Category Archives: சிப்பிக்குள் முத்து

மனசு மயங்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாசிப்பிக்குள் முத்து

Manasu Mayangum Song Lyrics in Tamil


BGM

பெண் : மனசு மயங்கும்…
ஆண் : மனசு மயங்கும்…
பெண் : மெளன கீதம்…
ஆண் : மெளன கீதம்…
பெண் : மனசு மயங்கும் மெளன கீதம் பாடு…

பெண் : மன்மத கடலில்…
ஆண் : மன்மத கடலில்…
பெண் : சிப்பிக்குள் முத்து…
ஆண் : சிப்பிக்குள் முத்து…
பெண் : மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு…

பெண் : இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு…
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு…
சுகங்கள் இருமடங்கு…

ஆண் : மனசு மயங்கும் மெளன கீதம் பாடு…
பெண் : மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு…

BGM

பெண் : மார்பில் உண்டு பஞ்சணை…
மடிகள் ரெண்டும் தலையணை…
ஆண் : மடிகள் ரெண்டும் தலையணை…

பெண் : நீரில் நெருப்பின் வேதனை…
அணைத்து கொண்டேன் தலைவனை…
ஆண் : அணைத்து கொண்டேன் தலைவனை…

பெண் : இதயம் மாறியதோ…
எல்லை மீறியதோ…
இதயம் மாறியதோ எல்லை மீறியதோ…

பெண் : புதிய பாடம் விரக தாபம்…
புதிய பாடம் விரக தாபம்…
போதை ஏறியதோ…

ஆண் : மனசு மயங்கும் மெளன கீதம்…
பெண் : பாடு…
ஆண் : மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து…
பெண் : தேடு…

BGM

பெண் : காதல் இங்கே பல வகை…
உனக்கு மட்டும் புதுவகை…
ஆண் : உனக்கு மட்டும் புதுவகை…

பெண் : காமன் கலைகளும் எத்தனை…
பழக வேண்டும் அத்தனை…
ஆண் : பழக வேண்டும்…

பெண் : காதல் யாகங்களோ…
காம வேதங்களோ…
ஆண் : காதல் யாகங்களோ…
காம வேதங்களோ…

பெண் : உனக்குள் மறைந்து…
உயிரில் கரைந்து…
உனக்குள் மறைந்து உயிரில் கரைந்து…
உருகும் நேரங்களோ…

ஆண் : மனசு மயங்கும்…
பெண் : மனசு மயங்கும்…
ஆண் : மெளன கீதம்…
பெண் : மெளன கீதம்…
ஆண் : மனசு மயங்கும் மெளன கீதம் பாடு…

ஆண் : மன்மத கடலில்…
பெண் : மன்மத கடலில்…
ஆண் : சிப்பிக்குள் முத்து…
பெண் : சிப்பிக்குள் முத்து…
ஆண் : மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து…
பெண் : தேடு…

ஆண் : இதழில் தொடங்கு…
எனக்குள் அடங்கு…
இதழில் தொடங்கு எனக்குள் அடங்கு…
சுகங்கள் இருமடங்கு…

BGM


Notes : Manasu Mayangum Song Lyrics in Tamil. This Song from Sippikkul Muthu (1986). Song Lyrics penned by Vairamuthu. மனசு மயங்கும் பாடல் வரிகள்.


Thulli Thulli Song Lyrics in Tamil

துள்ளி துள்ளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகிஇளையராஜாசிப்பிக்குள் முத்து

Thulli Thulli Song Lyrics in Tamil


BGM

பெண் : நிசரிம பநிசரி நிரி ரி சநி பம…
பநிச நி பம ரிமரீ நீ சா…
தா நனனா தா ன நா ததரீ நா…
ஆ ஆஆஅ ஆஅ…

ஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா…
பெண் : அஹான் ஹா…
ஆண் : நீ கண்ணீர் விட்டால்…
பெண் : ஹ்ம்ம்ம்…
ஆண் : சின்ன மனம் தாங்காதம்மா…
பெண் : ஹஹஹஹா…

ஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா…
பெண் : ம்ம்ம்… ஆஅ ஆஅ…
ஆண் : சீதையம்மா…

ஆண் : நீ…
பெண் : கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா…
ஆண் : ஆஅ…
பெண் : ஆஆ… ஆஆஆஆ… ஆஅ…

பெண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா…

ஆண் : துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி
பெண் : துள்ளி துள்ளி துள்ளி…

ஆண் : துள்ளி துள்ளி…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் & பெண் : நீ பாடம்மா சீதையம்மா…

BGM

ஆண் : கட்டிய தாலி உண்மை என்று…
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்…

பெண் : கட்டிய தாலி உண்மை என்று…
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்…

ஆண் : மன்னவன் உன்னை மறந்ததென்ன…
உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன…

பெண் : மன்னவன் உன்னை மறந்ததென்ன…

ஆண் : மன்னவன் உன்னை மறந்ததென்ன…
உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன…

ஆண் : தாயே தீயில் மூழ்கி…
அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்…
நீதி மட்டும் உறங்காது…
நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு…

பெண் : நீதி மட்டும் உறங்காது…
நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு…

பெண் : துள்ளி துள்ளி துள்ளி… துள்ளி துள்ளி துள்ளி…
ஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா…

BGM

ஆண் : துன்பம் என்றும் ஆணுக்கல்ல…
அது அன்றும் இன்றும் பெண்களுக்கே…
துன்பம் என்றும் ஆணுக்கல்ல…
அது அன்றும் இன்றும் பெண்களுக்கே…

ஆண் : நீ அன்று சிந்திய கண்ணீரில்…
இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா…
நீ அன்று சிந்திய கண்ணீரில்…
இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா…

ஆண் : இரவென்றால் மறுநாளே விடியும்…
உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்…

ஆண் : அன்பு கொண்டு நீ ஆடு…
காலம் கூடும் பூப்போடு…

பெண் : அன்பில்லை நான் ஆட… ஹ…
தோள் இல்லை நான் பூப்போட…

ஆண் : துள்ளி துள்ளி துள்ளி…


Notes : Thulli Thulli Song Lyrics in Tamil. This Song from Sippikkul Muthu (1986). Song Lyrics penned by Vairamuthu. துள்ளி துள்ளி பாடல் வரிகள்.