குரு கவசம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
செங்கதிர்வாணன்அமிர்தாசிவபுராணம் டி.வி. ரமணிசிவன் பாடல்கள்

Guru Kavasam Song Lyrics in Tamil


BGM

பெண் : தென் திசை நோக்கிய தெய்வம் நீயே…
தென்னாடுடைய சிவனும் நீயே…
மண்ணுயிர்க் காக்கும் மாதேஸ்வரனே…
மலரடி பணிந்தோம் அருள் புரிவாயே…

பெண் : தென் திசை நோக்கிய தெய்வம் நீயே…
தென்னாடுடைய சிவனும் நீயே…
மண்ணுயிர்க் காக்கும் மாதேஸ்வரனே…
மலரடி பணிந்தோம் அருள் புரிவாயே…

பெண் : சந்திரன் தலையில் சூடிய குருவே…
சாந்த சொரூபம் உந்தன் வடிவே…
நன்மைகள் பலவும் நாளும் செய்யும்…
நல்லோன் நீயே நலம் தருவாயே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : புன்னகை தவழும் பொன்னன் நீயே…
புலித்தோல் இடையில் அணிந்தவன் நீயே…
கண்ணிமை போலெ காப்பவன் நீயே…
கை தொழுதோமே குருவே சரணம்…

பெண் : உன்னடி பணிந்தால் உயர்வுகள் சேரும்…
ஊழ்வினை துன்பம் துயரம் தீரும்…
எண்ணில் அடங்கா இன்பங்கள் கூடும்…
ஈரேழ் உலகம் உன் புகழ் பாடும்…

BGM

பெண் : சிவனுருவான குருபகவானே…
ப்ரகஸ்பதியென்னும் பெயருடையோனே
புவனம் காக்கும் புண்ணியன் நீயே…
புகழும் நிதியும் தருபவன் நீயே…

பெண் : சிவனுருவான குருபகவானே…
ப்ரகஸ்பதியென்னும் பெயருடையோனே
புவனம் காக்கும் புண்ணியன் நீயே…
புகழும் நிதியும் தருபவன் நீயே…

பெண் : தாராதேவி சங்கினி என்று…
தேவியர் இருவரை மணந்தவன் நீயே…
மாறா கருணை கொண்டவன் நீயே…
மஞ்சளில் ஆடை தரித்தவன் நீயே…

பெண் : தனுசு மீனம் ராசிகள் இரண்டின்…
அதிபதி நீயே அருள்புரிவோனே…
கனவிலும் நினைவிலும் உன்னடி பணிந்து…
கடலென செல்வம் அடைந்திடுவோமே…

பெண் : முல்லை மலரால் உன்னை வணங்கி…
முந்தை வினைகளின் வேரருப்போமே…
இல்லையென்று சொல்லாமல் நீயும்…
எங்களுக்கருளும் ஈசனும் நீயே…

BGM

பெண் : வியாழன் தோறும் விரதம் இருந்து…
ஆலயம் வந்து குரு உனை பணிவோம்…
தியானநிலையில் இருக்கும் உந்தன்…
திருவடி வணங்கி பெருமைகள் அடைவோம்…

பெண் : வியாழன் தோறும் விரதம் இருந்து…
ஆலயம் வந்து குரு உனை பணிவோம்…
தியானநிலையில் இருக்கும் உந்தன்…
திருவடி வணங்கி பெருமைகள் அடைவோம்…

பெண் : திருமணம் நிகழ திருவருள் புரிவாய்…
புத்திர பாக்கியம் இனிதே தருவாய்…
வருக வருக குருவே வருக…
வழிபடுவோம் நலம்பல தருக…

பெண் : சாத்விக குணத்தின் பூர்வீகம் நீயே…
சரணடைந்தோர்க்கு காவல் நீயே…
போற்றிட வந்தோம் உன் திருவடியே…
புரிவாய் புரியவாய் கருணை குருவே…

பெண் : தேவர்கள் வணங்கும் குருவும் நீயே…
இந்திரலோக மந்திரி நீயே…
பாவங்கள் போக்கும் பகவான் நீயே…
பக்தரை காக்கும் ஈசனும் நீயே…

