பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
செங்கதிர்வாணன் | அமிர்தா | சிவபுராணம் டி.வி. ரமணி | சிவன் பாடல்கள் |
Guru Kavasam Song Lyrics in Tamil
—BGM—
பெண் : தென் திசை நோக்கிய தெய்வம் நீயே…
தென்னாடுடைய சிவனும் நீயே…
மண்ணுயிர்க் காக்கும் மாதேஸ்வரனே…
மலரடி பணிந்தோம் அருள் புரிவாயே…
பெண் : தென் திசை நோக்கிய தெய்வம் நீயே…
தென்னாடுடைய சிவனும் நீயே…
மண்ணுயிர்க் காக்கும் மாதேஸ்வரனே…
மலரடி பணிந்தோம் அருள் புரிவாயே…
பெண் : சந்திரன் தலையில் சூடிய குருவே…
சாந்த சொரூபம் உந்தன் வடிவே…
நன்மைகள் பலவும் நாளும் செய்யும்…
நல்லோன் நீயே நலம் தருவாயே…
பெண் : புன்னகை தவழும் பொன்னன் நீயே…
புலித்தோல் இடையில் அணிந்தவன் நீயே…
கண்ணிமை போலெ காப்பவன் நீயே…
கை தொழுதோமே குருவே சரணம்…
பெண் : உன்னடி பணிந்தால் உயர்வுகள் சேரும்…
ஊழ்வினை துன்பம் துயரம் தீரும்…
எண்ணில் அடங்கா இன்பங்கள் கூடும்…
ஈரேழ் உலகம் உன் புகழ் பாடும்…
—BGM—
பெண் : சிவனுருவான குருபகவானே…
ப்ரகஸ்பதியென்னும் பெயருடையோனே
புவனம் காக்கும் புண்ணியன் நீயே…
புகழும் நிதியும் தருபவன் நீயே…
பெண் : சிவனுருவான குருபகவானே…
ப்ரகஸ்பதியென்னும் பெயருடையோனே
புவனம் காக்கும் புண்ணியன் நீயே…
புகழும் நிதியும் தருபவன் நீயே…
பெண் : தாராதேவி சங்கினி என்று…
தேவியர் இருவரை மணந்தவன் நீயே…
மாறா கருணை கொண்டவன் நீயே…
மஞ்சளில் ஆடை தரித்தவன் நீயே…
பெண் : தனுசு மீனம் ராசிகள் இரண்டின்…
அதிபதி நீயே அருள்புரிவோனே…
கனவிலும் நினைவிலும் உன்னடி பணிந்து…
கடலென செல்வம் அடைந்திடுவோமே…
பெண் : முல்லை மலரால் உன்னை வணங்கி…
முந்தை வினைகளின் வேரருப்போமே…
இல்லையென்று சொல்லாமல் நீயும்…
எங்களுக்கருளும் ஈசனும் நீயே…
—BGM—
பெண் : வியாழன் தோறும் விரதம் இருந்து…
ஆலயம் வந்து குரு உனை பணிவோம்…
தியானநிலையில் இருக்கும் உந்தன்…
திருவடி வணங்கி பெருமைகள் அடைவோம்…
பெண் : வியாழன் தோறும் விரதம் இருந்து…
ஆலயம் வந்து குரு உனை பணிவோம்…
தியானநிலையில் இருக்கும் உந்தன்…
திருவடி வணங்கி பெருமைகள் அடைவோம்…
பெண் : திருமணம் நிகழ திருவருள் புரிவாய்…
புத்திர பாக்கியம் இனிதே தருவாய்…
வருக வருக குருவே வருக…
வழிபடுவோம் நலம்பல தருக…
பெண் : சாத்விக குணத்தின் பூர்வீகம் நீயே…
சரணடைந்தோர்க்கு காவல் நீயே…
போற்றிட வந்தோம் உன் திருவடியே…
புரிவாய் புரியவாய் கருணை குருவே…
பெண் : தேவர்கள் வணங்கும் குருவும் நீயே…
இந்திரலோக மந்திரி நீயே…
