Category Archives: பொன்மன செல்வன்

நீ பொட்டு வச்ச

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன், மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாபொன்மன செல்வன்

Nee Pottu Vacha Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ பொட்டு வச்ச தங்கக் குடம்…
ஊருக்கு நீ மகுடம்…
நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்…
ஜோரான தங்க ரதம்…

ஆண் : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி…
குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா…

ஆண் : இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி…
குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா…

ஆண் : நீ பொட்டு வச்ச தங்கக் குடம்…
ஊருக்கு நீ மகுடம்…
நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்…
ஜோரான தங்க ரதம்…

BGM

ஆண் : ஆ… பெத்தவங்க செஞ்ச புண்ணியம்தான்…
பிள்ளைகள வந்து சேருமையா…
உத்தமரு ரொம்ப ஒசந்தவரு…
என்ன பெத்தவரு இந்த பெரியவரு…
அவரப் போல இங்காரும் இல்ல…
அலசிப் பாரு நீ ஒலகத்துல…

ஆண் : அண்ணனுன்னா அண்ணனய்யா…
குழு : ஹோய் ஹொய்…
ஆண் : அன்பு உள்ள மன்னனையா…
குழு : ஹோய் ஹொய்…

பெண் : அண்ணனுன்னா அண்ணனய்யா…
குழு : ஹோய் ஹொய்…
பெண் : அன்பு உள்ள மன்னனையா…
குழு : ஹோய் ஹொய்…

ஆண் : ஊரெல்லாம் கொண்டாடும் உன் பேரையா…
குழு : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி…
ஆண் : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா…

ஆண் : நீ பொட்டு வச்ச தங்கக் குடம்…
ஊருக்கு நீ மகுடம்…
நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்…
ஜோரான தங்க ரதம்… ஹேய்…

BGM

பெண் : வெற்றி எல்லாம் உங்க கூட வரும்…
நீங்க போற எடம் நல்ல பெரும பெறும்…

ஆண் : சத்தியத்த தெனம் காத்து வரும்…
அந்த சாமி தரும் பல நூறு வரம்…

ஆண் : மனசு எல்லாமே கோயிலையா…
அதுல நீதானே சாமியையா…

ஆண் : நல்லவன்தான் இவன் வல்லவன்தான்…
குழு : ஹோய் ஹொய்…
ஆண் : நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்…
குழு : ஹோய் ஹொய்…

பெண் : நல்லவன்தான் இவன் வல்லவன்தான்…
குழு : ஹோய் ஹொய்…
பெண் : நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்…
குழு : ஹோய் ஹொய்…

ஆண் : நாடெல்லாம் நாடெல்லாம் வெல்ல வந்தான்…
குழு : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி…
ஆண் : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா…

ஆண் : நீ பொட்டு வச்ச தங்கக் குடம்…
ஊருக்கு நீ மகுடம்…
நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்…
ஜோரான தங்க ரதம்…

ஆண் : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி…
குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா…

ஆண் : இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி…
குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா…

குழு : தந்தானனா தந்தானனா தந்தான தானனனா…
தந்தானனா தந்தானனா தந்தான தானனனா…


Notes : Nee Pottu Vacha Song Lyrics in Tamil. This Song from Ponmana Selvan (1989). Song Lyrics penned by Gangai Amaran. நீ பொட்டு வச்ச பாடல் வரிகள்.


கானக் கருங்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாபொன்மன செல்வன்

Kaana Karunguyile Song Lyrics in Tamil


பெண் : கானக் கருங்குயிலே…
காதல் ஓர் பாவமடி…

BGM

பெண் : கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி…
காதல் கணக்கினிலே கண்ணீர்தான் லாபமடி…

பெண் : ஆசை உண்டானது…
அதில் வீடு ரெண்டானது…

பெண் : அடி கானக் கருங்குயிலே…
காதல் ஓர் பாவமடி…

BGM

ஆண் : பூமியில் நாம் பிறந்த ஜாதகம் மாறுது…
என் விதி மேடை கட்டி நாடகம் ஆடுது…

ஆண் : வஞ்சியே உன் மனம் என்னிடம் ஏன் வந்தது…
வந்ததால் இத்தனை துன்பமும் வாய்ந்தது…
வேதனை சோதனை யாரிடம் நான் சொல்வது…
என் மனம் இன்றுதான் அம்பலம் ஆனது…

