பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ரா.தனிக்கொடி | மது பாலகிருஷ்ணன் | ஜி. வி. பிரகாஷ் குமார் | கொம்பன் |
Mella Valanjadhu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மெல்ல வளஞ்சது ஆகாயம்…
உள்ளம் சிலிர்க்கிறதே…
நூறு தலை முறை ஆனாலும்…
சொந்தம் இது போல் வாராதே…
ஆண் : வம்பில் ஜெயித்திடும் ஓர் வீரம்…
அன்பில் ஜெயிக்கிறதே…
தொப்புள் கொடியின் பூ வாசம்…
தாலி கொடியில் தந்தானே…
ஆண் : கீறி பார்த்த முள்தானே நீதி முள்ளா நின்னானே…
காயமெல்லாம் மாயமாகி பூக்கள் ஆகுதே…
ஆண் : மெல்ல வளஞ்சது ஆகாயம்…
உள்ளம் சிலிர்க்கிறதே…
நூறு தலை முறை ஆனாலும்…
சொந்தம் இது போல் வாராதே…
—BGM—
ஆண் : சொந்தம் கூடி வாழ்வதுண்டு…
ஆளும் பேரும் சேர்வதுண்டு…
என்னை போல யோகம் உண்டா ஊர கேக்குறேன்…
ஆண் : என்ன பெருசா செஞ்சு வச்சேன்…
பொண்ணதானே கட்டி வச்சேன்…
இப்ப கேட்டா உசுரக் கூட தார வார்க்குறேன்…
ஆண் : மக பெருமைகள் பின்னாச்சு…
மருமகனிடம் என் மூச்சு…
இவன் பேச்ச மீறி இங்க மறு பேச்சில்ல…
எதாச்சும் இவனுகின்னா என் மூச்சில…
—BGM—
ஆண் : ஆச வார்த்த பேசவில்ல…
நானும் ரோசம் பார்க்கவில்ல…
என்ன காக்க தன்மானத்த தந்து போகிறான்…
ஆண் : சோ்ந்து செல்லும் நண்பன் இல்ல…
நானும் இங்க கண்ணன் இல்ல…
தாழ்ந்த போதும் வீழ்ந்திடாத கீதை சொல்கிறான்…
ஆண் : கட்டுப்படுத்துறேன் கண்ணீர…
முட்டி கசியுது தன்னால…
தெக்கதீ காட்டு தீ வெளகேத்துதே…
தெய்வங்கள் மூக்கு மேல விரல் வைக்குதே…
ஆண் : மெல்ல வளஞ்சது ஆகாயம்…
உள்ளம் சிலிர்க்கிறதே…
நூறு தலை முறை ஆனாலும்…
சொந்தம் இது போல் வாராதே…
ஆண் : கீறி பார்த்த முள்தானே…
நீதி முள்ளா நின்னானே…
காயமெல்லாம் மாயமாகி பூக்கள் ஆகுதே…
ஆண் : மெல்ல வளஞ்சது ஆகாயம்…
உள்ளம் சிலிர்க்கிறதே…
நூறு தலை முறை ஆனாலும்…
சொந்தம் இது போல் வாராதே…
Notes : Mella Valanjadhu Song Lyrics in Tamil. This Song from Komban (2015). Song Lyrics penned by Ra.Thanikodi. மெல்ல வளஞ்சது பாடல் வரிகள்.