பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | பி. ஜெயச்சந்திரன் | மனோஜ் கியான் | செந்தூரப்பூவே |
Sothanai Theeravillai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கனவாக வந்த உறவு கலைந்து போனதம்மா…
கண்ணீரில் நனைந்த நெஞ்சு கலங்கி வாடுதம்மா…
ஆண் : சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…
சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…
ஆண் : சொல்லுங்க சொல்லுங்க அழுத்திச் சொல்லுங்க…
சொல்லிக் கொடுக்கவும் புத்தனில்ல…
வாழ்ந்து முடிச்சவன் கூட்டிக் கழிச்சான்…
கொண்டு போக இங்கு மிச்சமில்ல…
ஆண் : சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…
சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…
—BGM—
ஆண் : சொந்தம் இங்கே யாரோ யாரோ…
வந்த பந்தம் எல்லாம் கானல் நீரோ…
முத்தெடுக்கப் போனேன் நானே…
மூச்சடைச்சுப் போனேன் மானே…
ஆண் : பாசம் ஒரு வேஷம்தானே…
நம்புவது மோசம்தானே…
குழு : சொல்லுங்க சொல்லுங்க அழுத்திச் சொல்லுங்க…
சொல்லிக் கொடுக்கவும் புத்தனில்ல…
பந்தத்தையும் ஒரு சொந்தத்தையும்…
நம்பிக் கிடப்பதில் இங்கே அர்த்தமில்ல…
ஆண் : சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…
—BGM—
குழு : யாரோ சொந்தம் யாரோ…
யாரோ யாரறிவாரோ…
—BGM—
ஆண் : ரோசாப்பூவூ எங்கே எங்கே…
அது ராசா மார்பில் ஆடும் அங்கே…
ஆண் : புத்திக் கெட்டுப் போனேன் தாயே…
பொட்டு வச்சு வாழ்க நீயே…
பூப்பறிச்ச பாவி நானே…
பூ முடிச்சு வாழ்க மானே…
ஆண் : நந்தவனம் ஒன்னு வெந்துவிடுமின்னு…
தண்ணி கொண்டுவந்து காத்திருந்தேன்…
அந்த வனத்திலே ஜீவநதி ஒன்னு…
வந்து கலப்பதைப் பார்த்திருந்தேன்…
ஆண் : சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…
சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…
—BGM—
Notes : Sothanai Theeravillai Song Lyrics in Tamil. This Song from Senthoora Poove (1988). Song Lyrics penned by Vairamuthu. சோதனை தீரவில்லை பாடல் வரிகள்.