mazhai-nindra-song-lyrics-in-tamil

மழை நின்ற பின்பும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கல்யாணிவித்யாசாகர்ராமன் தேடிய சீதை

Mazhai Nindra Song Lyrics in Tamil


BGM

பெண் : மழை நின்ற பின்பும் தூரல் போல…
உனை மறந்த பின்பும் காதல்…
அலை கடந்த பின்பும் ஈரம் போல…
உனை பிரிந்த பின்பும் காதல்…

பெண் : எனக்கும் காதல் பிறந்திருக்கு…
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா… ஹோய்…
எனக்குள் இதயம் தனித்திருக்கு…
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா…

பெண் : மழை நின்ற பின்பும் தூரல் போல…
உனை மறந்த பின்பும் காதல்…
அலை கடந்த பின்பும் ஈரம் போல…
உனை பிரிந்த பின்பும் காதல்…

BGM

பெண் : நீர் துளிகள் நிலம் விழுந்தால்…
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்…
என் மனதில் நீ நுழைந்தால்…
மௌனம் கூட இசை அமைக்கும்…

பெண் : பூங்குயில்கள் மறைந்திருந்தால்…
கூவும் ஓசை மறைவதில்லை…
தாமரையாய் நான் இருந்தும்…
தாகம் இன்னும் அடங்கவில்லை…

பெண் : வானும் இணைந்து நடக்கும்…
இந்த பயணத்தில் என்ன நடக்கும்…
வானம் இருக்கும் வரைக்கும்…
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்…

பெண் : மழை துளி பனி துளி கலைந்த பின்னே…
அது மறுபடி இரண்டென பிரிந்திடுமோ…

பெண் : மழை நின்ற பின்பும் தூரல் போல…
உனை மறந்த பின்பும் காதல்…
அலை கடந்த பின்பும் ஈரம் போல…
உனை பிரிந்த பின்பும் காதல்…

BGM

பெண் : கண்ணிமைகள் கை தட்டியே…
உன்னை மெல்ல அழைக்கிறதே…
உன் செவியில் விழவில்லையா…
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே…

பெண் : உன்னருகே நான் இருந்தும்…
உண்மை சொல்ல துணிவு இல்லை…
கைகளிலே விரல் இருந்தும்…
கைகள் கோர்க்க முடியவில்லை…

பெண் : உன்னை எனக்கு பிடிக்கும்…
அதை சொல்வதில்தானே தயக்கம்…
நீயே சொல்லும் வரைக்கும்…
என் காதலும் காத்து கிடக்கும்…

பெண் : தினம் தினம் கனவினில் வந்துவிடு…
நம் திருமண அழைப்பிதழ் தந்துவிடு…

பெண் : மழை நின்ற பின்பும் தூரல் போல…
உனை மறந்த பின்பும் காதல்…
அலை கடந்த பின்பும் ஈரம் போல…
உனை பிரிந்த பின்பும் காதல்…

பெண் : எனக்கும் காதல் பிறந்திருக்கு…
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா… ஹோய்…
எனக்குள் இதயம் தனித்திருக்கு…
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா…


Notes : Mazhai Nindra Song Lyrics in Tamil. This Song from Raman Thediya Seethai (2008). Song Lyrics penned by Kabilan. மழை நின்ற பின்பும் பாடல் வரிகள்.