Category Archives: நெஞ்சத்தை கிள்ளாதே (2008)

நெஞ்சத்தை கிள்ளாதே (2008) – Nenjathai Killathe (2008)

காதலே நீ என்னோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்விஜய் யேசுதாஸ்பிரேம்ஜி அமரன்நெஞ்சத்தை கிள்ளாதே

Kadhale Nee Yennodu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே…
காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…

ஆண் : நான் ஒரு சேவகன்…
காதலின் காதலன்…
யாரிடம் நான் உன்னை தேடுவேன் காதலே…

ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே…
காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…

BGM

ஆண் : தூங்கும் போதும் யோசிப்பேன்…
தூங்காது உனை நான் நேசிப்பேன்…
உண்ணும் போது உன்னையே…
உண்ணவே நான் யாசிப்பேன்…

ஆண் : போகும் இடமெல்லாம் உந்தன் கைகளை…
பிடித்தபடியே நான் நடக்கிறேன்…
என்ன கோபமோ கண்ணை கட்டி நீ…
உன்னை தேடவே சொல்கிறாய்…

ஆண் : காதலே நான் ஒரு காதலின் தூதுவன்…
நீ எனை காதலி காதலே வாழுவாய்…

ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே…
காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…

BGM

ஆண் : காதலே உன் வாசலில்…
மொழிகள் யாவும் மௌனமே…
பேசுகின்ற வார்த்தையோ நாணத்தாலே விலகுமே…

ஆண் : யாருமில்லை என்ற போதிலும்…
வரம்பு மீறியதில்லையே…
காதலாகினோம் கசிந்து உருகினோம்…
கரங்கள் தீண்டியதில்லையே…

ஆண் : ஆயிரம் காலமாய் வாழ்கிறாய் காதலே…
யாருமே என்னை போலே காதலன் இல்லையே…

ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே…
காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…

ஆண் : நான் ஒரு சேவகன்…
காதலின் காதலன்…
யாரிடம் நான் உன்னை தேடுவேன் காதலே…

ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே…
காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…


Notes : Kadhale Nee Yennodu Song Lyrics in Tamil. This Song from Nenjathai Killathe (2008). Song Lyrics penned by Agathiyan. காதலே நீ என்னோடு பாடல் வரிகள்.


ஒரு மனசுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்ஹரிசரண் & சின்மயிபிரேம்ஜி அமரன்நெஞ்சத்தை கிள்ளாதே

Oru Manasula Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு மனசுல இரு மனம் உரசுது…
இடையில் இருக்கிற காதலே நலமா…
வழி தெரியல எவரும் துணையில…
போகும் தூரம் தூரம்…

ஆண் : எது சரி என எவருக்கும் தெரியல…
இறைவனை படைச்சது காதலா மனிதா…
ஒரு முறை உன்னை தழுவினேன் விலகினாய்…
காதலே நீ வாழ்க…

ஆண் : சுவாசமே நீ என வாழ்ந்தவன் கேட்கிறேன்…
ஏனடி போகிறாய் யோசிக்காது சுவாசி…

ஆண் : ஒரு முறை பார்க்கலாம்…
நூறு நாள் வார்க்கலாம்…
போர்க்களம் தேவன்தான்…
பார்த்ததே நம் காதல்…

ஆண் : கோர்த்தாய் கையே சேர்த்த நெஞ்சே…
பார்த்து போ நீ பாதை எங்கும் நானே…
வேற்று நெஞ்சில் ஆசை கொண்டு…
போற்றுகின்ற வார்த்தை கூட நானே…

BGM

பெண் : இரு மனசுல உரசுன மனசுல…
எது எது இருக்குது இறைவனே அறிவான்…
வழி நெடுகிலும் உயிருடன் அழுதது…
காதலாலே காயம்…

பெண் : தவி தவிக்குற காதலும் நலமுற…
ஒரு முறை அதனை அனுப்பினேன் தழுவ…
அதை எடுத்து நீ உயிருடன் புதைத்தாய்…
மோசமாச்சு நேசம்…

பெண் : ஒரு முறை பூத்தது மீண்டுமே பூக்காலம்…
வேரிலே நீரினாய் காய்ந்து போச்சு காதல்…

பெண் : காலையில் வளர்கிறாய்…
மாலையில் தேய்கிறாய்…
நீ நிழல் என்பதால் காதல் போச்சு தூரம்…

பெண் : வானம் பார்க்க நானும் பார்த்தேன்…
காதல் நீரே நீரை தூவி போச்சு…
நீயும் பார்க்க நானும் பார்த்தேன்…
காதல் தீவில் சோகம் கண்ணில் ஆச்சு…

