பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | ஷங்கர் மகாதேவன் & வசுந்தரா தாஸ் | ஏ.ஆர்.ரகுமான் | சில்லுனு ஒரு காதல் |
New York Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்…
தனிமை அடர்ந்தது…
பனியும் படர்ந்தது…
கப்பல் இறங்கியே…
காற்றும் கரையில் நடந்தது…
ஆண் : நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே…
நானும் மெழுகுவர்த்தியும்…
தனிமை தனிமையோ…
கொடுமை கொடுமையோ…
—BGM—
ஆண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்…
தனிமை அடர்ந்தது…
பனியும் படர்ந்தது…
கப்பல் இறங்கியே…
காற்றும் கரையில் நடந்தது…
ஆண் : நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே…
நானும் மெழுகுவர்த்தியும்…
தனிமை தனிமையோ…
தனிமை தனிமையோ…
கொடுமை கொடுமையோ…
—BGM—
ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ…
ஆண் : பேச்செல்லாம் தாலாட்டுப் போல…
என்னை உறங்க வைக்க நீ இல்லை…
தினமும் ஒரு முத்தம் தந்து…
காலை காபி கொடுக்க நீ இல்லை…
ஆண் : விழியில் விழும் தூசி தன்னை நாவால்…
எடுக்க நீ இங்கு இல்லை…
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க…
நீ இங்கே இல்லை…
ஆண் : நான் இங்கே…
நீயும் அங்கே…
இந்த தனிமையில் நிமிஷங்கள்…
வருஷம் ஆனதேனோ…
ஆண் : வான் இங்கே…
நீலம் அங்கே…
இந்த உவமைக்கு இருவரும்…
விளக்கமானதேனோ…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
பெண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்…
தனிமை அடர்ந்தது…
பனியும் படர்ந்தது…
—BGM—
ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ…
ஆண் : நாட்குறிப்பில் நூறு தடவை…
உந்தன் பெயரை எழுதும் என் பேனா…
எழுதியதும் எறும்பு மொய்க்க…
பெயரும் ஆனதென்ன தேனா…
ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ…
ஆண் : சில்லென்று பூமி இருந்தும்…
இந்த தருணத்தில் குளிர்காலம்…
கோடை ஆனதேனோ…
ஆண் : வா அன்பே நீயும் வந்தால்…
செந்தணல் கூட பனிகட்டி போல மாறுமே…
ஏ ஏ ஏ ஏ ஏ யே யே…
பெண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்…
தனிமை அடர்ந்தது…
பனியும் படர்ந்தது…
கப்பல் இறங்கியே…
காற்றும் கரையில் நடந்தது…
ஆண் : நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே…
நானும் மெழுகுவர்த்தியும்…
தனிமை தனிமையோ…
தனிமை தனிமையோ…
கொடுமை கொடுமையோ…
—BGM—
Notes : New York Song Lyrics in Tamil. This Song from Sillunu Oru Kadhal (2006). Song Lyrics penned by Vaali. நியூயார்க் நகரம் பாடல் வரிகள்.