kaathodu-kaathanen-song-lyrics

காத்தோடு காத்தானேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்தனுஷ் & அதிதி ராவ் ஹைதாரிஜி. வி. பிரகாஷ்குமார்ஜெயில்

Kaathodu Kaathanen Song Lyrics in Tamil


ஆண் : ஓ பெண்ணே… ஓ பெண்ணே…
நீ தானே… நீ தானே…
ஓ பெண்ணே… ஓ பெண்ணே…
நீ தானே… நீ தானே…

BGM

ஆண் : காத்தோடு காத்தானேன்…
கண்ணே உன் மூச்சானேன்…
நீரோடு நீரானேன்…
உன் கூட மீனானேன்…

ஆண் : காகிதம் போலே ஒன்மேல…
ஓவியம் வரையும் நகமானேன்…
மோகத்தில் பெண்ணே உன்னாலே…
முத்தங்கள் வாழும் முகமானேன்…

ஆண் : இலை மறைவில் மலர்ந்திருந்தோம்…
மழைதுளியாய்… கலந்திருந்தோம்…

பெண் : காத்தோடு காத்தானேன்…
கண்ணே உன் மூச்சானேன்…
நீரோடு நீரானேன்…
உன் கூட மீனானேன்…

BGM

பெண் : நானனா… நானனா…
நானனா… நானனா…
நானனா… நானனா…
நானனா… ஆ…

ஆண் : இலையில் மலரின் கைரேகை…
இமைகள் யாவும் மயில்தோகை…

பெண் : ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்…
ஆனந்த வன்மம் மறவேனே…

ஆண் : மழலை போலவே மடியில் தவழ்ந்த…
மயக்கம் தீரவே இல்லை…

பெண் : இரண்டு பேருமே இனிமேல் யாரோ…
இறைவன் கைகளில் பிள்ளை…

ஆண் : கண்மணி பூ பூக்க…
காதல் விதையானோம்…

பெண் : காமன் நாட்குறிப்பில்…
காதல் கதையானோம்… ஓ… ஓ…

பெண் : காத்தோடு காத்தானேன்…
கண்ணே உன் மூச்சானேன்…
நீரோடு நீரானேன்…
உன் கூட மீனானேன்…

BGM

ஆண் : பூவின் மீது கூத்தாடும்…
போதை வண்டு போலானேன்…

பெண் : புல்லின் மீது பூமியைப்போல்…
உந்தன் பாரம் நான் கண்டேன்…

ஆண் : இதழின் ஆற்றிலே குதிக்கும்போது…
கரைகள் என்பதே இல்லை…

பெண் : கரைகள் இல்லை பரவாயில்லை…
கடலே காதலின் எல்லை…

ஆண் & பெண் : வேர்வை துளிகளிலே…
என்னை நனைத்தாயே… ஏ… ஏ…
இதயம் நொறுங்கத்தான்…
இறுக்கி அணைத்தாயே… ஏ… ஏ…

ஆண் : காத்தோடு காத்தானேன்…
கண்ணே உன் மூச்சானேன்…
நீரோடு நீரானேன்…
உன் கூட மீனானேன்…

ஆண் & பெண் : ஆயிரம் ஆசைகள் தாலாட்ட…
உன் மார்பினில் மெல்ல விழுந்தேனே…
விழிகள் மூடியே நடந்ததெல்லாம்…
கண்டேன் ரசித்தேன் சுகமானேன்…

ஆண் & பெண் : இலை மறைவில் மலர்ந்திருந்தோம்…
மழை துளியாய் கலந்திருந்தோம்…

BGM


Notes : Kaathodu Kaathanen Song Lyrics in Tamil. This Song from Jail. Song Lyrics penned by Kabilan. காத்தோடு காத்தானேன் பாடல் வரிகள்.