கனா காணும் காலங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஷ் ராகவேந்திரா, மதுமதி & சுல்தான் கான்யுவன் ஷங்கர் ராஜா7ஜி ரெயின்போ காலனி

Kanaa Kaanum Kaalangal Song Lyrics in Tamil


BGM

பெண் : கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள்…
கலையாத கோலம் போடுமோ…
விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள்…
தனியாக ஓடம் போகுமோ…

ஆண் : இது இடைவெளி குறைகிற தருணம்…
இரு இதயத்தில் மெல்லிய சலனம்…
இனி இரவுகள் இன்னொரு நரகம்…
இளமையின் அதிசயம்…

பெண் : இது கத்தியில் நடந்திடும் பருவம்…
தினம் கனவினில் அவரவர் உருவம்…
சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும்…
கடவுளின் ரகசியம்…

ஆண் & பெண் : உலகில் மிக இனித்திடும் பாஷை…
இதயம் ரெண்டு பேசிடும் பாஷை…
மெதுவா இனி மழை வரும் ஓசை… ஆஆ…

ஆண் : கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள்…
கலையாத கோலம் போடுமோ… ஓஹோ…
விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள்…
தனியாக ஓடம் போகுமோ…

BGM

பெண் : நனையாத காலுக்கெல்லாம்…
கடலோடு உறவில்லை…
நான் வேறு நீ வேர் என்றால்…
நட்பு என்று பேரில்லை…

ஆண் : பறக்காத பறவைக்கெல்லாம்…
பறவை என்று பெயரில்லை…
திறக்காத மனதில் எல்லாம்…
களவு போக வழியில்லை…

ஆண் : தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ…
திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ…

பெண் : தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும்…
தோழமையில் அது கிடையாதே…
தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்…
தடுத்திடவே இங்கு வழி இல்லையே…

BGM

ஆண் : கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள்…
கலையாத கோலம் போடுமோ…

பெண் : விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள்…
தனியாக ஓடம் போகுமோ…

BGM

ஆண் : இது என்ன காற்றில் இன்று ஈர பதம் குறைகிறதே…
ஏகாந்தம் பூசி கொண்டு அந்தி வேலை அழிகிறதே…
அதி காலை நேரம் எல்லாம் தூங்காமல் விடிகிறதே…
விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே…

பெண் : நடை பாதை கடையில் உன் பெயர் படித்தால்…
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்…

ஆண் & பெண் : பட படப்பாய் சில கோபங்கள் தோன்றும்…
பனி துளியாய் அது மறைவது ஏன்…
நில நடுக்கம் அது கொடுமைகள் இல்லை…
மன நடுக்கம் அது மிக கொடுமை…

BGM

பெண் : கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள்…
கலையாத கோலம் போடுமோ… ஓஹோ…
விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள்…
தனியாக ஓடம் போகுமோ…


Notes : Kanaa Kaanum Kaalangal Song Lyrics in Tamil. This Song from 7G Rainbow Colony (2004). Song Lyrics penned by Na. Muthukumar. கனா காணும் காலங்கள் பாடல் வரிகள்.