sollamathan-song-lyrics

சொல்லாமத்தான்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜ்ஸ்ரீநிஷாஎன்.ஆர்.ரகுணந்தன்புலிக்குத்தி பாண்டி

Sollamathan Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சொல்லாமத்தான் சொல்லிப்புட்டான் மிச்சம் இல்லாம…
என் கண்ணு ரெண்ட ஆக்கிபுட்டான் தூக்கம் இல்லாம…
ஹே காடு கரை மேடு எல்லாம் அச்சம் இல்லாம…
அட கத்த வச்சான் அவன் பேரை கூச்சம் இல்லாம…

பெண் : சும்மா சும்மா கண்ணாடிய பாக்க வச்சானே…
பத்து முறை பவுடர் அள்ளி பூச வச்சானே…
வித விதமா வெக்கப்பட கத்து தந்தானே…
ரக ரகமா கனவுலதான் முத்தம் தந்தானே…

பெண் : ஹேய்… பம்பரமா என்னை அவன் ஆக்கிபுட்டானே…
அவன் பார்வையாலே கட்டி வச்சு சுத்த விட்டானே…
ஹேய்… பம்பரமா என்னை அவன் ஆக்கிபுட்டானே…
அவன் பார்வையாலே கட்டி வச்சு சுத்தவிட்டானே…

—BGM—

பெண் : சொல்லாமத்தான் சொல்லிப்புட்டான் மிச்சம் இல்லாம…
என் கண்ணு ரெண்ட ஆக்கிபுட்டான் தூக்கம் இல்லாம…
ஹே… காடு கரை மேடு எல்லாம் அச்சம் இல்லாம…
அட கத்த வச்சான் அவன் பேரை கூச்சம் இல்லாம…

—BGM—

பெண் : அவன் போட்ட சட்டை இருக்கு…
நான் போட்டு பாக்க ஆசை வந்துச்சு…
என் முந்தானையில் அவன் மொகத்த…
நான் தொட்டு பாக்க போதை வந்துச்சு…

பெண் : கையும் காலும்தான் ரெக்க ஆணுச்சு…
வானம் தாண்டிதான் போக தோனுச்சு…
கையும் காலும்தான் ரெக்க ஆணுச்சு…
வானம் தாண்டிதான் போக தோனுச்சு…

பெண் : அரணா கொடியாட்டம்…
அவன சுத்தி கெடப்பானே…
அரை நொடி பிரிஞ்சாலும்…
நான் பித்து பிடிப்பேனே…

—BGM—

பெண் : அவன் கால் அழக பார்த்து பார்த்துதான்…
வைகை நதிக்கரைய கட்டி வச்சாங்க…
அவன் தோள் அழக பார்த்த பின்னாலே…
வருஷ நாட்டு மலை சின்னதுனாங்க…

பெண் : ஹையோ… பயபுள்ள செக்க செவப்புடா…
கண்ணும் முடியும்தான் உடம்பில் கருப்புடா…
ஹையோ… பயபுள்ள செக்க செவப்புடா…
கண்ணும் முடியும்தான் உடம்பில் கருப்புடா…

பெண் : அழகர் தேராட்டாம்…
அவன் நடையும் இருக்கும்டா…
ஆயுள் முழுக்க நான்…
அவன் நிழல்லா நடப்பேன்டா…

—BGM—


Notes : Sollamathan Song Lyrics in Tamil. This Song from Pulikkuthi Pandi (2021). Song Lyrics penned by Mohan Raj. சொல்லாமத்தான் பாடல் வரிகள்.