Tag Archives: மேகா

kani-mozhiyae-song-lyrics

கனிமொழியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக் & மேகாஹாரிஸ் ஜெயராஜ்இரண்டாம் உலகம்

Kani Mozhiyae Song Lyrics in Tamil


BGM

ஆண் : கனிமொழியே…
என்னை கொன்று போகிறாய்…
கடை விழியால்…
என்னை தின்று போகிறாய்…

ஆண் : கனிமொழியே…
என்னை கொன்று போகிறாய்…
கடை விழியால்…
என்னை தின்று போகிறாய்…

ஆண் : இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்…
இமைகள் பறித்து என்னை தூங்க சொல்கிறாய்…
ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்…
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய்…

ஆண் : நான் எட்டு திக்கும் அலைகிறேன்…
நீ இல்லை என்று போவதா…
அடி பற்றி எரியும் காட்டிலே…
நான் பட்டாம்பூச்சி ஆவதா…

ஆண் : நான் எட்டு திக்கும் அலைகிறேன்…
நீ இல்லை என்று போவதா…
அடி பற்றி எரியும் காட்டிலே…
நான் பட்டாம்பூச்சி ஆவதா…

BGM

ஆண் : உந்தன் கன்னத்தோடு…
எந்தன் கன்னம் வைத்தால்…
நானும் மண்ணில் கொஞ்சம் வாழ்ந்திருப்போன்…

ஆண் : அடி உந்தன் கன்னக் குழியில்…
என்னை புதைத்து வைத்தால்…
மண்ணில் மாண்ட பின்னும் வாழ்ந்திருப்பேன்…

ஆண் : ஒரு கள்ளப் பார்வை பார் அழகே…
ஒரு கள்ளப் பார்வை பார் அழகே…
சிறு காதல் பேசும் ஊமை கிளியே…
சிறு காதல் பேசும் ஊமை கிளியே…

ஆண் : நான் தேடி திரியும் வாழ்வே நீ தானே…
தென்றலே வா முன்னே…
முத்தமா கேட்கிறேன்…
முருவல்தான் கேட்கிறேன்…

ஆண் : கனிமொழியே… ம்ம் ம்ம் ம்…
கடைவிழியால்… ம்ம் ம்ம் ம்…

BGM

ஆண் : பறவை பறக்கும் போது…
ஆகாயம் தொலைந்து போகும்…
பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்…

ஆண் : விழி உன்னை காணும் போது…
உலகம் தொலைந்து போகும்…
என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்…

ஆண் : என்னை கட்டி போடும் காந்தச்சிமிலே…

பெண் : ஆஅ… ஆஆ… ஆஅ…

ஆண் : ஒரு பாட்டு பாடு காட்டுக் குயிலே…
என் காலை கனவின் ஈரம் நீதானே…
வாழலாம் வா பெண்ணே…
வலது கால் எட்டு வை…
வாழ்க்கையை தொட்டு வை…

ஆண் : கனிமொழியே…
கனிமொழியே…
என்னை கொன்று போகிறாய்…
கடை விழியால்…
கடை விழியால்…
என்னை தின்று போகிறாய்…

பெண் : இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்…
இமைகள் பறித்து என்னை தூங்க சொல்கிறாய்…

ஆண் : ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்…
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய்…

ஆண் : நான் எட்டு திக்கும் அலைகிறேன்…
நீ இல்லை என்று போவதா…
அடி பற்றி எரியும் காட்டிலே…
நான் பட்டாம்பூச்சி ஆவதா…

ஆண் : நான் எட்டு திக்கும் அலைகிறேன்…
நீ இல்லை என்று போவதா…
அடி பற்றி எரியும் காட்டிலே…
நான் பட்டாம்பூச்சி ஆவதா…

BGM


Notes : Kani Mozhiyae Song Lyrics in Tamil. This Song from Irandaam Ulagam (2013). Song Lyrics penned by Vairamuthu. கனிமொழியே பாடல் வரிகள்.


முன் அந்தி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & மேகாஹாரிஸ் ஜெயராஜ்ஏழாம் அறிவு

Mun Andhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : முன் அந்திச்சாரல் நீ…
முன் ஜென்மத் தேடல் நீ…
நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில்…
வரும் பாடல் நீ…

ஆண் : பூ பூத்த சாலை நீ…
புலராத காலை நீ…
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்…
வரும் கனவு நீ…

ஆண் : ஹேஹே… பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே…
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
தன்னால் உள்ளே உள்ளே…
உருகுது நெஞ்சமே…

ஆண் : வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே…
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
வந்தாய் இன்பம் சொல்ல…
வார்த்தைகள் கொஞ்சமே…

ஆண் : முன் அந்திச்சாரல் நீ…
முன் ஜென்மத் தேடல் நீ…
நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில்…
வரும் பாடல் நீ…

ஆண் : பூ பூத்த சாலை நீ…
புலராத காலை நீ…
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்…
வரும் கனவு நீ…

BGM

ஆண் : ஓ… அழகே ஓ… இமை அழகே ஏ…
கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓரழகே…
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே…

ஆண் : அடி உன்னைத் தீண்டத்தானே…
மேகம் தாகம் கொண்டு மழையாய் தூவாதோ…
வந்து உன்னைத் தொட்ட பின்னே…
தாகம் தீர்ந்ததென்று கடலில் சேராதோ… ஓஓ…

ஆண் : ஹேஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே…
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
தன்னால் உள்ளே உள்ளே…
உருகுது நெஞ்சமே…

ஆண் : ஓஹோ ஹோ… வா வா பெண்ணே பெண்ணே…
பெண்ணே பெண்ணே…
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
வந்தாய் இன்பம் சொல்ல…
வார்த்தைகள் கொஞ்சமே…

BGM

ஆண் : அதிகாலை ஓஹோ…
அந்தி மாலை ம்ம்…
உன்னை தேடி பார்க்கச் சொல்லிப் போராடும்…
உனைக் கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்…

ஆண் : பெண்ணே பம்பரத்தை போலே…
என்னை சுற்ற வைத்தாய் எங்கும் நில்லாமல்…
தினம் அந்தரத்தின் மேலே…
என்னைத் தொங்க வைத்தாய் காதல் சொல்லாமல்…

ஆண் : ஹேஹே… பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே…
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
தன்னால் உள்ளே உள்ளே…
உருகுது நெஞ்சமே…

ஆண் : வா வா வா…

ஆண் : வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே…
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
வந்தாய் இன்பம் சொல்ல…
வார்த்தைகள் கொஞ்சமே…

ஆண் : முன் அந்திச்சாரல் நீ…
முன் ஜென்மத் தேடல் நீ…
நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில்…
வரும் பாடல் நீ…

ஆண் : பூ பூத்த சாலை நீ…
புலராத காலை நீ…
காலை நீ…
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்…
வரும் கனவு நீ…

BGM


Notes : Mun Andhi Song Lyrics in Tamil. This Song from 7 Aum Arivu (2011). Song Lyrics penned by Na. Muthukumar. முன் அந்தி பாடல் வரிகள்.