Category Archives: கருமேகங்கள் கலைகின்றன

Megangal Song Lyrics in Tamil

மேகங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்கருமேகங்கள் கலைகின்றன

Megangal Song Lyrics in Tamil


BGM

பெண் : மேகங்கள் கலைந்ததென்ன…
வானம் தொலைந்ததென்ன…
உயிரைத் துரத்திக் கொண்டே…
உடல்கள் அலைவதென்ன…

பெண் : மேகங்கள் கலைந்ததென்ன…
வானம் தொலைந்ததென்ன…
உயிரைத் துரத்திக் கொண்டே…
உடல்கள் அலைவதென்ன…
உயிர்கள் அலைவதென்ன…

BGM

பெண் : உறவு பிரிவதால் உணர் பிரியுமா…
உண்மைக்குத் தூக்கம் வருமா…
குளத்தில் வீழ்வதால் நிழலும் நனையுமா…
நெஞ்சுக்குள் வலி நிற்குமா…

பெண் : வாழ்வு தேடியே வாழ்வு தீருமா…
பாதை தீராலாம் பயணம் தீருமா…
அலையும் பிழைப்பிலே அமைதி கிடைக்குமா…
உன் அன்பு உன்னை தொடுமா…

பெண் : மேகங்கள் கலைந்ததென்ன…
வானம் தொலைந்ததென்ன…
உயிரைத் துரத்திக் கொண்டே…
உடல்கள் அலைவதென்ன…
உயிர்கள் அலைவதென்ன…

BGM

பெண் : திசையை தொலைத்தவன் தேடிப் போகிறான்…
செல்வது எந்த திசையோ…
உடைந்த தோள்களில் மலையைச் சுமப்பது…
உனக்கு வந்த விதியோ…

பெண் : முதுமை என்பதே உடலின் தண்டனை…
இளமை தவறுகள் முதுமை தண்டனை…
மனிதன் ஒருபக்கம் வாழ்க்கை ஒருபக்கம்…
இரண்டும் முரண் படுதே…

பெண் : மேகங்கள் கலைந்ததென்ன…
வானம் தொலைந்ததென்ன…
உயிரைத் துரத்திக் கொண்டே…
உடல்கள் அலைவதென்ன…
உயிர்கள் அலைவதென்ன…


Notes : Megangal Song Lyrics in Tamil. This Song from Karumegangal Kalaigindrana (2023). Song Lyrics penned by Vairamuthu. மேகங்கள் பாடல் வரிகள்.


செவ்வந்தி பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசத்ய பிரகாஷ்ஜி. வி. பிரகாஷ் குமார்கருமேகங்கள் கலைகின்றன

Sevvandhi Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : செவ்வந்தி பூவே…
செவ்வந்தி பூவே…
சேமிச்ச உசுரே வா… ஓ…

ஆண் : அம்மைக்குப் பிறகு…
ஆண்டவன் எனக்கு…
காமிச்ச உறவே வா… ஓ…

ஆண் : நீ போன பிறகு மூச்சே போச்சு…
நீ வந்த உடன் உயிர் வந்துச்சு…
நீ இல்லா பொழப்பு தண்ணியில்லா காடு…
நீ வந்த பிறகு ஈரம் வந்துச்சு…

ஆண் : உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…
உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…

BGM

ஆண் : தெய்வத்த எனக்கு காட்டிய தெய்வம்…
ஓய்யார அழகே நீதான்…

ஆண் : கல்லுக்குள் இருந்தும் கண்ணீர் கசியும்…
காட்டிய தேவதை நீதான்…

ஆண் : கரும்பு மொழியும்…
குறும்பு நகையும்…
கவல போக்குது தாயே…

ஆண் : எனது குல தெய்வம் நீயே…
எனக்கு அருள் கொடு தாயே…

ஆண் : உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…
உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…

BGM

ஆண் : ஒத்த இலையில் நிக்கிற மரம் போல்…
உன்னச் சுமந்து நானிருக்கேன்…
ஒன்ன நெனச்சு உப்பு கண்ணீர் வடிச்சு…
உசுர சுமந்து நான் கெடக்கேன்…

ஆண் : பரட்ட தலையில சுருட்ட முடியில…
கூடு கட்டிக்கொள்ளு குயிலே…
காடு விட்டு வந்த மயிலே…
கண்ணுக்கு ஒளி தந்த வெயிலே…

ஆண் : உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…
உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…

ஆண் : செவ்வந்தி பூவே…
செவ்வந்தி பூவே…
சேமிச்ச உசுரே வா… ஓ…

ஆண் : அம்மைக்குப் பிறகு…
ஆண்டவன் எனக்கு…
காமிச்ச உறவே வா… ஓ…

ஆண் : நீ போன பிறகு மூச்சே போச்சு…
நீ வந்த உடன் உயிர் வந்துச்சு…
நீ இல்லா பொழப்பு தண்ணியில்லா காடு…
நீ வந்த பிறகு ஈரம் வந்துச்சு…

ஆண் : உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…
உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…


Notes : Sevvandhi Poove Song Lyrics in Tamil. This Song from Karumegangal Kalaigindrana (2023). Song Lyrics penned by Vairamuthu. செவ்வந்தி பூவே பாடல் வரிகள்.