BGM

ஆண் : காலையும் மாலையும் நீயென நினைக்கிறேன்…
நண்பகல் போலவே மாறலாமோ நீதான்…

பெண் : வீணையை மீட்டினேன் விரல்களை அறுத்ததே…
இசையில்லா கம்பியாய் இருந்ததே உன் காதல்…

ஆண் : உன் பேரை தவிர வேறு வார்த்தை…
ஹேஹே… பேச மாட்டேன் சாகும் போது அன்பே…

பெண் : நூறு நூறு பேர்கள் உண்டே…
எந்தன் பேரை யாரை சொல்வாய் இங்கே…

ஆண் : காதல் அறியும் உந்தன் வாசம்…
தேடி தேடி வந்து சேரும் அங்கே…

பெண் : காலம் அறிதே காதல் போயின்…
காதல் காதல் பாவம் காதல் இங்கே…


Notes : Oru Manasula Song Lyrics in Tamil. This Song from Nenjathai Killathe (2008). Song Lyrics penned by Agathiyan. ஒரு மனசுல பாடல் வரிகள்.


நேரா வரட்டுமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்பிரசன்னா & மஹதிபிரேம்ஜி அமரன்நெஞ்சத்தை கிள்ளாதே

Neraa Varattuma Song Lyrics in Tamil


BGM

ஆண் : நேரா வரட்டுமா இல்ல காதல அனுப்பவா…
யாருக்கும் இது வரை இந்த காதல அனுப்பல…

ஆண் : ரொம்ப பொண்ணுங்க கூட பழகுனேன்…
ஏனோ ஒன்னுமே அப்போ தோணல…
இப்ப உன்னிடம் காதல் தோணுது அதுதான்…

பெண் : நீ சொன்னது எல்லாம் உண்மையா…
முன்பு யாருக்கும் இதையே சொன்னியா…
உன் காதலை கேட்டா தெரிஞ்சிடும் அனுப்பு…

பெண் : சரியாய் முகவரி கொடுத்து நீ அனுப்பி வை…
நானும் இது வரை எந்த காதலும் வாங்கல…

BGM

ஆண் : வந்தா இல்லையா பதிலின்றி தவிக்கிறேன்…
என்னதான் சொன்னது என் காதல் என் காதல்…

பெண் : இது வரை யாருக்கும் அனுப்பியதில்லையாம்…
மகிழ்ச்சியாய் சொன்னதே உன் காதல் உன் காதல்…

ஆண் : உன் பேரை எழுதினேன் எறும்பெல்லாம் தின்றதே…
இனிப்பான ராட்சசி உன்னை நான் தின்னவா…

பெண் : உன் காதல் பருகினேன்…
வேர்வைதான் இனித்ததே…
பொல்லாத ராட்சசா என்னை…
நீ கொல்ல வா…

ஆண் : உன்னை திருக்குறள் போல நினைக்கிறேன்…
அதில் காமத்து பாலை ரசிக்கிறேன்…
கம்பன் கவிதையாய் அள்ளி குடிக்கிறேன் அன்பே…

பெண் : புது கவிதையாய் நானே இருக்கிறேன்…
இதில் இலக்கணம் பிறக்க நினைக்கிறாய்…
சங்க தமிழினை படிக்க துடிக்கிறாய் அன்பே…

BGM

பெண் : அழகிய பெண்களை அடிக்கடி பார்ப்பதாய்…
ரகசியம் சொன்னது உன் காதல் உன் காதல்…

ஆண் : உன்னை விட அழகிதான் யாருமே இல்லையாம்…
தேடி பார் என்றது உன் காதல் உன் காதல்…

பெண் : ஓர் காதல் வார்த்தையாய் கேட்காத கேள்விகள்…
பார்க்காத பார்வைகள் கொள்ளுமா வெல்லுமா…

ஆண் : சேர்க்காத தேகமோ நூர்க்காத ஆடையில்…
வேர்க்காத போதிலே கொஞ்சுமா கெஞ்சுமா…

பெண் : ஒரு கோவிலாய் நானே இருக்கிறேன்…
அதில் சிற்பமாய் எங்கும் சிரிக்கிறேன்…
நீ அற்புதம் காண துடிக்கிறாய் அன்பே…

ஆண் : சிறு மழையென என்னை நனைக்கிறாய்…
நீர் திவலையாய் உன்னை குடிக்கிறேன்…
உன்னை குடிப்பதால் உயிராய் இருக்கிறேன் அன்பே…

ஆண் : யாருக்கும் இது வரை…
இந்த காதல அனுப்பல…

பெண் : நானும் இது வரை…
எந்த காதலும் வாங்கல…


Notes : Neraa Varattuma Song Lyrics in Tamil. This Song from Nenjathai Killathe (2008). Song Lyrics penned by Agathiyan. நேரா வரட்டுமா பாடல் வரிகள்.