kannil-anbai-song-lyrics-in-tamil

கண்ணில் அன்பை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பத்மநாபன்ஜேம்ஸ் வசந்தன்ஈசன்

Kannil Anbai Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணில் அன்பைச் சொல்வாளே…
யாரும் இல்லை இவள் போலே…
துன்பம் என்னைத் தீண்டாமல்…
தாயாய் காப்பாள் மண் மேலே…

ஆண் : கண்ணில் அன்பைச் சொல்வாளே…
யாரும் இல்லை இவள் போலே…
துன்பம் என்னைத் தீண்டாமல்…
தாயாய் காப்பாள் மண் மேலே…

ஆண் : சில நேரம் புன்னகையாலே…
பூக்கள் தந்திடுவாள்…
சில நேரம் சண்டைகளாலே…
என்னை வென்றிடுவாள்…

ஆண் : பேசாமல் மௌனத்தினாலே…
மனதைச் சொல்லிடுவாள்…
இவள் சொந்தம் போதும் என்னும்…
எண்ணம் தந்திடுவாள்…

ஆண் : கண்ணில் அன்பைச் சொல்வாளே…
யாரும் இல்லை இவள் போலே…
துன்பம் என்னைத் தீண்டாமல்…
தாயாய் காப்பாள் மண் மேலே…

BGM

ஆண் : உலகம் எந்தன் உலகம் எங்கும்…
இவளே வந்திடுவாள்…
உயரம் கொஞ்சம் வளர்ந்த போதும்…
குழந்தை என்றிடுவாள்…

ஆண் : உள்ளங்கையில் பாசம் வைத்து…
உணவைத் தந்திடுவாள்…
உறங்கும் போதும் உறங்காமல்…
என் அருகில் நின்றிடுவாள்…

ஆண் : இவள் போலே இவளைப் போலே…
வாழ்வில் நண்பர்கள் இல்லை…
மறு ஜென்மம் வந்தால் கூட…
நான் தான் இவளின் பிள்ளை…
என்றும் என்றென்றும்…
இவள் சொந்தம் வேண்டும்…

ஆண் : கண்ணில் அன்பைச் சொல்வாளே…
யாரும் இல்லை இவள் போலே…
துன்பம் என்னைத் தீண்டாமல்…
தாயாய் காப்பாள் மண் மேலே…

BGM

ஆண் : கண்ணீர்த் துளிகள் வேண்டும் என்று…
கண்ணைக் கேட்கின்றேன்…
கண்ணீர்த் துடைக்க இவளும் வந்தால்…
தினமும் அழுகின்றேன்…

ஆண் : என்னை நானே காண்பது போலே…
இவளைப் பார்க்கின்றேன்…
என்றும் எங்கும் வழித் துணையாக…
இவளைக் கேட்கின்றேன்…

ஆண் : உறவென்னும் வார்த்தைக்குத்தான்…
அர்த்தம் இங்கே கண்டேன்…
இவள் அன்பின் வெளிச்சம் முன்னே…
இரவும் பகல்தான் என்பேன்…
என்றும் என்றென்றும்…
இவள் சொந்தம் வேண்டும்…

ஆண் : கண்ணில் அன்பைச் சொல்வாளே…
யாரும் இல்லை இவள் போலே…
துன்பம் என்னைத் தீண்டாமல்…
தாயாய் காப்பாள் மண் மேலே…

ஆண் : சில நேரம் புன்னகையாலே…
பூக்கள் தந்திடுவாள்…
சில நேரம் சண்டைகளாலே…
என்னை வென்றிடுவாள்…

ஆண் : பேசாமல் மௌனத்தினாலே…
மனதைச் சொல்லிடுவாள்…
இவள் சொந்தம் போதும் என்னும்…
எண்ணம் தந்திடுவாள்…

ஆண் : கண்ணில் அன்பைச் சொல்வாளே…
யாரும் இல்லை இவள் போலே…
துன்பம் என்னைத் தீண்டாமல்…
தாயாய் காப்பாள் மண் மேலே…


Notes : Kannil Anbai Song Lyrics in Tamil. This Song from Easan (2010). Song Lyrics penned by Na Muthukumar. கண்ணில் அன்பை பாடல் வரிகள்.