…
நாளும் உன்னிடம் நாடும் என்னிடம்…
நீ தந்தது என்றுமே இன்பமே…

ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொங்கும் இன்பமே சொந்தமே…


Notes : Ponni Nadhi Song Lyrics in Tamil. This Song from Muthal Vasantham (1986). Song Lyrics penned by Vaali. பொன்னி நதி பாடல் வரிகள்.


மானாட கொடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாமுதல் வசந்தம்

Maanada Kodi Song Lyrics in Tamil


BGM

பெண் : மானாட கொடி பூவாடும்…
ஒரு சோலை…
நானாட அதில் தேனோடும்…
இளம் மாலை…
தோட்டத்து பூக்கள் எல்லாம்…
தேடுது என்னை…

பெண் : மானாட கொடி பூவாடும்…
ஒரு சோலை…
நானாட அதில் தேனோடும்…
இளம் மாலை…

BGM

பெண் : ஆஅ… காற்சலங்கை ஓசையிட்டால்…
காற்றில் ஒரு பாட்டு வரும்…
கைவளை தாளங்கள் தந்தனன்னா தானனன்னா…
தந்தனன்னா தானனன்னா…

பெண் : ஓ… தேனோடும் வண்ணமலை…
நீரோடும் வெள்ளி அலை…
ஜாடை மின்ன மின்ன…
ஆடை பின்ன பின்ன… ஓ…

பெண் : மானாட கொடி பூவாடும்…
ஒரு சோலை…
நானாட அதில் தேனோடும்…
இளம் மாலை…

BGM

பெண் : ஆஅ… வானமென்னும் மேடையிலே…
வானவில்லின் ஓவியங்கள்…
மேகத்தின் நாட்டியம் தந்தனன்னா தானனன்னா…
தந்தனன்னா தானனன்னா…

பெண் : ஓ… ஊர்கோலம் வண்ணக்கிளி…
ஆலோலம் சொல்லும் மொழி…
அன்னம் துள்ளத் துள்ள…
வண்ணம் என்ன சொல்ல… ஓ…

பெண் : மானாட கொடி பூவாடும்…
ஒரு சோலை…
நானாட அதில் தேனோடும்…
இளம் மாலை…


Notes : Maanada Kodi Song Lyrics in Tamil. This Song from Muthal Vasantham (1986). Song Lyrics penned by Vaali. மானாட கொடி பாடல் வரிகள்.


ஆறு அது ஆழம் இல்ல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்இளையராஜாஇளையராஜாமுதல் வசந்தம்

Aaru Athu Aazham Illai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆறு அது ஆழம் இல்ல…
அது சேரும் கடலும் ஆழம் இல்ல…
ஆறு அது ஆழம் இல்ல…
அது சேரும் கடலும் ஆழம் இல்ல…

ஆண் : ஆழம் எது அய்யா…
அந்த பொம்பள மனசுதான்யா…
ஆழம் எது அய்யா…
அந்த பொம்பள மனசுதான்யா…

ஆண் : அடி அம்மாடி அதன் ஆழம் பார்த்ததாரு…
அடி ஆத்தாடி அத பார்த்த பேர கூறு நீ…

ஆண் : ஆறு அது ஆழம் இல்ல…
அது சேரும் கடலும் ஆழம் இல்ல…

ஆண் : ஆழம் எது அய்யா…
அந்த பொம்பள மனசுதான்யா…
ஆழம் எது அய்யா…
அந்த பொம்பள மனசுதான்யா…

BGM

ஆண் : மாடி வீடு கன்னி பொண்ணு…
மனசுகுள்ள ரெண்டு கண்ணு…
ஏழை கண்ண ஏங்க விட்டு…
இன்னும் ஒண்ணு தேடுதம்மா…

ஆண் : கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி…
உள்ளுக்குள்ள எல்லாம் பொய்…
சொன்ன சொல்லு என்ன ஆச்சு…
சொந்தமெல்லாம் எங்கே போச்சு…

ஆண் : நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளிவேஷம்…
திரை போட்டு செஞ்ச மோசமே…

ஆண் : ஆறு அது ஆழம் இல்ல…
அது சேரும் கடலும் ஆழம் இல்ல…

ஆண் : ஆழம் எது அய்யா…
அந்த பொம்பள மனசுதான்யா…
ஆழம் எது அய்யா…
அந்த பொம்பள மனசுதான்யா…

BGM

ஆண் : தண்ணியில கோலம் போடு…
ஆடி காத்தில் தீபம் ஏத்து…
ஆகாயத்தில் கோட்ட கட்டு…
அந்தரத்தில் தோட்டம் போடு…

ஆண் : ஆண்டவன கூட்டி வந்து…
அவனை அங்கே காவல் போடு…
அத்தனையும் நடக்கும் அய்யா…
ஆச வச்ச கிடைக்கும் அய்யா…

ஆண் : ஆனா கிடைக்காது நீ ஆச வைக்கும் மாது…
அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே…

ஆண் : ஆறு அது ஆழம் இல்ல…
அது சேரும் கடலும் ஆழம் இல்ல…

ஆண் : ஆழம் எது அய்யா…
அந்த பொம்பள மனசுதான்யா…
ஆழம் எது அய்யா…
அந்த பொம்பள மனசுதான்யா…

ஆண் : அடி அம்மாடி அதன் ஆழம் பார்த்ததாரு…
அடி ஆத்தாடி அத பார்த்த பேர கூறு நீ…

ஆண் : ஆறு அது ஆழம் இல்ல…
அது சேரும் கடலும் ஆழம் இல்ல…

ஆண் : ஆழம் எது அய்யா…
அந்த பொம்பள மனசுதான்யா…
ஆழம் எது அய்யா…
அந்த பொம்பள மனசுதான்யா…


Notes : Aaru Athu Aazham Illai Song Lyrics in Tamil. This Song from Muthal Vasantham (1986). Song Lyrics penned by Muthulingam. ஆறு அது ஆழம் இல்ல பாடல் வரிகள்.