nee-otha-sollu-sollu-song-lyrics-in-tamil

நீ ஒத்த சொல்லு சொல்லு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதசிரஞ்சித் & நீத்தாவிஜய் ஆண்டனிஅவள் பெயர் தமிழரசி

Nee Otha Sollu Sollu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ ஒத்த சொல்லு சொல்லு…
அந்த ஆகாயத்தையும்…
நீரு நிலத்தையும்…
காத்தையும் நெருப்பையும்…
கொண்டாந்து தாரேன்… பரிசா…

பெண் : உன் ஒத்த துணை போதும்…
அந்த ஆகாயமும் நீரு நிலமும்…
காத்தும் நெருப்பும்…
அத விட என்ன பெரிசா… பெரிசா…

ஆண் : தாயின் முகம் கண்டதில்ல…
தாலேலோ கேட்டதில்ல…
உன் முகம் பார்த்த பின்னே…
நான் வாழ ஆசைபட்டேன்…

பெண் : தாயாக மாறுகிறேன்…
தாலாட்டு பாடுகிறேன்…

ஆண் : தானானே தனனனனா…
தனனனனனனா…

ஆண் : நீ ஒத்த சொல்லு சொல்லு…
அந்த ஆகாயத்தையும்…
நீரு நிலத்தையும்…
காத்தையும் நெருப்பையும்…
கொண்டாந்து தாரேன் பரிசா…

பெண் : உன் ஒத்த துணை போதும்…
அந்த ஆகாயமும் நீரு நிலமும்…
காத்தும் நெருப்பும்…
அத விட என்ன பெரிசா பெரிசா…

BGM

ஆண் : வெந்து காஞ்ச பொட்டலுல…
வேரும் தீஞ்சு நிக்கையில…
பிஞ்சு காலில் மழைய கொண்டு…
வந்த சாமி நீதானே…

பெண் : அத்து வான காட்டுக்குள்ள…
நான் பாராங்கல்லா கிடக்கையில…
கோபுரத்து உச்சியில என்ன…
ஏத்துன சாமி நீதானே…

ஆண் : ஏ… கத்தாழையும் செந்தாழையா…
ஆனதென்ன உன்னால…
உள்ள காத்தாடிதான் நெஞ்சுக்குள்ள…
சுத்துதடி தன்னால…

பெண் : பாய் போட்டு தூங்கையில…
வாராயே கனவுக்குள்ள
என்னனு கேக்கையில…
நநனே நனனன…

ஆண் : நீ ஒத்த சொல்லு சொல்லு…
அந்த ஆகாயத்தையும்…
நீரு நிலத்தையும்…
காத்தையும் நெருப்பையும்…
கொண்டாந்து தாரேன் பரிசா…

BGM

ஆண் : நீ கொடுத்த தண்ணியில…
தீர்த்த வாசம் இருக்கும் புள்ள…
உன் வார்த்த விசிறிய போல…
வெக்கையில் எனக்கு வீசுதடி…

பெண் : அம்ம ஊசி தழும்பு கூட…
மாஞ்சி போகும் உண்மையில…
அன்பு கூட்டி நீதான் தந்த…
முத்த ஈரம் காயாதோ…

ஆண் : நீ வெல்ல கட்டி வச்சிருக்க…
தொண்ட குழி ஓரத்துல…
உன் ஒத்த ஜடை என்ன தொட…
கேக்குறியே ஜாடையில…

ஆண் : காதல் ஒரு சூதாட்டம் தான்…
கூட நின்ன ஞாயம் இல்ல…
பெண் : ஹ்ம்ம்… ம்ம்ம்…
ஆண் : ஒண்ணா சேர்ந்த தாயும் புள்ள…
பெண் : நநனே நநனே…

ஆண் : நீ ஒத்த சொல்லு சொல்லு…
அந்த ஆகாயத்தையும்…
நீரு நிலத்தையும்…
காத்தையும் நெருப்பையும்…
கொண்டாந்து தாரேன் பரிசா…

பெண் : உன் ஒத்த துணை போதும்…
அந்த ஆகாயமும் நீரு நிலமும்…
காத்தும் நெருப்பும்…
அத விட என்ன பெரிசா… பெரிசா…

ஆண் : தாயின் முகம் கண்டதில்ல…
தாலேலோ கேட்டதில்ல…
உன் முகம் பார்த்த பின்னே…
நான் வாழ ஆசைபட்டேன்…

பெண் : உறவாக வந்தவளா…
உயிராக சேர்ந்தவளா…

ஆண் : ஆத்தா நீ சாமி போல…
சொல்ல போன அதுக்கும் மேல…


Notes : Nee Otha Sollu Sollu Song Lyrics in Tamil. This Song from Aval Peyar Tamilarasi (2010). Song Lyrics penned by Ekadesi. நீ ஒத்த சொல்லு சொல்லு பாடல் வரிகள்.