kannalanae-enadhu-kannai-song-lyrics-bombay

கண்ணாளனே எனது கண்ணை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான் & கே.எஸ். சித்ராஏ. ஆர். ரகுமான்பம்பாய்

Kannalanae enadhu kannai Song Lyrics in Tamil


—BGM—

குழு (பெண்கள்) : சல சல சல சோலை கிளியே…
சோலையதேடிக்க…
சிலு சிலு சிலு சா்க்கரநிலவே…
மாலைய மாத்திக்க…
மாமன்காரன் ராத்திரி வந்தா…
மடியில கட்டிக்க…
மாமன் தந்த சங்கதி எல்லாம்…
மனசுள வச்சுக்க…

குழு (பெண்கள்) : மாமன்காரன் ராத்திரி வந்தா…
மடியில கட்டிக்க…
மாமன் தந்த சங்கதி எல்லாம்…
மனசுள வச்சுக்க…

பெண் : கண்ணாளனே எனது கண்ணை…
நேற்றோடு காணவில்லை…
என் கண்களைப் பறித்துக்கொண்டும்…
ஏனின்னும் பேசவில்லை…
ஆளான ஒரு சேதி அறியாமலே…
அலைபாயும் சிறு பேதை நானோ…

பெண் : உன் பேரும் என் பேரும் தெரியாமலே…
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ…
வாய் பேசவே வாய்ப்பில்லையே…
வலி தீர வழி என்னவோ…

பெண் : கண்ணாளனே எனது கண்ணை…
நேற்றோடு காணவில்லை…
என் கண்களைப் பறித்துக்கொண்டும்…
ஏனின்னும் பேசவில்லை…
ஆளான ஒரு சேதி அறியாமலே…
அலைபாயும் சிறு பேதை நானோ…

பெண் : உன் பேரும் என் பேரும் தெரியாமலே…
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ…
வாய் பேசவே வாய்ப்பில்லையே…
வலி தீர வழி என்னவோ…

—BGM—

பெண் : உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்…
தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்…
எந்தன் நுாலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம்…
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்…

பெண் : ரத்தம் கொதிகொதிக்கும்…
உலை கொதித்திடும் நீா்க்குமிழ் போல…
சித்தம் துடிதுடிக்கும்…
புயல் எதிர்த்திடும் ஓா் இலை போல…
பனித்துளிதான் என்ன செய்யுமோ…
மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது…
மூங்கில் காடென்று ஆயினள் மாதல்…

பெண் : கண்ணாளனே எனது கண்ணை…
நேற்றோடு காணவில்லை…
என் கண்களைப் பறித்துக்கொண்டும்…
ஏனின்னும் பேசவில்லை…
ஆளான ஒரு சேதி அறியாமலே…
அலைபாயும் சிறு பேதை நானோ…

பெண் : உன் பேரும் என் பேரும் தெரியாமலே…
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ…
வாய் பேசவே வாய்ப்பில்லையே…
வலி தீர வழி என்னவோ…

—BGM—

குழு (பெண்கள்) : சல சல சல சோலை கிளியே…
சோலைய தேடிக்க…
சிலு சிலு சிலு சா்க்கர நிலவே…
மாலைய மாத்திக்க…
மாமன்காரன் ராத்தரி வந்தா…
மடியில கட்டிக்க…
மாமன் தந்த சங்கதி எல்லாம்…
மனசுள வச்சுக்க…

குழு (பெண்கள்) : மாமன்காரன் ராத்தரி வந்தா…
மடியில கட்டிக்க…
மாமன் தந்த சங்கதி எல்லாம்…
மனசுள வச்சுக்க…

பெண் : ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்…
உன்னோடு நான் கண்டுகொண்டேன்…
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்…
என்னோடு நான் கண்டுகொண்டேன்…

பெண் : என்னை மறந்துவிட்டேன்…
இந்த உலகத்தில் நானில்லை நானில்லை…
உன்னை இழந்துவிட்டால்…
எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை…
இது கனவா… இல்லை நினைவா…
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்…
உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்…

பெண் : கண்ணாளனே எனது கண்ணை…
நேற்றோடு காணவில்லை…
என் கண்களைப் பறித்துக்கொண்டு…
ஏனின்னும் பேசவில்லை…
ஆளான ஒரு சேதி அறியாமலே…
அலைபாயும் சிறு பேதை நானோ…

பெண் : உன் பேரும் என் பேரும் தெரியாமலே…
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ…
வாய் பேசவே வாய்ப்பில்லையே…
வலி தீர வழி என்னவோ…

பெண் : கண்ணாளனே எனது கண்ணை…
நேற்றோடு காணவில்லை…
என் கண்களைப் பறித்துக்கொண்டும்…
ஏனின்னும் பேசவில்லை…
கண்ணாளனே…


Notes : Kannalanae enadhu kannai Song Lyrics in Tamil. This Song from Bombay (1995). Song Lyrics penned by Vairamuthu. கண்ணாளனே எனது கண்ணை பாடல் வரிகள்.