பாவங்கள் போக்கும் பகவான் நீயே…
பக்தரை காக்கும் ஈசனும் நீயே…
பெண் : கருணை உள்ளம் கொண்டவன் நீயே…
மங்களம் அருளும் கோலும் நீயே…
வருவோம் உந்தன் சன்னதி நாங்கள்…
வாழ்வினில் பூக்கும் வளமை பூக்கள்…
பெண் : இனிப்பை விரும்பி ஏற்பவன் நீயே…
பஞ்சபூதத்தில் வானம் நீயே…
அழிவில்லாத ஆண்டவன் நீயே…
அடைக்களமானோம் உன் திருவடியே…
—BGM—
பெண் : அன்பரை காக்கும் அழகிய இறைவா…
ஆற்றல் பதவி அனைத்தும் தருவாய்…
துன்பங்கள் தீர்க்கும் தூயவன் நீயே…
துணைவரவேண்டும் நிழலென நீயே…
பெண் : அன்பரை காக்கும் அழகிய இறைவா…
ஆற்றல் பதவி அனைத்தும் தருவாய்…
துன்பங்கள் தீர்க்கும் தூயவன் நீயே…
துணைவரவேண்டும் நிழலென நீயே…
பெண் : தோஷம் உள்ளவர் உன்னடி பணிந்தால்…
சேமம் பெருகி சிறப்புடன் வாழ்வார்…
வாரம்தோறும் வழிபடும்போது…
நேரிடும் இன்னல் நெருங்குவதேது…
பெண் : அரச மரத்தை வளம் வரும் வேளை…
அல்லல் நீங்கும் அவதிகள் தீரும்…
கொண்டைக் கடலை உனக்கென படைத்து…
தானம் கொடுத்தால் தோஷம் நீங்கும்…
பெண் : பாலும் பழமும் பஞ்சாமிர்தமும்…
தயிரும் இளநீர் விபூதியாலும்…
பகவான் உனக்கு அபிஷேகம் செய்தால்…
எல்லா இடரும் நொடியில் விலகும்…
—BGM—
பெண் : பக்தரை உந்தன் பாதம் காக்க…
பணிந்தோம் உன்னை குருவே காக்க…
தக்ஷிணாமூர்த்தி எங்களை காக்க…
திருவடி தொழுதோம் என்றும் காக்க…
பெண் : பக்தரை உந்தன் பாதம் காக்க…
பணிந்தோம் உன்னை குருவே காக்க…
தக்ஷிணாமூர்த்தி எங்களை காக்க…
திருவடி தொழுதோம் என்றும் காக்க…
பெண் : காக்க காக்க கயிலாயன் காக்க…
கருணாமூர்த்தி கனிந்தே காக்க…
தீர்க்க தீர்க்க பாவம் தீர்க்க…
திருத்தலம் வந்தோம் குரு உனை பார்க்க…
பெண் : இமைகள் இரண்டை இமையோன் காக்க…
இதயம் தன்னை ஈஸ்வரன் காக்க…
தசையுடன் எலும்பை தயவுடன் காக்க…
தாழ்பணிந்தோமே குருவே காக்க…
பெண் : இருள்தனை அகற்றும் ஒளியென காக்க…
இரு கைகால்களை இறையோன் காக்க…
உருவம் முழுதும் உயர்ந்தோன் காக்க…
உள்ளே உறையும் குருவே காக்க…
—BGM—
பெண் : பரிவுடன் உந்தன் பார்வையில் காக்க…
பழியில் இருந்து பகவான் காக்க…
செறிவுடை தெய்வம் சிறப்புடன் காக்க…
சீலமாய் வாழ குருவே காக்க…
பெண் : பிணிகள் இன்றி பெரியோன் காக்க…
பிழைகள் பொறுத்து ஆசான் காக்க…
இனிப்பினை விரும்பும் ஈசன் காக்க…
இணையில்லாத குருவே காக்க…
பெண் : விருப்பும் வெறுப்பும் அண்டாது காக்க
விண்ணும் மண்ணும் செழிப்புற காக்க…
திருப்பம் வழங்கும் திருவே காக்க…
திசைகள் எட்டும் குருவே காக்க…
பெண் : தனித்தனியாக உறுப்புகள் யாவும்…
