பூங்குருவி பாடடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மனோதீபக்சுந்தர காண்டம்

Poonkuruvi Paadadi Song Lyrics in Tamil


ஆண் : பட்டு பூச்சி வாழ்க்கையது எட்டு நாள்தானே…
பறந்து வரும் ஈசலுக்கு ஒருநாள்தானே…
அவை பறக்கலையா… சிறகு விரிக்கலையா…
வாழ்வை ரசிக்கலையா…

BGM

ஆண் : பூங்குருவி பாடடி சுபராகம் தேடித்தான்…
மன பாரம் தீரதான்…
பூங்குருவி பாடடி சுபராகம் தேடித்தான்…
மன பாரம் தீரதான்…

ஆண் : வாழ்க்கையே ஒரு வரவு செலவு…
வந்ததே ஒரு வரவுதான்…
பூமியில் வந்த கணக்கு முடிஞ்சு…
போகிறோம் அது செலவுதான்…

ஆண் : பூங்குருவி பாடடி சுபராகம் தேடித்தான்…
மன பாரம் தீரதான்…

BGM

ஆண் : கண்ணிமைக்கும் வேளை வானவில்லின் வாழ்க்கை…
அதையெண்ணி வானவில் அழலாமா…
அழகியகோலம் கெடலாமா…

BGM

ஆண் : நூலுமில்லை அங்கே வாலுமில்லை இங்கே…
பறக்குது வாழ்வெனும் காத்தாடி…
அடிக்கிற காற்றின் திசைதேடி…

ஆண் : இன்று யார் இனி நாளையார்…
அதை யார்சொல்வது…
வாழும்நாள் வரை வாழுவோம்…
விதி யார்வெல்வது…

ஆண் : ஆனது ஆகட்டும் பார்ப்போம்…
என வாழும் மனம் வேண்டும்…

ஆண் : பூங்குருவி பாடடி சுபராகம் தேடித்தான்…
மன பாரம் தீரதான்…

BGM

ஆண் : பூப்பதொரு காலம்… காய்ப்பதொரு காலம்…
இலையுதிர்காலமும் ஓர் காலம்…
என்றும் இல்லையே கார்காலம்…

BGM

ஆண் : காலமொரு ஓலை கொண்டுவரும் நாளை…
நடப்பது காலத்தின் ராஜாங்கம்…
மீறிட யாருக்கு அதிகாரம்…

ஆண் : மெய்யிலா உடல் ஒன்றையே இங்கு மெய்யென்கிறோம்…
கானலை ஒரு கங்கையாய் தினம் நாம் காண்கிறோம்…

ஆண் : பட்டினத்தார் அவர் போலே…
மனம் வேண்டும் இனி மேலே…

ஆண் : பூங்குருவி பாடடி சுபராகம் தேடித்தான்…
மன பாரம் தீரதான்…
பூங்குருவி பாடடி சுபராகம் தேடித்தான்…
மன பாரம் தீரதான்…

ஆண் : வாழ்க்கையே ஒரு வரவு செலவு…
வந்ததே ஒரு வரவுதான்…
பூமியில் வந்த கணக்கு முடிஞ்சு…
போகிறோம் அது செலவுதான்…

ஆண் : பூங்குருவி பாடடி சுபராகம் தேடித்தான்…
மன பாரம் தீரதான்…


Notes : Poonkuruvi Paadadi Song Lyrics in Tamil. This Song from Sundara Kandam (1992). Song Lyrics penned by Pulamaipithan. பூங்குருவி பாடடி பாடல் வரிகள்.