Thendral Kaatre Song Lyrics in Tamil

தென்றல் காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாஈரமான ரோஜாவே

Thendral Kaatre Song Lyrics in Tamil


BGM

ஆண் : தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு…
அங்கே சென்று அன்பைச் சொல்லு…
தனிமை கொதிக்குது…
நினைவினில் அனலும் அடிக்குது…
இதயம் துடிக்குது…
துணை வரத்தான்…

ஆண் : தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு…
அங்கே சென்று அன்பைச் சொல்லு…

BGM

பெண் : மேடையேற கூடுமோ…
மீண்டும் நமது நாடகம்…
நானும் நீயும் சேர்வதால்…
யாருக்கென்ன பாதகம்…

ஆண் : யாரைச் சொல்லி நோவது…
காலம் செய்த கோலம்…
உன்னை என்னை வாட்டுது…
காதல் செய்த பாவம்…

பெண் : கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே…
ஆண் : என்ன செய்வது சொல்லடி முல்லையே…
பெண் : கனவில் மட்டுமே கைகள் சேரலாம் கண்ணா…

ஆண் : தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு…
அங்கே சென்று அன்பைச் சொல்லு…

பெண் : தனிமை கொதிக்குது…
நினைவினில் அனலும் அடிக்குது…
இதயம் துடிக்குது…
துணை வரத்தான்…

பெண் : தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு…
அங்கே சென்று அன்பைச் சொல்லு…

BGM

ஆண் : ஜீவன் ரெண்டும் சேர்ந்தது…
தேவன் வகுத்த சாசனம்…
காதல் எந்த நாளிலும்…
கவிதை போல சாஸ்வதம்…

பெண் : இன்று வந்த நேசமோ…
பூர்வ ஜென்ம யோகம்…
இன்னும் ஏழு ஜென்மமும்…
வளரும் இந்த யாகம்…

ஆண் : மீண்டும் மீண்டும் பூமியில் தோன்றலாம்…
பெண் : காதல் ஓவியம் பார்வையில் தீட்டலாம்…
ஆண் : பிரிவு என்பதே உறவுக்காகத்தான் கண்ணே…

பெண் : தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு…
அங்கே சென்று அன்பைச் சொல்லு…

ஆண் : தனிமை கொதிக்குது…
நினைவினில் அனலும் அடிக்குது…
இதயம் துடிக்குது…
துணை வரத்தான்…

ஆண் : தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு…
அங்கே சென்று அன்பைச் சொல்லு…


Notes : Thendral Kaatre Song Lyrics in Tamil. This Song from Eeramaana Rojavae (1991). Song Lyrics penned by Vaali. தென்றல் காற்றே பாடல் வரிகள்.