Category Archives: மன்னாதி மன்னன்

மன்னாதி மன்னன் – Mannadhi Mannan (1960)

Acham Enbathu Madamaiyada Song Lyrics in Tamil

அச்சம் என்பது மடமையடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
கண்ணதாசன்டி.எம். சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திமன்னாதி மன்னன்

Acham Enbathu Madamaiyada Song Lyrics in Tamil


ஆண் : அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…

BGM

ஆண் : அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…
அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…

ஆண் : ஆறிலும் சாவு நூறிலும் சாவு…
தாயகம் காப்பது கடமையடா…
தாயகம் காப்பது கடமையடா…

ஆண் : அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…

BGM

ஆண் : கனகவிஜயரின் முடித்தலை நெறித்து…
கல்லினை வைத்தான் சேர மகன்… ஆஆ… ஆஆ…
கனகவிஜயரின் முடித்தலை நெறித்து…
கல்லினை வைத்தான் சேர மகன்…

ஆண் : இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி…
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே…

ஆண் : அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…

BGM

ஆண் : கருவினில் வளரும் மழலையின் உடலில்…
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை… ஆஆஆ…
கருவினில் வளரும் மழலையின் உடலில்…
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை…

ஆண் : களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்…
காத்திட எழுவான் அவள் பிள்ளை…

ஆண் : அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…

BGM

ஆண் : வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி…
மக்களின் மனதில் நிற்பவர் யார்…
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி…
மக்களின் மனதில் நிற்பவர் யார்…

ஆண் : மாபெரும் வீரர் மானம் காப்போர்…
சரித்திரம் தனிலே நிற்கின்றார்…

ஆண் : அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…

ஆண் : ஆறிலும் சாவு நூறிலும் சாவு…
தாயகம் காப்பது கடமையடா…
தாயகம் காப்பது கடமையடா…

ஆண் : அச்சம் என்பதுமடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…


Notes : Acham Enbathu Madamaiyada Song Lyrics in Tamil. This Song from Mannadhi Mannan (1960). Song Lyrics penned by Kannadasan. அச்சம் என்பது மடமையடா பாடல் வரிகள்.


கண்கள் இரண்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திமன்னாதி மன்னன்

Kangal Irandum Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…

பெண் : கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…

BGM

பெண் : காலம் இனி மேல்…
நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ…
காலம் இனி மேல்…
நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ…

பெண் : கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…

BGM

பெண் : பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்…
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்…
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்…
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்…

பெண் : சென்ற இடம் காணேன்…
சிந்தை வாடலானேன்…
சேதி சொல்லும் யாரும்…
தூது சொல்லக் காணேன்…

பெண் : சென்ற இடம் காணேன்…
சிந்தை வாடலானேன்…
சேதி சொல்லும் யாரும்…
தூது சொல்லக் காணேன்…

பெண் : கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…
காலம் இனி மேல்…
நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ…

பெண் : கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…

BGM

பெண் : நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே…
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே…
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே…
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே…

பெண் : கணையாழி இங்கே…
மணவாளன் அங்கே…
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே…

பெண் : கணையாழி இங்கே…
மணவாளன் அங்கே…
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே…

பெண் : கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…
காலம் இனி மேல்…
நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ…

பெண் : கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…


Notes : Kangal Irandum Song Lyrics in Tamil. This Song from Mannadhi Mannan (1960). Song Lyrics penned by Kannadasan. கண்கள் இரண்டும் பாடல் வரிகள்.