கடைக் கண்ணாலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஸ்ரேயா கோஷல் & வருண் பரந்தாமன்டி. இமான்பூமி

Kadai Kannaaley Song Lyrics in Tamil


பெண் : அண்ணலும் நோக்கினான்…
அவளும் நோக்கினாள்…
பார்த்த நொடி யுகமாய் நீள…
பதைப் பதைத்து…
கண் திறப்பேன்…
பின்னும் ஆற்றாமையால்…
அல்லலுற்று கவண் வீசினாள்…
கடைக் கண்ணாலே…

BGM

பெண் : கடைக் கண்ணாலே ரசித்தேனே…
கவின் பூவே கண்ணாளா…
குடைக்குள்ளாடும் மழைக்காக…
எதிர் பார்த்தேன் இந்நாளா… ஆ…

BGM

பெண் : கடைக் கண்ணாலே ரசித்தேனே…
கவின் பூவே கண்ணாளா…
குடைக்குள்ளாடும் மழைக்காக…
எதிர் பார்த்தேன் இந்நாளா…

பெண் : தரை நில்லா நில்லா…
இருக் காலோடு கரை…
கொள்ளாக் கொள்ளா…
அலை நீரோடு…
உறங்காமலே… ஏ… ஏ…
தொடரும் உன் ஞாபகம்…
உயிர்த் தேடலில்…
இடறும் உன் பூ முகம்…

பெண் : கண்ணாளனே… ஏ… ஏ…
கண்ணாளனே… ஏ… ஏ…
உன்னிடமே… ஏ… ஏ…
என் மனமே… ஏ… ஏ…

பெண் : கடைக் கண்ணாலே ரசித்தேனே…
கவின் பூவே கண்ணாளா… ஆ…

BGM

பெண் : அண்ணலும் நோக்கினான்…
அவளும் நோக்கினாள்…

BGM

பெண் : ஒளிந்தேன் மறைந்தேன்…
எதைப் பார்த்தும் நான்…
உனைச் சேர்ந்த பின்பு…
பயம் நீங்கினேன்…

பெண் : படர்ந்தேன் அலைந்தேன்…
கொடிப் போல நான்…
மணி மார்பில் சாய்ந்து…
மலர் சேர்க்கிறேன்…

பெண் : விழியை இமையை விரித்தேன்…
உனை என் இளமையின் அரண்மனை…
வரவேற்க்குதே…

பெண் : விரலை நகத்தை கடித்தே எழுதும்…
கவிதையை இதழ்களும்…
அரங்கேற்றுதே…

பெண் : இந்த நொடிப் போதும்…
தேனே சிந்தி உரைந்தேனே…
நானே உடலும் உயிரும்…
மெழுகாய் உருகும்…

பெண் : கண்ணாளனே… ஏ… ஏ…
கண்ணாளனே… ஏ… ஏ…
உன்னிடமே… ஏ… ஏ…
என் மனமே… ஏ… ஏ…

பெண் : கடைக் கண்ணாலே ரசித்தேனே…
கவின் பூவே கண்ணாளா…
குடைக்குள்ளாடும் மழைக்காக…
எதிர் பார்த்தேன் இந்நாளா…

பெண் : தரை நில்லா நில்லா…
இருக் காலோடு கரை…
கொள்ளாக் கொள்ளா…
அலை நீரோடு உறங்காமலே…
தொடரும் உன் ஞாபகம்…
உயிர்த் தேடலில்…
இடறும் உன் பூ முகம்…

பெண் : கண்ணாளனே… ஏ… ஏ…
கண்ணாளனே… ஏ… ஏ…
உன்னிடமே… ஏ… ஏ…
என் மனமே… ஏ… ஏ…

பெண் : கடைக் கண்ணாலே…
ரசித்தேனே…


Notes : Kadai Kannaaley Song Lyrics in Tamil. This Song from Bhoomi (2020). Song Lyrics penned by Thamarai. கடைக் கண்ணாலே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top