Category Archives: நீயா

Ore Jeevan Song Lyrics in Tamil

ஒரே ஜீவன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்கே.வி.மகாதேவன்நீயா

Ore Jeevan Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணா… ஓ…
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணா…
ஒரே பூவில் ஒன்றே தென்றல்…
வாராய் கண்ணா… ஆஹா…

ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணே… ஓ…
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணே…
ஒரே பூவில் ஒன்றே தென்றல்…
வாராய் கண்ணே… ஏஏ…

ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணே…ஓ…
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணே…

BGM

பெண் : அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்…
ஆண் : இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே…

பெண் : அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்…
ஆண் : இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே…

பெண் : அன்று கடல் மீது ஒரு கண்ணன்…
துயில் மேவினான்…
ஆண் : இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணே…

பெண் : என் மன்னனே…
ஒரே கண்ணன் ஒன்றே ராதை…
வாராய் கண்ணா… ஆ…

ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணே…

BGM

ஆண் : இங்கே விண் மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன…
பெண் : நான் வெறும் கோயில் ஆகாமல் காக்க…

ஆண் : உந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டும்…
பெண் : அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்க…

பெண் : தேர் கொண்டு வா….
கண்ணன் வந்து கீதம் சொன்னால்…
நான் ஆடுவேன்….

ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணே… ஓ…
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணே…

BGM

பெண் : அந்த மணிச்சங்கின் ஓலி கேட்டு…
நான் ஆடுவேன்…
ஆண் : இந்த மழைமேகம் உன்மீது ஆடும்…

பெண் : அந்த மணிச்சங்கின் ஓலி கேட்டு…
நான் ஆடுவேன்…
ஆண் : இந்த மழைமேகம் உன்மீது ஆடும்…

ஆண் : வண்ணப் படத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம்…
பெண் : இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும்…

ஆண் : புது வெள்ளமே… ஏ…
ஒரே சொர்கம் எந்தன் பக்கம் வேறில்லையே…

பெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணா…


Notes : Ore Jeevan Song Lyrics in Tamil. This Song from Neeya (1979). Song Lyrics penned by Kannadasan. ஒரே ஜீவன் பாடல் வரிகள்.


நான் கட்டில் மேலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலாசங்கர் கணேஷ்நீயா

Naan Kattil Mele Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா…
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா…
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா…
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா…

ஆண் : ஹோஹோ… விழிகளில் தாபம் படமெடுத்தாடும்…
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்…
ஹோஓ… ஹோஓ… வேளையில் நான் வர…
சீறுது சிணுங்குது ஏன்…

ஆண் : நான் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா…
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா…

BGM

பெண் : காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்…
கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்…
காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்…
கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்…

ஆண் : அது புரியாததா…
நான் அறியாததா…
அது புரியாததா…
நான் அறியாததா…
உன்னுள்ளம் என்னென்று தெரியாததா…

பெண் : எங்கே உன் தேன் கிண்ணம்…
இந்தா என் பூ முத்தம்…
எங்கே உன் தேன் கிண்ணம்…
இந்தா என் பூ முத்தம்…

பெண் : நான் கட்டில் மேலே காணும் வெண்ணிலா…
உனை கட்டிக் கொண்டு பேசும் பெண்ணிலா…

BGM

ஆண் : ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க…
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க…
ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க…
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க…

பெண் : ஒரு உயிர் வாழ்ந்திட…
இரு உடல் வேண்டுமா…
ஒரு உயிர் வாழ்ந்திட…
இரு உடல் வேண்டுமா…
ஒன்றான பின்னாலே இரண்டாகுமா…

ஆண் : அம்மாடி உன் ஆசை…
பொல்லாத பேராசை…
அம்மாடி உன் ஆசை…
பொல்லாத பேராசை…

ஆண் : நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா… ஆ…
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா… ஆஆ…


Notes : Naan Kattil Mele Song Lyrics in Tamil. This Song from Neeya (1979). Song Lyrics penned by Kannadasan. நான் கட்டில் மேலே பாடல் வரிகள்.