ஆண் : நீயும் இந்த துக்கத்திலே…
நில்லு மறு பக்கத்திலே…
நேரம் ஒரு காலம் வரக் கூடும்…
அன்று ஒண்ணாகலாம்…

பெண் : கானக் கருங்குயிலே…
காதல் ஓர் பாவமடி…
ஆசை உண்டானது…
அதில் வீடு ரெண்டானது…

BGM

பெண் : கண்களில் நீர் வழிந்து கன்னத்தில் ஓடுது…
கற்பனை ஆயிரம்தான் எண்ணத்தில் ஓடுது…

பெண் : வானமே இல்லையே வெண்ணிலா என்னாவது…
வளர்வதா தேய்வதா யாரிடம் கேட்பது…
பூ மரம் இல்லையே பூங்கொடி என்னாவது…
வாழ்வதா வீழ்வதா யாரிடம் கேட்பது…

பெண் : இருந்தால் இனி உன்னோடுதான்…
இல்லையேல் உடல் மண்ணோடுதான்…
மாலை இடும் வேளை வரும் நாளை…
என்றுதான் வாழ்கிறேன்…

ஆண் : கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி…
ஆசை உண்டானது…
அதில் வீடு ரெண்டானது…

பெண் : அடி கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி…
ஆண் : காதல் கணக்கினிலே கண்ணீர்தான் லாபமடி…


Notes : Kaana Karunguyile Song Lyrics in Tamil. This Song from Ponmana Selvan (1989). Song Lyrics penned by Gangai Amaran. கானக் கருங்குயிலே பாடல் வரிகள்.


அடிச்சேன் காதல் பரிசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாபொன்மன செல்வன்

Adichen Kadhal Parisu Song Lyrics in Tamil


பெண் : தனனா தான தனனா…
தனனா தான தனனா…

BGM

பெண் : அடிச்சேன் காதல் பரிசு…
புடிச்ச ஆளும் பெருசு…

ஆண் : என்னான்னு நெனச்சே…
வட்டமிட்டு கண்ணால வளச்சே…

பெண் : கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன்…
திட்டம் இட்டு இந்நாளில் முடிச்சேன்…

ஆண் : அடிச்சேன் காதல் பரிசு…
புடிச்ச ஆளும் பெருசு…

BGM

ஆண் : நேற்று இன்று…

BGM

ஆண் : நேற்று இன்று நாளை என்று…
நீண்ட நாளாய் தூண்டில் போட்டு மாட்டிடாத செம்மீனு…

பெண் : ஆசை மேலே ஆசை வைத்து…
புடிச்சிட்டாளே பொன்மானு…

ஆண் : மாமன் கூட மல்லாடி…
ஜெயிச்ச பொண்ணு கில்லாடி…

பெண் : வேட்டியும் சேலையும் போட்டி போட்டு ஒண்ணாச்சு…

பெண் : அடிச்சேன் காதல் பரிசு…
புடிச்ச ஆளும் பெருசு…

ஆண் : என்னான்னு நெனச்சே…
வட்டமிட்டு கண்ணால வளச்சே…

பெண் : கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன்…
திட்டம் இட்டு இந்நாளில் முடிச்சேன்…

BGM

ஆண் : வாடியம்மா…

BGM

ஆண் : வாடியம்மா வாடுறேன் நான்…
சாமி ஒன்ன படைக்கும் போதே எனக்குத்தான்னு வச்சானே…

பெண் : கூப்பிடாமே கூட வாரேன் கலங்கிடாதே மச்சானே…

ஆண் : ஊரு உறவு எல்லாரும்…
காண வேணும் கல்யாணம்…

பெண் : மாலையில் நடக்கணும் இளையராஜா கச்சேரி…

பெண் : அடிச்சேன் காதல் பரிசு…
புடிச்ச ஆளும் பெருசு…

ஆண் : என்னான்னு நெனச்சே…
வட்டமிட்டு கண்ணால வளச்சே…

பெண் : கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன்…
திட்டம் இட்டு இந்நாளில் முடிச்சேன்…

ஆண் : அடிச்சேன் காதல் பரிசு…
புடிச்ச ஆளும் பெருசு…


Notes : Adichen Kadhal Parisu Song Lyrics in Tamil. This Song from Ponmana Selvan (1989). Song Lyrics penned by Vaali. அடிச்சேன் காதல் பரிசு பாடல் வரிகள்.


poovaana-yaetta-thottu-song-lyrics-in-tamil

பூவான ஏட்டத் தொட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & வாணி ஜெயராம்இளையராஜாபொன்மன செல்வன்

