Tag Archives: கிருஷ்ணகுமார் குன்னத்

thamirabarani-raani-song-lyrics-in-tamil

தாமிரபரணி ராணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்கிருஷ்ணகுமார் குன்னத் & ஸ்ரேயா கோஷல்பரத்வாஜ்ஐயா

Thamirabarani Raani Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் தாமிரபரணி ராணி…
செந்தாமரை மேனி…
நான் தாலி கட்ட…
காத்துகிடக்கேன் வா வா…

பெண் : அட வல்ல நாட்டு மலையே…
என் வாலிப துரையே…
நான் தாலி கட்ட…
சம்மதம் சொன்னேன் வா வா…

ஆண் : ஓ… ஜோசியத்த பார்த்தாச்சு…
ஜாதகமும் சேர்ந்தாச்சு…
பத்திரிகை அடிச்சாச்சு…
பந்த கால் நட்டாச்சு…

பெண் : அச்சதையும் போட்டாச்சு…
அப்புறம் என்னாச்சு…

ஆண் : ஏ… தாமிரபரணி ராணி…
செந்தாமரை மேனி…
நான் தாலி கட்ட…
காத்துகிடக்கேன் வா வா…

BGM

பெண் : மணக்க மணக்க அயிர மீன வாங்கி…
ருசி ருசியாக சமைப்பேன்…

பெண் : நான் தேனையும் ஊத்தி வருப்பேன்தானே…
உனக்கின்னு காத்து கெடப்பேன்…

ஆண் : கம்ப கூழ நீயும் கரைச்சி தந்தா…
அதுதான் சக்கர பொங்கல்…

ஆண் : உன் கன்னத்தில் தேச்சு வென் பளிங்காச்சு…
கதவோரத்து செங்கல்…

பெண் : குழம்புக்கு நான் அரைச்ச மஞ்சள்…
செவக்கயிலே உன் நெனப்பு…
கூட்டான்சோறு ஆக்கையிலே…
பானையில் பொங்கும் உன் சிரிப்பு…

ஆண் : ஏ… பாலூத்தி செஞ்சானா…
பனி ஊத்தி செஞ்சானா…
உன் உதடு ஒவ்வொன்னா…
தேன் ஊத்தி செஞ்சானா…

பெண் : ஓ… உதிரத்து உரியாக…
உள் மனம் ஆடுதய்யா…

ஆண் : ஏ… தாமிர பரணி ராணி…
செந்தாமரை மேனி…
நான் தாலி கட்ட காத்துகிடக்கேன் வா வா…

BGM

பெண் : ஹே… கடலை காட்டில் நடந்து போகும் போது…
தொலைஞ்சது வெள்ளி கொலுசு…

பெண் : உன் கை விரல் கோத்து நடக்கும் போது…
காணாம போச்சு மனசு…

ஆண் : நூறு ஏக்கர் மல்லி தோட்டம் போட்டேன்…
வாசனை என்ன வாசம்…

ஆண் : உன் ஏழரை இஞ்சு இடுப்பின் வாசம்…
ஆளையும் தூக்கி வீசும்…

பெண் : நீ கடிச்ச வேப்பம் குச்சி…
நட்டு வச்சா துளிர்க்குதய்யா…
உன் பாதத்தை நெனச்ச ஓட தண்ணி…
பதநீராக இனிக்குதையா…

ஆண் : ஏ… மயிலிறகு கண்ணால…
மனசுக்குள்ள கீறுறியே…
கேழ் வரகு கூழாக…
என் உசுர கிண்டுறாயே…

பெண் : ஏ… என் ரவிக்கையில போட்ட கொக்கி…
பட்டுனு தெறிக்குதய்யா…

ஆண் : ஏ… தாமிர பரணி ராணி…
செந்தாமரை மேனி…
நான் தாலி கட்ட…
காத்துகிடக்கேன் வா வா…

பெண் : அட வல்ல நாட்டு மலையே…
என் வாலிப துரையே…
நான் தாலி கட்ட…
சம்மதம் சொன்னேன் வா வா…

ஆண் : ஓ… ஜோசியத்த பார்த்தாச்சு…
ஜாதகமும் சேர்ந்தாச்சு…
பத்திரிகை அடிச்சாச்சு…
பந்த கால் நட்டாச்சு…

பெண் : அச்சதையும் போட்டாச்சு…
அப்புறம் என்னாச்சு…


Notes : Thamirabarani Raani Song Lyrics in Tamil. This Song from Ayya (2004). Song Lyrics penned by Pa.Vijay. தாமிரபரணி ராணி பாடல் வரிகள்.


உயிரின் உயிரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகிருஷ்ணகுமார் குன்னத் & சுசித்ராஹாரிஸ் ஜெயராஜ்காக்க காக்க

Uyirin Uyire Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிரின் உயிரே உயிரின் உயிரே…
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்…
ஈர அலைகள் நீரை வாரி…
முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன்…

BGM

ஆண் : நகரும் நெருப்பாய் கொழுந்து விட்டெறிந்தேன்…
அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்…
காலை பனியாக என்னை வாரிகொண்டாய்…

ஆண் : நேரம் கூட எதிரி ஆகிவிட…
யுகங்கள் ஆக வேடம் மாறிவிட…
அணைத்து கொண்டாயே…
பின்பு ஏனோ சென்றாய்…

