Category Archives: சர்பத்

சர்பத்

theera-theera-song-lyrics

தீர தீர

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்அஜேஷ் & சைந்தவிஅஜேஷ்சர்பத்

Theera Theera Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தீர தீர என்னை கொல்லாதே…
உள்ளே சிரிக்காதே…
கண்கள் என்றும் பொய்கள் சொல்லாதே…
உள்ளே நடிக்காதே…

பெண் : கைகள் போடும் நத்தை கோலம்…
காதல் பேசும் வார்த்தை ஆகும்…
கால்கள் போடும் தத்தை தாளம்…
உன்னை தேடி தாவுதே…

ஆண் : ஓர் நொடியில் நுழைந்தாய் உயிரில்…
இனி நான் சிறையில்…
எனை கைது செய்து போகும் கண்கள்…

ஆண் : ஓர் மழையில் கரைந்தேன் துளியில்…
இழுத்தாய் நதியில்…
முதல் காதல் சொல்லு வாட்டாதே…

—BGM—

பெண் : குறுந்தகவல் திரையில் கவிதைகளாக…
குறு குறு புன்னகையை தூவுதே…
தொடுதிரையில் தவழும் பெருவிரலாக…
கருவிழி உன் அழகை தீண்டுதே…

ஆண் : ஏதேதோ தேடும் உள்ளம்…
எதுவரை மௌனம் வளர்பாயோ…
ஏராளம் பேசாமல் நீ…
ஒரு முறை உன் காதலை சொல்லிவிடு…

பெண் : யாரோடும் நெஞ்சம்…
நெருங்கியதே இல்லை…
உன் பின்னால் வந்தின்று…
மயங்குதே நீதான் எல்லை…

ஆண் : மின்னலின் ஓசை மின்மினி ஆசை…
மின் தடையாலே ஓயுமா…
உன் விழி போடும் அட்சரம் எல்லாம்…
இன்னிசை போலே பாயுமா…

பெண் : விடா மழையில் நனைந்தே நடப்போமா…
இதயம் சரிந்து…

ஆண் & பெண் : இரு கைகள் சேர காதல் கூடும்…

ஆண் : ஓர் நொடியில் நுழைந்தாய் உயிரில்…
இனி நான் சிறையில்…
எனை கைது செய்து போகும் கண்கள்…

ஆண் : ஓர் மழையில் கரைந்தேன் துளியில்…
இழுத்தாய் நதியில்…
முதல் காதல் சொல்லு வாட்டாதே…

—BGM—


Notes : Theera Theera Song Lyrics in Tamil. This Song from Sarbath (2021). Song Lyrics penned by Ku. Karthik. தீர தீர பாடல் வரிகள்.


கரிச்சான் குயிலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்அஜேஷ்அஜேஷ்சர்பத்

Karichaan Kuyile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கரிச்சான் குயிலே சிரிச்சா மயிலே…
கவுந்தேன் ஆள மடக்கி ஓடி அவ மாயமாகுறாளே…
வெறிச்சா வெயிலே அடிச்சா புயலே…
செவந்தேன் மூளைக்குள்ள தேடி வந்து அவ தாளம் போடுறாளே…

ஆண் : அசலா அவ எனக்காக…
கெடச்சாலே கணக்காக…
ஒறக்கம் கலைக்கும் சுகத்த அவ தானமாக கொடுத்தா…

ஆண் : நழுவாத நங்கூரம்…
நடு நெஞ்சில் வெதச்சாளே…
தனியா முழுசா அவதான் அரசாளுறா…

ஆண் : அடி பார்வையாள ஈட்டியாக பாத்து மெரட்டுறியே…
பழகாத போதை ஊட்டி நீயும் ஆள மயக்குறியே…
அடி காரமாக கூரு போட்டு காதல் கொடுக்குறியே…
அடி ஆழம் போயி ஆற போடும்மருந்தா இனிக்குறியே அடியே…

—BGM—

ஆண் : ஹேய்… கட்டாத காளை போல…
நான் கம்பீரமாதான் போக…
என் கண்ணால மோதி என்னை நீ சாய்கிற…

ஆண் : ஹேய்… சொல்லாத ஆசை தூங்க…
நான் செல்லாத காசா ஏங்க…
தினம் உன்னோட ஓசை கேட்டு கேட்டு முழிக்கிறேன்…

ஆண் : பாலம் போட்டு நானும்தான் பரிமாற பாக்குறேன்…
வெடி போட்டு ஒடச்சாயே…
காலை மாலை தோனல கனநேரம் தூங்கல…
கலைச்சாயே கனவே…

ஆண் : திரை போட்டு நீயும் தேட தேட ஓடி ஒளியிரியே…
இரவாக நானும் ஓஞ்சு போக வெளிச்சம் கொடுக்குறியே…
கடிகார முள்ள போல என்னை வாட்டி சொழட்டுறியே…
கடிவாளம் மாட்டி பாதை காட்டி என்னை என்னை என்னை அழைக்கிற…

ஆண் : அடி பார்வையாள ஈட்டியாக பாத்து மெரட்டுறியே…
பழகாத போதை ஊட்டி நீயும் ஆள மயக்குறியே…
அடி காரமாக கூரு போட்டு காதல் கொடுக்குறியே…
அடி ஆழம் போயி ஆற போடும் மருந்தா இனிக்குறியே அடியே…

—BGM—


Notes : Karichaan Kuyile Song Lyrics in Tamil. This Song from Sarbath (2021). Song Lyrics penned by Muthamil. கரிச்சான் குயிலே பாடல் வரிகள்.