Poovaana yaetta thottu Song Lyrics in Tamil


ஆண் : பூவான ஏட்டத் தொட்டு…
பொன்னான எழுத்தாலே…

பெண் : ஆஹா பிரமாதம்…

ஆண் : கண்ணான கண்ணுக்கொரு…
கடுதாசி போட்டேனே…

பெண் : சபாஷ்… சபாஷ்…

ஆண் : ஏட்டப் பிரிச்சு…
எம் பாட்டப் படிச்சு…
ஏந்திக் கொள்ளம்மா…
என்னத் தாங்கிக் கொள்ளம்மா…

BGM

ஆண் : பூவான ஏட்டத் தொட்டு…
பொன்னான எழுத்தாலே…
கண்ணான கண்ணுக்கொரு…
கடுதாசி போட்டேனே…

ஆண் : ஏட்டப் பிரிச்சு…
எம் பாட்டப் படிச்சு…
ஏந்திக் கொள்ளம்மா…
என்னத் தாங்கிக் கொள்ளம்மா…

BGM

பெண் : ஏடாக என்னத் தொட்டு…
எழுதுங்க பாட்டு ஒன்னு…
நான் அதுக்காக காத்திருக்கேன்…

ஆண் : எண்ணத்தில் நீ இருந்தால்…
எழுத்துக்கு பஞ்சமில்லே…
ஆயிரம் பாட்டு எழுதி வைப்பேன்…

பெண் : நீ ஒரு பாட்டு பாடிடக் கேட்டு…
பூவென நெஞ்சு பூத்ததையா…

ஆண் : பூத்தது என்ன பாத்தது என்ன…
கேட்டது தானா கெடச்சதம்மா…

பெண் : அன்பாக என்னக் கொஞ்சம்…
ஆதரிக்க வேணும்…

ஆண் : அள்ளித்தான் சேத்துக் கொள்ள…
பாத்திருக்கேன் நானும்…

பெண் : ஆசைய நான்தான் மறச்சு வச்சேன்…

ஆண் : பூவான ஏட்டத் தொட்டு…
பொன்னான எழுத்தாலே…
கண்ணான கண்ணுக்கொரு…
கடுதாசி போட்டேனே…

ஆண் : ஏட்டப் பிரிச்சு…
எம் பாட்டப் படிச்சு…
ஏந்திக் கொள்ளம்மா…
என்னத் தாங்கிக் கொள்ளம்மா…

BGM

ஆண் : பூவான நெஞ்சக் கொஞ்சம்…
புரியாத மக்குப்புள்ள…
புரியிற நேரம் பொறந்ததம்மா…

பெண் : பொன்னான ஓம் மனச…
எப்போதோ புரிஞ்சுகிட்டேன்…
புது வழி தேடி சேர்ந்துகிட்டேன்…

ஆண் : வெதச்சது தானா வெளையிற காலம்…
நெனச்சது எல்லாம் கூடக் கண்டேன்…

பெண் : தாலிய நீதான் போடுற வரைக்கும்…
வேலிய நான்தான் போட்டு வச்சேன்…

ஆண் : பூவுக்கு வேலியிட்டா…
வாசம் எங்கு போகும்…

பெண் : பூ அள்ளி நீ கொடுத்தா…
பொண்ணு ஒன்னச் சேரும்…

ஆண் : கேட்டத எல்லாம் நான் தரவா…

பெண் : பூவான ஏட்டத் தொட்டு…
பொன்னான எழுத்தாலே…
கண்ணான கண்ணனோட…
கடுதாசி கண்டேனே…

பெண் : ஏட்டப் பிரிச்சு…
ஓம் பாட்டப் படிச்சேன்…
ஏந்திக் கொள்ளையா…
என்னத் தாங்கிக் கொள்ளையா…

ஆண் : பூவான ஏட்டத் தொட்டு…
பொன்னான எழுத்தாலே…
கண்ணான கண்ணுக்கொரு…
கடுதாசி போட்டேனே…

ஆண் : ஏட்டப் பிரிச்சு…
ஏம் பாட்டப் படிச்சு…
ஏந்திக் கொள்ளம்மா…
என்னத் தாங்கிக் கொள்ளம்மா…


Notes : Poovaana yaetta thottu Song Lyrics in Tamil. This Song from Ponmana Selvan (1989). Song Lyrics penned by Gangai Amaran. பூவான ஏட்டத் தொட்டு பாடல் வரிகள்.