பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | உன் கண்ணில் நீர் வழிந்தால் |
Kannil Enna Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண்ணில் என்ன கார்காலம்…
கன்னங்களில் நீர்க்கோலம்…
மனமே நினைவே மறந்துவிடு…
துணை நான் அழகே துயரம்விடு…
ஆண் : விழியில் விழும் துளி…
என் மார்பில் வீழ்ந்ததே கண்ணே…
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா…
நியாயமா பெண்ணே… ஓ…
ஆண் : கண்ணில் என்ன கார்காலம்…
கன்னங்களில் நீர்க்கோலம்…
—BGM—
பெண் : நானே உன் சுமையாக ஏன் வந்தேன்…
சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்…
நான் உறங்கும் நாள் வேண்டும்…
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்…
பெண் : நான் உறங்கும் நாள் வேண்டும்…
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்…
என் கண்ணில் நீர் வேண்டும்…
சுகமாக அழ வேண்டும்…
ஆண் : கண்ணில் என்ன கார்காலம்…
கன்னங்களில் நீர்க்கோலம்…
—BGM—
பெண் : இருள் மூடும் கடலோடு நானிங்கே…
என் தோணி கரை சேரும் நாளெங்கே…
பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்…
பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்…
நிழலாக நீ வந்தால் இது போதும் பேரின்பம்…
ஆண் : கண்ணில் என்ன கார்காலம்…
கன்னங்களில் நீர்க்கோலம்…
மனமே நினைவே மறந்துவிடு…
துணை நான் அழகே துயரம்விடு…
ஆண் : விழியில் விழும் துளி…
என் மார்பில் வீழ்ந்ததே கண்ணே…
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா…
நியாயமா பெண்ணே… ஓ…
ஆண் : கண்ணில் என்ன கார்காலம்…
கன்னங்களில் நீர்க்கோலம்…
Notes : Kannil Enna Song Lyrics in Tamil. This Song from Un Kannil Neer Vazhindal (1985). Song Lyrics penned by Vairamuthu. கண்ணில் என்ன கார்காலம் பாடல் வரிகள்.