உன்னாலே உணர்ந்தேனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்ஹரிச்சரன் & அஜேஷ்அஜேஷ்சர்பத்

Unnale Unarndhene Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹோ… இதயங்கள் தர வா…
ஹோ… உடையாமல் தொட வா…
ஹோ… துயரங்கள் மறப்போம் உயரத்தில் பறப்போம் கொஞ்சம் மெதுவா…

ஆண் : ஹோ… மனமெங்கும் சிறகா…
ஹோ… மெதுவாக திற வா…
ஹோ… எது ஒட்டி பிறந்தோம் எதை விட்டு கடந்தோம் நெஞ்சை தொட வா…

ஆண் : கை மீறும் மனதை கை தூக்கி விடவா…
காணாத நொடியை கடந்து கடந்து வரவா…
கண் மீறும் துளியை கொஞ்சம் துடைத்திட வா…
கண்ணீரும் இனித்தால் உலகம் அதை விடுமா…

ஆண் : உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே…
நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்…
தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே…
உலகை மறந்தே புது எல்லை கடப்போம்…

—BGM—

ஆண் : வான் கண்ணீர் துளி ஜன்னல் பனி நீளாதடா அதை துறந்து…
காயம் தன்னை காற்றில் கரைந்திடும் காலம் அல்லவே…
நீர் தாழாமலே தாயின் மடி சேராதடா…
தரை விழுந்த போதும் என்னை தாங்கி பிடித்திடும் நண்பனாக வா…

ஆண் : நம் கருவிழி கலங்குவதை கண் விரலுக்கு சொல்வதில்லை…
உன் அருகினில் நடக்கையில் வலிகளும் பிடிக்குது…
இதைவிட எதுவுமில்லை…

ஆண் : எத்தனை முறை அழுதிருப்போம்…
அத்தனை முறை அதை மறந்தோம்…
அக்கறை என்றும் உச்சம் இல்லை…
இருப்பதும் துச்சம் இல்லை…
நிமிடங்கள் ரசித்திருப்போம்…

ஆண் : உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே…
நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்…
தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே…
இரவோடும் பகலோடும் கலந்திடும் அன்பென்னும் வெளிச்சம்…

ஆண் : உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே…
நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்…
தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே…
உலகை மறந்தே புது எல்லை கடப்போம்…

—BGM—


Notes : Unnale Unarndhene Song Lyrics in Tamil. This Song from Sarbath (2021). Song Lyrics penned by Ku. Karthik. உன்னாலே உணர்ந்தேனே பாடல் வரிகள்.


அதிரும் வீராதி வீரன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்மஹாலிங்கம், திவாகர் & அஜேஷ்அஜேஷ்சர்பத்

Adhirum Veeradhi Veeran Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அதிரும் வீராதி வீரன் வந்தானே…
குதிரை தோள் மேல ஏறி வந்தான்…
அருமை சீரெல்லாம் ஏந்தி நின்னானே…
பெருமை சேர்த்துதான் வாங்கி தந்தான்…

ஆண் : அன்றாடம் பாராட்டுவோம் அன்பால ஆராட்டுவோம்…
அங்காளி பங்காளியா அஞ்சுமாதான் கேக்குறோம்…

ஆண் : ஊரு வெளைஞ்சிடுனும் நாடு செழிச்சிடனும்…
பேரும் பெருகிடனும் ஆறா…
நாளும் மன உறுதி தானா தர வேணும்…
அறமாக வரமாக நலமும் வளமும் தரணும் தரணும்…

ஆண் : அன்றாடம் பாராட்டுவோம் அன்பால ஆராட்டுவோம்…
அங்காளி பங்காளியா அஞ்சாமத்தான் கேக்குறோம்…

—BGM—

ஆண் : முறுக்கு மீசை அதை சுருட்டித்தான் தூக்கி…
உன்னை வெறிச்சுதான் பாக்குமே வெடல காள…
அடக்கி வச்ச பல ஆசையா சேர்த்து…
அது கேட்டுதான் வெரட்டும் ஆள…

ஆண் : வயசுபுள்ள வாய் பேச்சே இல்லாம…
ஒரு கண்ணால கண்ஜாடை காட்டி பேசும்…
வழியை காட்டி முட்டையைத்தான் கேட்டு…
சிறு வாண்டெல்லாம் வந்து நிக்கும்…

ஆண் : நெஞ்சோடு நம்பிக்கை நீ ஊட்டணும்…
பஞ்சத்த நீ போக்கணும்…
மண்ணெல்லாம் பொன்னாக நீ ஆக்கணும்…
மக்களதான் காக்கணும்…

ஆண் : உண்மைக்கு பேர் சொல்லும் ஊராகனும்…
ஒன்னாகத்தான் வாழனும்…
ஒன்னாக உண்டாகனும்…
ஊருக்கு நல்வாக்கு கூறனும்…

—BGM—

ஆண் : ஊரு வெளைஞ்சிடுனும் நாடு செழிச்சுடனும்…
பேரும் பெருகிடனும் ஆறா…
நாளும் மன உறுதி தானா தர வேணும்…
அறமாக வரமாக நலமும் வளமும் தரனும் தரணும்…

ஆண் : அன்றாடம் பாராட்டுவோம் அன்பால ஆராட்டுவோம்…
அங்காளி பங்காளியா அஞ்சாமத்தான் கேக்குறோம்…
அன்றாடம் பாராட்டுவோம் அன்பால ஆராட்டுவோம்…
அங்காளி பங்காளியா அஞ்சாமத்தான் கேக்குறோம்…

—BGM—


Notes : Adhirum Veeradhi Veeran Song Lyrics in Tamil. This Song from Sarbath (2021). Song Lyrics penned by Muthamil. அதிரும் வீராதி வீரன் பாடல் வரிகள்.