Oru Naalaikkul Song Lyrics in Tamil

ஒரு நாளுக்குள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & ரீட்டாயுவன் ஷங்கர் ராஜாயாரடி நீ மோகினி

Oru Naalaikkul Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு நாளுக்குள் எத்தனை கனவு…
உன் பார்வையில் விழுகிற பொழுது…
தொடு வானத்தைத் தொடுகிற உறவு…
ஓஓ ஓஓ… ஓஹோ ஓ ஓ ஓ…

ஆண் : ஒரு நாளுக்குள் எத்தனை கனவு…
உன் பார்வையில் விழுகின்ற பொழுது…
தொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு…
ஓஓ ஓஓஹோ…

பெண் : ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்…
இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்…
இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்…
என்றாலும் கால்கள் மிதக்கும்… ஓஹோ…

ஆண் : ஒரு நாளுக்குள் எத்தனை கனவு…
உன் பார்வையில் விழுகிற பொழுது…
தொடு வானத்தைத் தொடுகிற உறவு…
ஓஓ ஓஓ… ஓஹோ ஓ ஓ ஓ…

BGM

ஆண் : நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்…
நான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தாய்…
நீ காதலா இல்லை கடவுளா…
புரியாமல் திணறிப் போனேன்…

ஆண் : யாரேனும் அழைத்தால் ஒரு முறைதான்…
நீதானோ என்றே திரும்பிடுவேன்…
தினம் இரவினில் உன் அருகினில்…
உறங்காமல் உறங்கிப் போவேன்…

பெண் : இது ஏதோ புரியா உணர்வு
இதைப் புரிந்திட முயன்றிடும் பொழுது…
ஒரு பனிமலை ஒரு எரிமலை…
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்…

BGM

ஆண் : ஒரு நாளுக்குள் எத்தனை கனவு…
உன் பார்வையில் விழுகிற பொழுது…
தொடு வானத்தைத் தொடுகிற உறவு…
ஓஓ ஓஓ… ஓஹோ ஓ ஓ ஓ…

BGM

ஆண் : நதியாலே பூக்கும் மரங்களுக்கு…
நதி மீது இருக்கும் காதலினை…
நதி அறியுமா கொஞ்சம் புரியுமா…
கரையோட கனவுகள் எல்லாம்…

ஆண் : உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்…
அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்…
நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்…
பிறக்காத கனவுகள் பிறக்கும்…

பெண் : தன் வாசனை பூ அறியாது…
கண்ணாக்கு கண் கிடையாது…
அது புரியலாம் பின்பு தெரியலாம்…
அது வரையில் நடப்பது நடக்கும்…

BGM


Notes : Oru Naalaikkul Song Lyrics in Tamil. This Song from Yaaradi Nee Mohini (2008). Song Lyrics penned by Na. Muthu Kumar. ஒரு நாளுக்குள் பாடல் வரிகள்.