சுத்தமுள்ள நெஞ்சம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்கருமேகங்கள் கலைகின்றன

Suththamulla Nenjam Song Lyrics in Tamil


BGM

பெண் : சுத்தமுள்ள நெஞ்சம்… ஓஓ…
சுத்தி சுத்தி கொஞ்சும்…
பால போல உள்ளம்… ஓஓ…
பாசத்துக்கு கெஞ்சும்…

பெண் : இது போல் ஒரு உறவு…
இந்த உலகில் இருக்கா…
இதயம் தேடும் இதயம் போல…
புனிதம் இருக்கா…

பெண் : கண்ணிலே சிந்தும் நீருக்கு…
ஒரு கணக்கு இருக்கா…
கூடி வந்த பந்தம்… ஓஓ…
சாகும் வரை சொந்தம்…
கூடி வந்த பந்தம்… ஓஓ…
சாகும் வரை சொந்தம்…

BGM

பெண் : பாசங்கள் பாதி நேசங்கள் பாதி…
அன்பு வந்த பின்னே…
மண்ணில் நானும் வாழ…
தெம்பு வந்ததெனக்கு…

பெண் : பாழ்பட்ட நிலத்தில்…
பால் மழை விழுந்தா…
புத்தம் புது பச்சை கச்சை கட்டி கொண்டு…
புல்லு வரும் மொளச்சி…

பெண் : கடலை தாண்டியும் மண்ணிருக்கு…
உடலைத் தாண்டியும் அன்பிருக்கு…
மாதாவின் கோலத்தில் மனித உருவத்தில்…
தெய்வங்கள் இங்கிருக்கு…

பெண் : சோத்துக்கேத்த உப்பு… ஓஓ…
சொந்தமென்ன தப்பு…
சோத்துக்கேத்த உப்பு… ஓஓ…
சொந்தமென்ன தப்பு…

பெண் : இது போல் ஒரு உறவு…
இந்த உலகில் இருக்கா…
இதயம் தேடும் இதயம் போல…
புனிதம் இருக்கா…

பெண் : கண்ணிலே சிந்தும் நீருக்கு…
ஒரு கணக்கு இருக்கா…
கூடி வந்த பந்தம்… ஓஓ…
சாகும் வரை சொந்தம்
கூடி வந்த பந்தம்… ஓஓ…
சாகும் வரை சொந்தம்…

BGM

பெண் : சொந்தங்கள் அனைத்தும்…
தொடர்வதுமில்லை…
பந்தங்கள் சில பந்தங்கள் வந்து…
கலைவதுமில்லை…

பெண் : வெயிலுக்கு குடையாய்…
புயலுக்கு துணையாய்…
கருணையில் உடன் துணைவர…
ஒரு காரணமில்லை…

பெண் : காவலை போல் ஒரு சொந்தமுண்டா…
கண்ணீரை போல் ஒரு தீர்த்தமுண்டா…
தியாகத்தைப் போலொரு தெய்வ குணத்தினை…
உலகத்தில் பார்ததுண்டா…

பெண் : சுத்த மனம் போல… ஓஓ…
சொந்த பந்தம் இல்ல…
சுத்த மனம் போல… ஓஓ…
சொந்த பந்தம் இல்ல…

பெண் : இது போல் ஒரு உறவு…
இந்த உலகில் இருக்கா…
இதயம் தேடும் இதயம் போல…
புனிதம் இருக்கா…

பெண் : கண்ணிலே சிந்தும் நீருக்கு…
ஒரு கணக்கு இருக்கா…
கூடி வந்த பந்தம்… ஓஓ…
சாகும் வரை சொந்தம்…
கூடி வந்த பந்தம்… ஓஓ…
சாகும் வரை சொந்தம்…


Notes : Suththamulla Nenjam Song Lyrics in Tamil. This Song from Karumegangal Kalaigindrana (2023). Song Lyrics penned by Vairamuthu. சுத்தமுள்ள நெஞ்சம் பாடல் வரிகள்.