kavithaigal-sollava-song-lyrics-in-tamil

கவிதைகள் சொல்லவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்கார்த்திக் ராஜாஉள்ளம் கொள்ளை போகுதே

Kavithaigal Sollava Song Lyrics in Tamil


BGM

ஆண் : கவிதைகள் சொல்லவா…
உன் பெயர் சொல்லவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…

ஆண் : ஓவியம் வரையவா…
உன் கால் தடம் வரையவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…

ஆண் : யார் அந்த ரோஜாபூ…
என் கனவில் மெதுவாக…
பூ வீசி போனால்…
அவள் யாரோ… ஓஹோ…

ஆண் : உள்ளம் கொள்ளை போகுதே…
உன்னை கண்ட நாள் முதல்…
உள்ளம் கொள்ளை போகுதே…
அன்பே என் அன்பே…

ஆண் : உள்ளம் கொள்ளை போகுதே…
உன்னை கண்ட நாள் முதல்…
உள்ளம் கொள்ளை போகுதே…
அன்பே என் அன்பே…

BGM

பெண் : புல்வெளி மீது நடக்காதே…
ஹே… பறவைகள் இருக்கு பூங்காவில்…
அதைதான் படித்திட காற்றுக்கு…
ஓ… தெரியாதே தெரியாதே…

ஆண் : பூக்களை பூக்களை தீண்டாதே…
மலர் காட்சியில் சொல்கிற சொற்கள் இது…
அதைதான் வண்டுகள் எப்பவும்தான்…
கேட்காதே கேட்காதே…

பெண் : எல்லை கோடுகள் தாண்டாதே…
உலக தேசங்கள் சொல்லும்…

ஆண் : பறவை கூட்டங்கள் கேட்காதே…
பறக்கும் பறக்கும் நம்மை போல்…

ஆண் : ஹோஹோ… ஹோஹோ…
ஹோஹோ… ஹோஹோ…

பெண் : ஹோஹோ… ஹோஹோ…
ஹோஹோ…

ஆண் : கவிதைகள் சொல்லவா…
உன் பெயர் சொல்லவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…

BGM

பெண் : காற்றென காற்றென நான் மாறி…
உன் சுவாசத்தை நானும் கடன் வாங்கி…
ரகசியமாய் நான் சுவாசிக்கவா…
ஓ… சுவாசிக்கவா சுவாசிக்கவா…

ஆண் : மேகங்கள் மேகங்கள் நானாகி…
உன் கூந்தலின் வண்ணத்தை கடன் வாங்கி…
வனத்தின் இரவுக்கு கொடுத்திடவா…
ஓ… கொடுத்திடவா கொடுத்திடவா…

பெண் : கடலின் அலையாக நான் மாறி…
உனது பேர் சொல்லி வரவா…

ஆண் : உந்தன் கைக்குட்டை கடன் வாங்கி…
நிலவின் களங்கம் துடைக்கவா…

ஆண் : ஹோஹோ… ஹோஹோ…
ஹோஹோ… ஹோஹோ…
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…

பெண் : கவிதைகள் சொல்லவா…
உன் பெயர் சொல்லவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…

ஆண் : ஓவியம் வரையவா…
உன் கால் தடம் வரையவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…

ஆண் & பெண் : உள்ளம் கொள்ளை போகுதே…
உன்னை கண்ட நாள் முதல்…
உள்ளம் கொள்ளை போகுதே…
அன்பே என் அன்பே…

ஆண் & பெண் : கவிதைகள் சொல்லவா…
உன் பெயர் சொல்லவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…


Notes : Kavithaigal Sollava Song Lyrics in Tamil. This Song from Ullam Kollai Poguthae (2001). Song Lyrics penned by Pa Vijay. கவிதைகள் சொல்லவா பாடல் வரிகள்.