kadai-kannaaley-song-lyrics

கடைக் கண்ணாலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஸ்ரேயா கோஷல் & வருண் பரந்தாமன்டி. இமான்பூமி

Kadai Kannaaley Song Lyrics in Tamil


பெண் : அண்ணலும் நோக்கினான்…
அவளும் நோக்கினாள்…
பார்த்த நொடி யுகமாய் நீள…
பதைப் பதைத்து…
கண் திறப்பேன்…
பின்னும் ஆற்றாமையால்…
அல்லலுற்று கவண் வீசினாள்…
கடைக் கண்ணாலே…

BGM

பெண் : கடைக் கண்ணாலே ரசித்தேனே…
கவின் பூவே கண்ணாளா…
குடைக்குள்ளாடும் மழைக்காக…
எதிர் பார்த்தேன் இந்நாளா… ஆ…

BGM

பெண் : கடைக் கண்ணாலே ரசித்தேனே…
கவின் பூவே கண்ணாளா…
குடைக்குள்ளாடும் மழைக்காக…
எதிர் பார்த்தேன் இந்நாளா…

பெண் : தரை நில்லா நில்லா…
இருக் காலோடு கரை…
கொள்ளாக் கொள்ளா…
அலை நீரோடு…
உறங்காமலே… ஏ… ஏ…
தொடரும் உன் ஞாபகம்…
உயிர்த் தேடலில்…
இடறும் உன் பூ முகம்…

பெண் : கண்ணாளனே… ஏ… ஏ…
கண்ணாளனே… ஏ… ஏ…
உன்னிடமே… ஏ… ஏ…
என் மனமே… ஏ… ஏ…

பெண் : கடைக் கண்ணாலே ரசித்தேனே…
கவின் பூவே கண்ணாளா… ஆ…

BGM

பெண் : அண்ணலும் நோக்கினான்…
அவளும் நோக்கினாள்…

BGM

பெண் : ஒளிந்தேன் மறைந்தேன்…
எதைப் பார்த்தும் நான்…
உனைச் சேர்ந்த பின்பு…
பயம் நீங்கினேன்…

பெண் : படர்ந்தேன் அலைந்தேன்…
கொடிப் போல நான்…
மணி மார்பில் சாய்ந்து…
மலர் சேர்க்கிறேன்…

பெண் : விழியை இமையை விரித்தேன்…
உனை என் இளமையின் அரண்மனை…
வரவேற்க்குதே…

பெண் : விரலை நகத்தை கடித்தே எழுதும்…
கவிதையை இதழ்களும்…
அரங்கேற்றுதே…

பெண் : இந்த நொடிப் போதும்…
தேனே சிந்தி உரைந்தேனே…
நானே உடலும் உயிரும்…
மெழுகாய் உருகும்…

பெண் : கண்ணாளனே… ஏ… ஏ…
கண்ணாளனே… ஏ… ஏ…
உன்னிடமே… ஏ… ஏ…
என் மனமே… ஏ… ஏ…

பெண் : கடைக் கண்ணாலே ரசித்தேனே…
கவின் பூவே கண்ணாளா…
குடைக்குள்ளாடும் மழைக்காக…
எதிர் பார்த்தேன் இந்நாளா…

பெண் : தரை நில்லா நில்லா…
இருக் காலோடு கரை…
கொள்ளாக் கொள்ளா…
அலை நீரோடு உறங்காமலே…
தொடரும் உன் ஞாபகம்…
உயிர்த் தேடலில்…
இடறும் உன் பூ முகம்…

பெண் : கண்ணாளனே… ஏ… ஏ…
கண்ணாளனே… ஏ… ஏ…
உன்னிடமே… ஏ… ஏ…
என் மனமே… ஏ… ஏ…

பெண் : கடைக் கண்ணாலே…
ரசித்தேனே…


Notes : Kadai Kannaaley Song Lyrics in Tamil. This Song from Bhoomi (2020). Song Lyrics penned by Thamarai. கடைக் கண்ணாலே பாடல் வரிகள்.