Category Archives: புது புது அர்த்தங்கள்

Kalyanamalai Song Lyrics in Tamil

கல்யாண மாலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபுது புது அர்த்தங்கள்

Kalyanamalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே…
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்…
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே…
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்…
சுருதியோடு லயம் போலவே…
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே…

ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே…
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்…

BGM

ஆண் : வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்…
ஆனாலும் அன்பு மாறாதது…
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்…
பிரிவென்னும் சொல்லே அறியாதது…

ஆண் : அழகான மனைவி அன்பான துணைவி…
அமைந்தாலே பேரின்பமே…
மடிமீது துயில சரசங்கள் பயில…
மோகங்கள் ஆரம்பமே…

ஆண் : நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி…
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி…
சந்தோஷ சாம்ராஜ்யமே…

ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே…
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்…
சுருதியோடு லயம் போலவே…
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே…

ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே…
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்…

BGM

ஆண் : கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து…
பாடென்று சொன்னால் பாடாதம்மா…
சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி…
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா…

ஆண் : நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்…
காவல்கள் எனக்கில்லையே…
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்…
சிரிக்காத நாளில்லையே…

ஆண் : துக்கம் சில நேரம் பொங்கி வரும்போதும்…
மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே…
என் சோகம் என்னோடுதான்…

ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே…
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்…
சுருதியோடு லயம் போலவே…
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே…

ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே…
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்…

BGM


Notes : Kalyanamalai Song Lyrics in Tamil. This Song from Pudhu Pudhu Arthangal (1989). Song Lyrics penned by Vaali. கல்யாண மாலை பாடல் வரிகள்.


குருவாயூரப்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாபுது புது அர்த்தங்கள்

Guruvayurappa Song Lyrics in Tamil


BGM

ஆண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா…
குருவாயூரப்பா குருவாயூரப்பா…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…

பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா…
வேண்டாத தெய்வம் இல்லை நீதானே பாக்கி…

ஆண் : ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன…
நான் போகும் பாதை…
என்னாளும் உன் பாதை…

ஆண் : ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன…
நான் போகும் பாதை…
என்னாளும் உன் பாதை…

பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…

BGM

ஆண் : தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில்…
நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்…

பெண் : தினம் தோறும் இரவில்…
நடு ஜாமம் வரையில்…
நான்தானே அதைக் கேட்டிருந்தேன்…

ஆண் : அரங்கேற்றம்தான் ஆகாமல்தான்…
அலைபாயும் என் ஜீவன்தான்…

பெண் : வா வா என் தேவா செம்பூவா…
என் தேகம் சேராதோ உன் கைகளிலே…

ஆண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…

BGM

பெண் : ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும்…
என் மேல் ஒரு போர் தொடுக்க…

ஆண் : எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு…
மானே வா உனை யார் தடுக்க…

பெண் : பரிமாறலாம் பசியாறலாம்…
பூமாலை நீ சூடும் நாள்…

ஆண் : மாது உன் மீது இப்போது…
என் மோகம் பாயாதோ சொல் பூங்குயிலே…

ஆண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…

பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா…
வேண்டாத தெய்வம் இல்லை நீதானே பாக்கி…

ஆண் : ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன…
நான் போகும் பாதை…
என்னாளும் உன் பாதை…

பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…

ஆண் : நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…


Notes : Guruvayurappa Song Lyrics in Tamil. This Song from Pudhu Pudhu Arthangal (1989). Song Lyrics penned by Vaali. குருவாயூரப்பா பாடல் வரிகள்.


கேளடி கண்மணி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபுது புது அர்த்தங்கள்

Keladi Kanmani Song Lyrics in Tamil


BGM

ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி…

ஆண் : நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்…
ஓர் கதையை உனக்கென நான் கூற…

ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி…

BGM

ஆண் : எந்நாளும்தானே தேன் விருந்தாவது…
பிறர்க்காக நான் பாடும் திரைப் பாடல்தான்…
இந்நாளில்தானே நான் இசைத்தேனம்மா…
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்…

ஆண் : கானல் நீரால் தீராத தாகம்…
கங்கை நீரால் தீர்ந்ததடி…
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை…
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை…

ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி…

BGM

ஆண் : நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்…
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா…
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்…
நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா…

ஆண் : ஏதோ ஏதோ ஆனந்த ராகம்…
உன்னால்தானே உண்டானது…
கால்போன பாதைகள் நான் போன போது…
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது…

ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி…
நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும்…
ஓர் கதையை உனக்கென நான் கூற…

ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி…


Notes : Keladi Kanmani Song Lyrics in Tamil. This Song from Pudhu Pudhu Arthangal (1989). Song Lyrics penned by Vaali. கேளடி கண்மணி பாடல் வரிகள்.