ஆண் : உயிரின் உயிரே உயிரின் உயிரே…
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்…
ஈர அலைகள் நீரை வாரி…
முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன்…
முழுதும் வேர்கின்றேன்… முழுதும் வேர்கின்றேன்…

BGM

ஆண் : சுவாசமின்றி தவிக்கிறேனே…
உனது மூச்சில் பிழைக்கிறேனே…
இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே…

ஆண் : நினைவு எங்கோ நீந்தி செல்ல…
கனவு வந்து கண்ணை கிள்ள…
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே…
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்…
உன்னை அன்றி யாரை தேடும்…
விலகி போகாதே தொலைந்து போவேனே…
நான் நான் நான்…

ஆண் : உயிரின் உயிரே உயிரின் உயிரே…
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்…
ஈர அலைகள் நீரை வாரி…
முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன்…

BGM

ஆண் : இரவின் போர்வை என்னை சூழ்ந்து…
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து…
விடியலை தேடினேன்…
உன்னிடம் வா பெண்ணே…

ஆண் : பாதமெங்கும் சாவின் ரணங்கள்…
நரகமாகும் காதல் கணங்கள்…
ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே…
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்…
தவணை முறையில் மரணம் நிகழும்…
அருகில் வாராயோ விரல்கள் தாராயோ… நீ நீ நீ…

ஆண் : உயிரின் உயிரே உயிரின் உயிரே…
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்…
ஈர அலைகள் நீரை வாரி…
முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன்…

ஆண் : நகரும் நெருப்பாய் கொழுந்து விட்டெறிந்தேன்…
அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்…
காலை பனியாக என்னை வாரிகொண்டாய்…

ஆண் : நேரம் கூட எதிரி ஆகிவிட…
யுகங்கள் ஆக வேடம் மாறிவிட…
அணைத்து கொண்டாயே பின்பு ஏனோ சென்றாய்…
ஏனோ சென்றாய்… ஏ… ஏ…

BGM


Notes : Uyirin Uyire Song Lyrics in Tamil. This Song from Kaakha Kaakha (2003). Song Lyrics penned by Thamarai. உயிரின் உயிரே பாடல் வரிகள்.


நீயே நீயே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகிருஷ்ணகுமார் குன்னத்ஸ்ரீகாந்த் தேவாஎம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி

Neeye Neeye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீயே நீயே நானே நீயே…
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே…

—BGM—

ஆண் : நீயே நீயே நானே நீயே…
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே…
தந்தை நீயே தோழன் நீயே…
தாலாட்டிடும் என் தோழி நீயே…

ஆண் : ஏப்ரல் மே வெயிலும் நீயே…
ஜூன் ஜூலை தென்றலும் நீயே…
ஐ லைக் யூ…
செப்டம்பா் வான் மழை நீயே…
அக்டோபா் வாடையும் நீயே…
ஐ தேங்க் யூ…

ஆண் : உன்னை போல் ஓா் தாய்தான் இருக்க…
என்ன வேண்டும் வாழ்வில் ஜெய்க்க…

ஆண் : நீயே நீயே நானே நீயே…
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே…
தந்தை நீயே தோழன் நீயே…
தாலாட்டிடும் என் தோழி நீயே…

—BGM—

ஆண் : என் கண்ணில் ஈரம் வந்தால்…
என் நெஞ்சில் பாரம் வந்தால்…
சாய்வேனே உன் தோளிலே…

ஆண் : கண்ணீரே கூடாதென்றும்…
என் பிள்ளை வாடாதென்றும்…
சொல்வாயே அந்நாளிலே…

ஆண் : இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும்…
உன் மகனாகும் வரம் தருவாய்…

ஆண் : உன் வீட்டு சின்ன குயில்…
நீ கொஞ்சும் வண்ண குயில் நான்தானே…
நான் வயது வளா்ந்தால் கூட…
மடி ஊஞ்சல் வேண்டும் ஆட…

—BGM—

ஆண் : வேருக்கு நீரை விட்டாய்…
நீராய் கண்ணீரை விட்டாய்…
பூவாச்சு என் தோட்டமே…

ஆண் : உன் பேரை சொல்லும் பிள்ளை…
போராடி வெல்லும் பிள்ளை…
பூமாலை என் தோளிலே…

ஆண் : இளம்பிறை என்று இருந்தவன் என்னை…
முழு நிலவாய் நீ வடிவமைத்தாய்…

ஆண் : வற்றாத கங்கை நதியாய்…
பெய்யாத மங்கை நதியாய்…
நீ வாழ்க…

ஆண் : புது விடியல் வேண்டும் எனக்கு…
எந்த நாளும் நீதான் கிழக்கு…

ஆண் : நீயே நீயே நானே நீயே…
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே…
தந்தை நீயே தோழன் நீயே…
தாலாட்டிடும் என் தோழி நீயே…

ஆண் : ஏப்ரல் மே வெயிலும் நீயே…
ஜூன் ஜூலை தென்றலும் நீயே…
ஐ லைக் யூ…
செப்டம்பா் வான் மழை நீயே…
அக்டோபா் வாடையும் நீயே…
ஐ தேங்க் யூ…

ஆண் : உன்னை போல் ஓா் தாய்தான் இருக்க…
என்ன வேண்டும் வாழ்வில் ஜெய்க்க…

—BGM—


Notes : Neeye Neeye Song Lyrics in Tamil. This Song from M. Kumaran Son of Mahalakshmi (2004). Song Lyrics penned by Vaali. நீயே நீயே பாடல் வரிகள்.