Category Archives: வருவான் வடிவேலன்

வருவான் வடிவேலன் – Varuvan Vadivelan (1978)

பாவக்கடைத் தெருவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்வாணி ஜெயராம் & டி.எம். சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்வருவான் வடிவேலன்

Paava Kadaitheruvil Song Lyrics in Tamil


ஆண் : பாவக்கடைத் தெருவில் படுத்திருந்த பாவியென்னை…
ஞானக் கடல் தன்னில் நடக்கவிட்ட வேல்முருகன்…
ஆறுபடை நாயகனே அவமதிக்கும் மானிடர்க்கு…
மாறுதலைக் காட்டி மனம் திருந்தும் வேல் முருகா…

ஆண் : சத்தியத் திருக்கோலம் முத்தையன் வடிவென்ற…
தத்துவம் அறிந்தேன் கந்தா…

BGM

ஆண் : சத்தியத் திருக்கோலம் முத்தையன் வடிவென்ற…
தத்துவம் அறிந்தேன் கந்தா…
பித்தனின் விளையாட்டுப் பிழை பொறுத்தே உந்தன்…
பேரருள் தந்தாய் கந்தா…

BGM

ஆண் : கை சுமந்தாலென்ன தலை சுமந்தாலென்ன…
கந்தனைச் சுமக்கின்றது…
அவன் கடன் தந்த என் மேனி காலத்திலே வந்து…
கடனையும் தீர்க்கின்றது…
கடனையும் தீர்க்கின்றது…

ஆண் : முருகா சத்தியத் திருக்கோலம் முத்தையன் வடிவென்ற…
தத்துவம் அறிந்தேன் கந்தா…
தத்துவம் அறிந்தேன் கந்தா…

BGM

பெண் : மாதுமையாள் மைந்தன் மாசிமகம் காண…
மானிடம் திரள்கின்றது…

BGM

பெண் : மாதுமையாள் மைந்தன் மாசிமகம் காண…
மானிடம் திரள்கின்றது…
இந்த மக்களின் வினை என்னும் சிக்கலைத் தீர்க்கும் கரம்…
சிக்கலில் இருக்கின்றது…
கரம் சிக்கலில் இருக்கின்றது…

BGM

ஆண் : அழகப்பன் மேனிக்கு அழகு செய்தால் அதில்…
அருள் நெறி ஜொலிக்கின்றது…
திரு ஆண்டியப்பன் காலில் ஆசிகள் பெற வேண்டி…
அரசாங்கம் வருகின்றது…

BGM

பெண் : வெந்தணல் போல் எழுந்த விதியினில் துடிப்போர்க்கு…
சந்தனம் தருகின்றது…
நல்ல வீட்டுக் குலமகளை விளக்கேற்றி வைக்கச் சொல்லி…
குங்குமம் இடுகின்றது…
மங்கல குங்குமம் இடுகின்றது…

ஆண் : அவனிடம் போனவர்க்கு அவனை அடைதவர்க்கு…
எமனிடம் பயமில்லையே…
அந்த சிவனிடம் ஓம் என்றால் இவனிடம் பொருள் கேட்டான்…
இவனுக்கு மேலில்லையே…

ஆண் & பெண் : உண்டான ஆயுதங்கள் ஒன்பது எதிர்த்தாலும்…
தண்டாயுதம் காக்குமே…
அவனைக் கொண்டாடும் பேருகளுக்கு குறையாவும் ஓடிவிடும்…
கோடானு கோடி வருமே…
கோடானு கோடி வருமே…

BGM


Notes : Paava Kadaitheruvil Song Lyrics in Tamil. This Song from Varuvan Vadivelan (1978). Song Lyrics penned by Kannadasan. பாவக்கடைத் தெருவில் பாடல் வரிகள்.


நீயின்றி யாருமில்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்சீர்காழி கோவிந்தராஜன் & வாணி ஜெயராம்எம்.எஸ்.விஸ்வநாதன்வருவான் வடிவேலன்

Neeyindri Yaarumilliai Song Lyrics in Tamil


BGM

பெண் : நீயின்றி யாருமில்லை வழி காட்டு முருகா…
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு…
நீயின்றி யாருமில்லை வழி காட்டு முருகா…
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு…

பெண் : நம்பிக்கை கொண்டு வந்தேன் அருள் கேட்டு…
நீ ஞானக்கண் தனைத் திறந்து வழி காட்டு…
நம்பிக்கை கொண்டு வந்தேன் அருள் கேட்டு…
நீ ஞானக்கண் தனைத் திறந்து வழி காட்டு…

பெண் : அருளே அருளே உலகம் உனதல்லவா…
அறிவும் பொருளும் யாவும் நீயல்லவா…

பெண் : நீயின்றி யாருமில்லை வழி காட்டு முருகா…
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு…
நீ ஒளி காட்டு…

பெண் : திருப்பதி மாமனுக்குக் கண் இல்லையோ…
மாமி இலக்குமி எனைப்போலே பெண் இல்லையோ…

BGM

பெண் : திருப்பதி மாமனுக்குக் கண் இல்லையோ…
மாமி இலக்குமி எனைப்போலே பெண் இல்லையோ…

பெண் : கவனத்தில் எங்கள் நிலை வரவில்லையோ…
நாங்கள் கதிர்காமம்…
நாங்கள் கதிர்காமம் வந்ததற்குப் பலன் இல்லையோ…