தடைகள் இன்றி இயங்கிட காக்க…
நினைத்தது நடக்க நிர்மலன் காக்க…
நெஞ்சினில் வாழும் குருவே காக்க…
—BGM—
பெண் : காக்கும் எங்கள் குருவே வாழ்க…
கயிலைமலையோன் சிவனே வாழ்க…
பார்க்கும் விழிகளில் பரமன் வாழ்க…
பரிவுடன் அருளும் ஈசன் வாழ்க…
பெண் : தீராத பிணிகள் தீர்ப்பவன் வாழ்க…
தென்திசை பார்க்கும் குருவே வாழ்க…
போராடும் வாழ்வை தடுப்போன் வாழ்க…
பொன்னிறத்தோனே தேவா வாழ்க…
பெண் : பூக்கும் மலரின் பொழுதுகள் வாழ்க…
புதுப்புனலாக கருணை வாழ்க…
யார்க்கும் உதவும் இறைவன் வாழ்க…
யாவரும் வணங்கும் குருவே வாழ்க…
பெண் : ருத்ராட்ச மாலை தரித்தவன் வாழ்க…
பற்றோடு நினைக்கும் அடியவர் வாழ்க…
வரும்வினை போக்கும் குருவே வாழ்க…
—BGM—
பெண் : ஆலயம் தோறும் அமர்ந்தாய் போற்றி…
அடியவர் உள்ளம் அறிவாய் போற்றி…
போதனைசாலையில் இருப்பாய் போற்றி…
புண்ணியவடிவே குருவே போற்றி…
பெண் : ஆடைகள் விற்கும் இடங்களிலெல்லாம்…
அய்யா நீயும் வாசம் செய்வாய்…
மருத்துவமனையில் வங்கியில் நீயும்…
மகிழ்வுடன் இருந்து எங்களை காப்பாய்…
பெண் : மனிதரின் உடம்பில் ஒன்பது துளைகள்…
ஒவ்வொருத்துளையும் கோல்வெனவாகும்…
கண்கள் இரண்டும் சூரியன் சந்திரன்…
காதுகள் இரண்டும் செவ்வாய் புதனாம்…
பெண் : மூக்கின் துளைகள் சுக்கிரன் சனியென…
முன்னோர் வகுத்து முறைசெய்தாரே…
வாயில் உன்னை வைத்ததனாலே…
வளமிகு வார்த்தைகள் வழங்கிடு நீயே…
பெண் : முன்வழித் துளையில் ராகு இருக்க…
பின்வழித் துளையில் கேது இருக்க…
அங்கம் முழுதும் நவகோலாக…
எங்களை மண்ணில் அடைத்தவன் நீயே…
—BGM—
பெண் : தலங்கள் தோறும் விதவிதமான…
கோலம் தாங்கி தரிசனம் தருவாய்…
நலம்பல வேண்டி வருவோர்க்கெல்லாம்…
நயமுடனே நீயும் நல்லருள் புரிவாய்…
பெண் : வைத்தீஸ்வரனார் கோவிலில் நீயும்…
மேற்கினில் நோக்கி மேன்மைகள் தருவாய்…
கஞ்சனூரிலே கீழ்த்திசை பார்த்து…
கைத்தொழுவோரை காத்திடுவாயே…
பெண் : திருவொற்றியூரில் வடதிசை பார்த்து…
திருவருள் நீயும் புரிகின்றாயே…
திருநாவலூரில் நின்ற நிலையிலே…
தரிசனம் தந்து அருள்கின்றாயே…
பெண் : காஞ்சியில் நீயும் வீணை மீட்டும்…
காட்சியை தந்து கவர்ந்திடுவாயே…
ஆந்திர மாநிலம் அனந்தப்பூரிலே…
ஐயப்பன் போலே அமர்திருப்பாயே…
—BGM—
பெண் : சரணம் சரணம் குருவே சரணம்…
கவசம் போலே காப்பாய் சரணம்…
அருள் மழை நீயே ஐயா சரணம்…
அபயம் அபயம் தருவாய் சரணம்…
—BGM—
Notes : Guru Kavasam Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Senkathirvanan. குரு கவசம் பாடல் வரிகள்.