Category Archives: செந்தூரப்பூவே

கிளியே இளங்கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன் & எஸ்.பி.சைலஜாமனோஜ் கியான்செந்தூரப்பூவே

Kiliye Ilangkiliye Song Lyrics in Tamil


BGM

குழு : கும்மியடி பெண்ணே கும்மியடி…
வளையல் குலுங்க குலுங்க கும்மி அடி…
நெனச்ச புருஷன் கிடைக்கும் வரையில்…
நெருங்கி நெருங்கி கும்மி அடி…

குழு : தாவணி போட்டவ தாலியும் போடணும்…
தலுக்கி மினுக்கி கும்மி அடி…
கும்மி அடிக்குற குமரி பெண்ணுங்க…
அம்மி மிதிக்கணும் கும்மி அடி…

BGM

பெண் : கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச தந்தாலென்ன…
கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச தந்தாலென்ன…

BGM

பெண் : தாழம் பூவும் தலையில் இருந்தால்…
தலைவலி உண்டாகும்…
வயசுக்கேத்த வைத்தியன் வந்தால்…
தலைவலி குணமாகும்…

பெண் : கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச தந்தாலென்ன…

BGM

பெண் : பூவான குயிலே தாவணி மயிலே புருஷன் யாரடி…
பூவான குயிலே தாவணி மயிலே புருஷன் யாரடி…

பெண் : நிழல் தேடி முத்தம் கொஞ்சும் அவன் மாமனா… ஆஆ…
மலர் கொண்டு மஞ்சம் கட்டும் இளம் காமனா…

BGM

பெண் : மார்கழி போயி தையும் பொறந்தா…
மழையும் உண்டாகும்…
மாசி முடிஞ்சு பங்குனி வந்தால்…
மாங்கனி உண்டாகும்…

பெண் : கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச தந்தாலென்ன…

BGM

ஆண் : குலுக்கி குலுக்கி கும்மி அடிக்கிற…
தலுக்கு வெள்ளையம்மா…
இந்த மாமனுக்கு ஏத்த ஜோடி…
இங்கே இல்லையம்மா…

ஆண் : குலுக்கி குலுக்கி கும்மி அடிக்கிற…
தலுக்கு வெள்ளையம்மா…
இந்த மாமனுக்கு ஏத்த ஜோடி…
இங்கே இல்லையம்மா…

ஆண் : கும்மி பாட்டு பாடும் புள்ள…
புருஷன் உனக்கு யாரு புள்ள…
ஊருக்குள்ள யாரும் இல்ல…
காட்டுக்குள்ள பாரு புள்ள…

BGM

பெண் : அய்யாவுக்கு எந்த ஊரு…
உன் மூஞ்சி வாழ தாறு…
சரியான தண்டசோறு…
போ போ போ போ போ…

ஆண் : கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன…
கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன…

ஆண் & பெண் : கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன…
கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன…


Notes : Kiliye Ilangkiliye Song Lyrics in Tamil. This Song from Senthoora Poove (1988). Song Lyrics penned by Vairamuthu. கிளியே இளங்கிளியே பாடல் வரிகள்.


சோதனை தீரவில்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. ஜெயச்சந்திரன்மனோஜ் கியான்செந்தூரப்பூவே

Sothanai Theeravillai Song Lyrics in Tamil


BGM

ஆண் : கனவாக வந்த உறவு கலைந்து போனதம்மா…
கண்ணீரில் நனைந்த நெஞ்சு கலங்கி வாடுதம்மா…

ஆண் : சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…
சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…

ஆண் : சொல்லுங்க சொல்லுங்க அழுத்திச் சொல்லுங்க…
சொல்லிக் கொடுக்கவும் புத்தனில்ல…
வாழ்ந்து முடிச்சவன் கூட்டிக் கழிச்சான்…
கொண்டு போக இங்கு மிச்சமில்ல…

ஆண் : சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…
சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…

BGM

ஆண் : சொந்தம் இங்கே யாரோ யாரோ…
வந்த பந்தம் எல்லாம் கானல் நீரோ…
முத்தெடுக்கப் போனேன் நானே…
மூச்சடைச்சுப் போனேன் மானே…

ஆண் : பாசம் ஒரு வேஷம்தானே…
நம்புவது மோசம்தானே…

குழு : சொல்லுங்க சொல்லுங்க அழுத்திச் சொல்லுங்க…
சொல்லிக் கொடுக்கவும் புத்தனில்ல…
பந்தத்தையும் ஒரு சொந்தத்தையும்…
நம்பிக் கிடப்பதில் இங்கே அர்த்தமில்ல…

ஆண் : சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…

BGM

குழு : யாரோ சொந்தம் யாரோ…
யாரோ யாரறிவாரோ…

BGM

ஆண் : ரோசாப்பூவூ எங்கே எங்கே…
அது ராசா மார்பில் ஆடும் அங்கே…

ஆண் : புத்திக் கெட்டுப் போனேன் தாயே…
பொட்டு வச்சு வாழ்க நீயே…
பூப்பறிச்ச பாவி நானே…
பூ முடிச்சு வாழ்க மானே…

ஆண் : நந்தவனம் ஒன்னு வெந்துவிடுமின்னு…
தண்ணி கொண்டுவந்து காத்திருந்தேன்…
அந்த வனத்திலே ஜீவநதி ஒன்னு…
வந்து கலப்பதைப் பார்த்திருந்தேன்…

ஆண் : சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…
சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…

BGM


Notes : Sothanai Theeravillai Song Lyrics in Tamil. This Song from Senthoora Poove (1988). Song Lyrics penned by Vairamuthu. சோதனை தீரவில்லை பாடல் வரிகள்.


Sendhoora Poove Song Lyrics in Tamil

செந்தூர பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & பி.எஸ்.சசிரேகாமனோஜ் கியான்செந்தூரப்பூவே

Sendhoora Poove Song Lyrics in Tamil


பெண் : செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா…
இரு கரை மீதிலே தன் நிலைமீறியே…
ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே…

பெண் : ஓ… செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா…

BGM

ஆண் : வெண்பனி போலே கண்களில் ஆடும்…
மல்லிகை தோட்டம் கண்டேன்…
அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை…

BGM

ஆண் : வெண்பனி போலே கண்களில் ஆடும்…
மல்லிகை தோட்டம் கண்டேன்…
அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை…
அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை…

ஆண் : செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா…

BGM

ஆண் : மின்னலை தேடும் தாழம்பூவே…
உன் எழில் மின்னல் நானே…
பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே…

BGM

ஆண் : ஆஹாஹா… மின்னலை தேடும் தாழம்பூவே…
உன் எழில் மின்னல் நானே…
பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே…
உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காகதானே…

ஆண் : செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா…

BGM

ஆண் : அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி…
ஊர்வலம் போகும் வேளை…
நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்…

BGM

ஆண் : அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி…
ஊர்வலம் போகும் வேளை…
நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்…
நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன்…

ஆண் : செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா…

BGM


Notes : Sendhoora Poove Song Lyrics in Tamil. This Song from Senthoora Poove (1988). Song Lyrics penned by Muthulingam. செந்தூர பூவே பாடல் வரிகள்.