பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சுகா | தனுஷ் & அனன்யா பட் | இளையராஜா | விடுதலை |
Onnoda Nadandhaa Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒன்னோட நடந்தா…
கல்லான காடு…
—BGM—
ஆண் : ஒன்னோட நடந்தா…
கல்லான காடு…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…
—BGM—
பெண் : நீ போகும் பாதை…
பூங்கால்களாலே…
பொன்னான வழியாய் மாறிடுமே…
ஆண் : ஒன்னோட நடந்தா…
கல்லான காடு…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…
ஆண் : நீ போகும் பாதை…
பூங்கால்களாலே…
பொன்னான வழியாய் மாறிடுமே…
பெண் : ராசாவே உன்னால ஆகாசம் விடியம்…
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே…
ஆண் : ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்…
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே…
பெண் : சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே…
ஆண் : ஒன்னோட நடந்தா…
கல்லான காடு…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…
—BGM—
பெண் : காத்தில் வரும் புழுதியப்போல்…
நம்ம தூத்துகிற ஊரு இது…
துக்கத்தில துவண்டிருந்தா…
அது தூக்கிவிட நெனைக்காது…
ஆண் : முன்னேறிப்போக முட்டுக்கட்டை ஏது…
பின் திரும்பி பாக்காதே…
ஒந்துணைக்கு நாந்தான் எந்துணைக்கு நீதான்…
என்றும் இது மாறாதே…
ஆண் : நல்வாக்கு ஊர் சொல்லும் காலம் வரும்…
அல்லல் இருளை விரட்டும் விடியல் வரும்…
பெண் : கல்லான காடு…
ஒன்னோட நடந்தா…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…
ஆண் : பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…
பெண் : ஆராரிராரோ… ஆராரிராரோ…
ஆராரிராரோ… ஆராரிராரோ…
ஆராரிராரி… ராரிராரோ…
ஆராரிராரி… ராரிராரோ…
—BGM—
பெண் : ஏத்தி வச்ச தீபமொண்ணு…
எந்த சாமிகளும் பாக்கலியே…
சேத்து வச்ச கனவுகள…
நிறைவேத்தி விட யாருமில்லையே…
ஆண் : நிக்காத காலம் நேராக ஓடும்…
எப்போதும் மாறாது…
இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும்…
இல்லாமல் போகாது…
ஆண் : நம்பிக்கை கொண்டார்க்கு நாளை உண்டு…
நம் வாழ்வில் என்றென்றும் சந்தோஷம் பொங்கி வரும்…
பெண் : கல்லான காடு…
ஒன்னோட நடந்தா…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…
பெண் : ராசாவே உன்னால ஆகாசம் விடியம்…
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே…
ஆண் : ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்…
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே…
பெண் : சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே…
ஆண் : ஒன்னோட நடந்தா…
கல்லான காடு…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…
Notes : Onnoda Nadandhaa Song Lyrics in Tamil. This Song from Viduthalai (2023). Song Lyrics penned by Suka. ஒன்னோட நடந்தா பாடல் வரிகள்.