பெண் : காசி விசாலாட்சி உந்தன் மகனிடம் சொல்வாய்…
காஞ்சி காமாட்சி உந்தன் மகனிடம் சொல்வாய்…
அங்கயற்கண்ணி உந்தன் மகனிடம் சொல்வாய்…
அடி அபிராமி நீ உனது மகனிடம் சொல்வாய்…

ஆண் : கண்டேன் கண்டேன் ஏஏஏ கண்டேன்…
முத்துக் குமரன் பக்திச் சரவணன்…
வைத்திய நாதனைக் கண்டேன்…
முடியுடை மன்னன் திருமுடி அங்கே…
கொடியுடைச் சேவலைக் கண்டேன்…

ஆண் : கொத்தும் நாகம் பொல்லாதாக கத்தும்…
தோகையைக் கண்டேன்…
கோலம் மாறிட ஞானக் கண்களும்…
ஊனக் கண்களும் கொண்டேன்…

BGM

ஆண் : வீடு நமக்குண்டு அறுபடை வீடு…
வேதம் நமக்குண்டு முருகனின் பாதம்…
வீடு நமக்குண்டு அறுபடை வீடு…
வேதம் நமக்குண்டு முருகனின் பாதம்…

ஆண் : விருந்து நமக்குண்டு கந்தனின் நாமம்…
மருந்து நமக்குண்டு வைத்திய நாதம்…
விருந்து நமக்குண்டு கந்தனின் நாமம்…
மருந்து நமக்குண்டு வைத்திய நாதம்…

ஆண் : ஐயா முருகய்யா…
ஐயா முருகய்யா…
ஐயா முருகய்யா…
ஐயா முருகய்யா…

BGM


Notes : Neeyindri Yaarumilliai Song Lyrics in Tamil. This Song from Varuvan Vadivelan (1978). Song Lyrics penned by Kannadasan. நீயின்றி யாருமில்லை பாடல் வரிகள்.


வருவான் வடிவேலன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்வாணி ஜெயராம்எம்.எஸ்.விஸ்வநாதன்வருவான் வடிவேலன்

Varuvan Vadivelan Song Lyrics in Tamil


பெண் : வருவான் வடிவேலன்…

BGM

பெண் : வருவான் வடிவேலன்…
தணிகை வள்ளல் அவன்…
அழகு மன்னன் அவன்…
நினைத்தால் வருவான் வடிவேலன்…

பெண் : வருவான் வடிவேலன்…
தணிகை வள்ளல் அவன்…
அழகு மன்னன் அவன்…
நினைத்தால் வருவான் வடிவேலன்…

BGM

பெண் : சிரித்துக் குறத்திப் பெண்ணை அணைக்கின்றவன்…
அவள் செங்கனி வாய் இதழை நனைக்கின்றவன்…
சிரித்துக் குறத்திப் பெண்ணை அணைக்கின்றவன்…
அவள் செங்கனி வாய் இதழை நனைக்கின்றவன்…

பெண் : இடையினில் கை கொடுத்து வளைக்கின்றவன்…
அள்ளி இடுகின்றவன்…
சொர்க்கம் தருகின்றவன்…
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ…

பெண் : இடையினில் கை கொடுத்து வளைக்கின்றவன்…
அள்ளி இடுகின்றவன்…
சொர்க்கம் தருகின்றவன்…

பெண் : வருவான் வடிவேலன்…
தணிகை வள்ளல் அவன்…
அழகு மன்னன் அவன்…
நினைத்தால் வருவான் வடிவேலன்…

பெண் : முருகா முருகா முருகா முருகா…
முருகா முருகா முருகா முருகா…
முருகா முருகா முருகா முருகா…

BGM

பெண் : அடியவர் கேட்ட வரம் தருகின்றவன்…
என்றும் அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன்…
அடியவர் கேட்ட வரம் தருகின்றவன்…
என்றும் அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன்…

பெண் : கொடியவர் பகை தீர்த்து முடிக்கின்றவன்…
சேவல் கொடியன் அவன் நமக்கு இனியன் அவன்…
கொடியவர் பகை தீர்த்து முடிக்கின்றவன்…
சேவல் கொடியன் அவன் நமக்கு இனியன் அவன்…
சேவல் கொடியன் அவன் நமக்கு இனியன் அவன்…

பெண் : வருவான் வடிவேலன்…
தணிகை வள்ளல் அவன்…
அழகு மன்னன் அவன்…
நினைத்தால் வருவான் வடிவேலன்…

BGM

பெண் : திருமுருகாற்றுப்படை நான் பாடவா…
இல்லை திருப்புகழ் பாடி இங்கு நடமாடவா…

BGM

பெண் : திருமுருகாற்றுப்படை நான் பாடவா…
இல்லை திருப்புகழ் பாடி இங்கு நடமாடவா…

பெண் : கந்தர் சஷ்டிக் கவசக் கவி பாடவா…
அவன் முன் கையேந்தவா…
வெற்றிக் கடல் நீந்தவா…

பெண் : கந்தர் சஷ்டிக் கவசக் கவி பாடவா…
அவன் முன் கையேந்தவா…
வெற்றிக் கடல் நீந்தவா…

பெண் : வருவான் வடிவேலன்…
தணிகை வள்ளல் அவன்…
அழகு மன்னன் அவன்…
நினைத்தால் வருவான் வடிவேலன்…


Notes : Varuvan Vadivelan Song Lyrics in Tamil. This Song from Varuvan Vadivelan (1978). Song Lyrics penned by Kannadasan. வருவான் வடிவேலன் பாடல் வரிகள்.