பெண் : கருணை உள்ளம் கொண்டவன் நீயே…
மங்களம் அருளும் கோலும் நீயே…
வருவோம் உந்தன் சன்னதி நாங்கள்…
வாழ்வினில் பூக்கும் வளமை பூக்கள்…

பெண் : இனிப்பை விரும்பி ஏற்பவன் நீயே…
பஞ்சபூதத்தில் வானம் நீயே…
அழிவில்லாத ஆண்டவன் நீயே…
அடைக்களமானோம் உன் திருவடியே…

BGM

பெண் : அன்பரை காக்கும் அழகிய இறைவா…
ஆற்றல் பதவி அனைத்தும் தருவாய்…
துன்பங்கள் தீர்க்கும் தூயவன் நீயே…
துணைவரவேண்டும் நிழலென நீயே…

பெண் : அன்பரை காக்கும் அழகிய இறைவா…
ஆற்றல் பதவி அனைத்தும் தருவாய்…
துன்பங்கள் தீர்க்கும் தூயவன் நீயே…
துணைவரவேண்டும் நிழலென நீயே…

பெண் : தோஷம் உள்ளவர் உன்னடி பணிந்தால்…
சேமம் பெருகி சிறப்புடன் வாழ்வார்…
வாரம்தோறும் வழிபடும்போது…
நேரிடும் இன்னல் நெருங்குவதேது…

பெண் : அரச மரத்தை வளம் வரும் வேளை…
அல்லல் நீங்கும் அவதிகள் தீரும்…
கொண்டைக் கடலை உனக்கென படைத்து…
தானம் கொடுத்தால் தோஷம் நீங்கும்…

பெண் : பாலும் பழமும் பஞ்சாமிர்தமும்…
தயிரும் இளநீர் விபூதியாலும்…
பகவான் உனக்கு அபிஷேகம் செய்தால்…
எல்லா இடரும் நொடியில் விலகும்…

BGM

பெண் : பக்தரை உந்தன் பாதம் காக்க…
பணிந்தோம் உன்னை குருவே காக்க…
தக்ஷிணாமூர்த்தி எங்களை காக்க…
திருவடி தொழுதோம் என்றும் காக்க…

பெண் : பக்தரை உந்தன் பாதம் காக்க…
பணிந்தோம் உன்னை குருவே காக்க…
தக்ஷிணாமூர்த்தி எங்களை காக்க…
திருவடி தொழுதோம் என்றும் காக்க…

பெண் : காக்க காக்க கயிலாயன் காக்க…
கருணாமூர்த்தி கனிந்தே காக்க…
தீர்க்க தீர்க்க பாவம் தீர்க்க…
திருத்தலம் வந்தோம் குரு உனை பார்க்க…

பெண் : இமைகள் இரண்டை இமையோன் காக்க…
இதயம் தன்னை ஈஸ்வரன் காக்க…
தசையுடன் எலும்பை தயவுடன் காக்க…
தாழ்பணிந்தோமே குருவே காக்க…

பெண் : இருள்தனை அகற்றும் ஒளியென காக்க…
இரு கைகால்களை இறையோன் காக்க…
உருவம் முழுதும் உயர்ந்தோன் காக்க…
உள்ளே உறையும் குருவே காக்க…

BGM

பெண் : பரிவுடன் உந்தன் பார்வையில் காக்க…
பழியில் இருந்து பகவான் காக்க…
செறிவுடை தெய்வம் சிறப்புடன் காக்க…
சீலமாய் வாழ குருவே காக்க…

பெண் : பிணிகள் இன்றி பெரியோன் காக்க…
பிழைகள் பொறுத்து ஆசான் காக்க…
இனிப்பினை விரும்பும் ஈசன் காக்க…
இணையில்லாத குருவே காக்க…

பெண் : விருப்பும் வெறுப்பும் அண்டாது காக்க
விண்ணும் மண்ணும் செழிப்புற காக்க…
திருப்பம் வழங்கும் திருவே காக்க…
திசைகள் எட்டும் குருவே காக்க…

