yaar-intha-song-lyrics

யார் இந்த

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்யுவன் ஷங்கர் ராஜாபாஸ் (எ) பாஸ்கரன்

Yaar Intha Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் இந்த பெண்தான் என்று கேட்டேன்…
முன்னாலே…
இவள் எந்தன் பாதி என்று கண்டேன்…
தன்னாலே…

ஆண் : என்னை பார்க்கிறாள்…
ஏதோ கேட்கிறாள்…
எங்கும் இருக்கிறாள்… ஓ… ஓ…

ஆண் : கண்ணால் சிரிக்கிறாள்…
முன்னால் நடக்கிறாள்…
நெஞ்சை கிழிக்கிறாள்… ஓ… ஓ…

ஆண் : கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்…
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்…
என்னை ஏதோ செய்தாள்…

ஆண் : யார் இந்த பெண்தான் என்று கேட்டேன்…
முன்னாலே…
இவள் எந்தன் பாதி என்று கண்டேன்…
தன்னாலே…

BGM

ஆண் : என் வீட்டு முற்றத்தில்…
இவள் போடும் கோலங்கள்…
எப்போதும் வேண்டும் என்று கேட்பேன்…
அணில் ஆடும் கூடத்தில்…
இவள் பாடும் ராகத்தில்…
அதிகாலை சூரியனை பார்பேன்…

ஆண் : கண்ணாடி வளையலை போல…
கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன்…
கால் கட்டும் கொழுசில் என்னோட மனசை…
சேர்த்து கோர்க்கவே தவிப்பேன்…

ஆண் : காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன்…
கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்…

குழு (ஆண்கள்) : என்னை ஏதோ செய்தாள்…

ஆண் : யார் இந்த பெண்தான் என்று கேட்டேன்…
முன்னாலே…
இவள் எந்தன் பாதி என்று கண்டேன்…
தன்னாலே…

BGM

ஆண் : நான் கொஞ்சம் பார்த்தால்…
எங்கேயோ பார்ப்பாள்…
பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்…

ஆண் : எனை பார்த்து சிரிப்பாள்…
நான் பார்த்தால் மறைப்பாள்…
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பாள்…

ஆண் : பெண் நெஞ்சம் புதிர்கதை போல…
எப்போதும் யாரும் அறிந்ததே இல்லை…
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும்…
பெண்கள் மதிப்பதேயில்லை…

ஆண் : மனம் நொந்த பிறகே…
முதல் வார்த்தை சொல்வாள்…
மழை நின்ற பிறகே…
குடை தந்து செல்வாள்…

குழு (ஆண்கள்) : என்னை ஏதோ செய்தாள்…

ஆண் : யார் இந்த பெண்தான் என்று கேட்டேன்…
முன்னாலே…
இவள் எந்தன் பாதி என்று கண்டேன்…
தன்னாலே…

ஆண் : என்னை பார்க்கிறாள்…
ஏதோ கேட்கிறாள்…
எங்கும் இருக்கிறாள்… ஓ… ஓ…

ஆண் : கண்ணால் சிரிக்கிறாள்…
முன்னால் நடக்கிறாள்…
நெஞ்சை கிழிக்கிறாள்… ஓ… ஓ…

ஆண் : கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்…
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்…
என்னை ஏதோ செய்தாள்…

BGM


Notes : Yaar Intha Song Lyrics in Tamil. This Song from Boss (a) Baskaran (2010). Song Lyrics penned by Na. Muthukumar. யார் இந்த பாடல் வரிகள்.