பெண் : தனித்தனியாக உறுப்புகள் யாவும்…
தடைகள் இன்றி இயங்கிட காக்க…
நினைத்தது நடக்க நிர்மலன் காக்க…
நெஞ்சினில் வாழும் குருவே காக்க…

BGM

பெண் : காக்கும் எங்கள் குருவே வாழ்க…
கயிலைமலையோன் சிவனே வாழ்க…
பார்க்கும் விழிகளில் பரமன் வாழ்க…
பரிவுடன் அருளும் ஈசன் வாழ்க…

பெண் : தீராத பிணிகள் தீர்ப்பவன் வாழ்க…
தென்திசை பார்க்கும் குருவே வாழ்க…
போராடும் வாழ்வை தடுப்போன் வாழ்க…
பொன்னிறத்தோனே தேவா வாழ்க…

பெண் : பூக்கும் மலரின் பொழுதுகள் வாழ்க…
புதுப்புனலாக கருணை வாழ்க…
யார்க்கும் உதவும் இறைவன் வாழ்க…
யாவரும் வணங்கும் குருவே வாழ்க…

பெண் : ருத்ராட்ச மாலை தரித்தவன் வாழ்க…
பற்றோடு நினைக்கும் அடியவர் வாழ்க…
வரும்வினை போக்கும் குருவே வாழ்க…

BGM

பெண் : ஆலயம் தோறும் அமர்ந்தாய் போற்றி…
அடியவர் உள்ளம் அறிவாய் போற்றி…
போதனைசாலையில் இருப்பாய் போற்றி…
புண்ணியவடிவே குருவே போற்றி…

பெண் : ஆடைகள் விற்கும் இடங்களிலெல்லாம்…
அய்யா நீயும் வாசம் செய்வாய்…
மருத்துவமனையில் வங்கியில் நீயும்…
மகிழ்வுடன் இருந்து எங்களை காப்பாய்…

பெண் : மனிதரின் உடம்பில் ஒன்பது துளைகள்…
ஒவ்வொருத்துளையும் கோல்வெனவாகும்…
கண்கள் இரண்டும் சூரியன் சந்திரன்…
காதுகள் இரண்டும் செவ்வாய் புதனாம்…

பெண் : மூக்கின் துளைகள் சுக்கிரன் சனியென…
முன்னோர் வகுத்து முறைசெய்தாரே…
வாயில் உன்னை வைத்ததனாலே…
வளமிகு வார்த்தைகள் வழங்கிடு நீயே…

பெண் : முன்வழித் துளையில் ராகு இருக்க…
பின்வழித் துளையில் கேது இருக்க…
அங்கம் முழுதும் நவகோலாக…
எங்களை மண்ணில் அடைத்தவன் நீயே…

BGM

பெண் : தலங்கள் தோறும் விதவிதமான…
கோலம் தாங்கி தரிசனம் தருவாய்…
நலம்பல வேண்டி வருவோர்க்கெல்லாம்…
நயமுடனே நீயும் நல்லருள் புரிவாய்…

பெண் : வைத்தீஸ்வரனார் கோவிலில் நீயும்…
மேற்கினில் நோக்கி மேன்மைகள் தருவாய்…
கஞ்சனூரிலே கீழ்த்திசை பார்த்து…
கைத்தொழுவோரை காத்திடுவாயே…

பெண் : திருவொற்றியூரில் வடதிசை பார்த்து…
திருவருள் நீயும் புரிகின்றாயே…
திருநாவலூரில் நின்ற நிலையிலே…
தரிசனம் தந்து அருள்கின்றாயே…

பெண் : காஞ்சியில் நீயும் வீணை மீட்டும்…
காட்சியை தந்து கவர்ந்திடுவாயே…
ஆந்திர மாநிலம் அனந்தப்பூரிலே…
ஐயப்பன் போலே அமர்திருப்பாயே…

BGM

பெண் : சரணம் சரணம் குருவே சரணம்…
கவசம் போலே காப்பாய் சரணம்…
அருள் மழை நீயே ஐயா சரணம்…
அபயம் அபயம் தருவாய் சரணம்…

BGM


Notes : Guru Kavasam Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Senkathirvanan. குரு கவசம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading