Category Archives: பீமா

பீமா

ரகசிய கனவுகள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிஹரன் & மதுஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்பீமா

Ragasiya Kanavugal Song Lyrics in Tamil


பெண் : ரகசிய கனவுகள் ஜல் ஜல்…
என் இமைகளை கழுவுது சொல் சொல்…
இளமையில் இளமையில் ஜில் ஜில்…
என் இருதயம் நழுவுது செல் செல்…

ஆண் : முதல் பிழை போல் மனதினிலே…
விழுந்தது உனதுருவம்…
ஓ… உதடுகளால் உனை படிப்பேன்…
இருந்திடு அரை நிமிடம்…

ஆண் : தொலைவது போல் தொலைவதுதான்…
உலகில் உலகில் புனிதம்…

{ குழு : இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே…
வந்து தொடு அழகே…
தொட தொட பொழிகிற சுகம் சுகமே…
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே… } (2)

BGM

பெண் : மறுபடி ஒருமுறை பிறந்தேனே…
விரல் தொட புருவமும் சிவந்தேனே…
ஓ… இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ…
சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ…

ஆண் : சுடும் தனிமையில் உணர்கிற…
மரநிழல் போல எனை சூட…
நரம்புகளோடு குறும்புகள் நாளும் எழுதிய கணக்கு…
எனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு…

பெண் : ரகசிய கனவுகள் ஜல் ஜல்…
என் இமைகளை கழுவுது சொல் சொல்…
இளமையில் இளமையில் ஜில் ஜில்…
என் இருதயம் நழுவுது செல் செல்…

BGM

ஆண் : உயிரணு முழுவதும் உனை பேச…
உனை பேச…
இமை தொடும் நினைவுகள் அனல் வீச…
அனல் வீச…

ஆண் : ஓ… நினைச்சாலே சிவப்பாகும்…
மருதாணித் தோட்டம் நீ…
தலைவைத்து நான் தூங்கும்…
தலகாணி கூச்சம் நீ…

பெண் : எனதிரவினில் கசிகிற நிலா ஒளி நீயே படர்வாயே…
நெருங்குவதாலே நொறுங்கிவிடாதோ இருபது வருடம்…
ஓ… தவறுகளாலே தொடுகிற நீ ஓா் அழகிய மிருகம்…

ஆண் : ரகசிய கனவுகள் ஜல் ஜல்…
என் இமைகளை கழுவுது சொல் சொல்…
இளமையில் இளமையில் ஜில் ஜில்…
என் இருதயம் நழுவுது செல் செல்…

பெண் : குயிலினமே குயிலினமே…
எனக்கொரு சிறகு கொடு…
முகிலினமே முகிலினமே…
முகவரி எழுதிக் கொடு…
அவனிடமே அவனிடமே எனது கனவை அனுப்பு…

{ குழு : இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே…
வந்து தொடு அழகே…
தொட தொட பொழிகிற சுகம் சுகமே…
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே… } * (3)


Notes : Ragasiya Kanavugal Song Lyrics in Tamil. This Song from Bheema (2008). Song Lyrics penned by Yugabharathi. ரகசிய கனவுகள் பாடல் வரிகள்.


Rangu Rangamma Song Lyrics in Tamil

ரங்கு ரங்கம்மா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கைலாஷ் ஹெர், சுவர்ணலதா & விஜய் யேசுதாஸ்ஹாரிஸ் ஜெயராஜ்பீமா

Rangu Rangamma Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரங்கு ரங்கம்மா…
ரத்தம் ஊறும் தங்கமா…
தங்கு தங்கம்மா…
நா ரெட்ட சுழி ஆளம்மா…

ஆண் : ஹே… ரங்கு ரங்கம்மா…
ரத்தம் ஊறும் தங்கமா…
தங்கு தங்கம்மா…
நா ரெட்ட சுழி ஆளம்மா…

ஆண் : ஆயிரத்தில் ஒருத்தி…
ஆசையத்தான் கொளுத்தி…
பாவி நெஞ்ச நிறுத்தி…
கொண்டு போறா கடத்தி…

ஆண் : ஏ வத்திக்குச்சி கண் அடிச்சி…
வங்கக் கடல் பத்திக்கிச்சு…

குழு : ரங்கா ஹே ரங்கா…
நீ அட்ரா விசிலு…
ஜிங்கா ஹே ஜிங்கா…
அடி கிழியும் செவுலு…

குழு : ரங்கா ஹே ரங்கா…
நீ அட்ரா விசிலு…
ஜிங்கா ஹே ஜிங்கா…
அடி கிழியும் செவுலு…

ஆண் : ரங்கு ரங்கம்மா…
ரத்தம் ஊறும் தங்கமா…
தங்கு தங்கம்மா…
நா ரெட்ட சுழி ஆளம்மா…

பெண் : ஆ… ரங்கா ரங்கய்யா…
ரத்தம் ஊறும் தங்கமையா…
தங்கு தங்கைய்யா…
இனி நீயா நானா பாரய்யா…

BGM

ஆண் : கண்ணுள் கத்தி கப்பல்…
நெஞ்சத்தில் ரெட்டக்கப்பல்…
மோதினா யுத்தக் கப்பல் இவதானே…

ஆண் : முந்தானை பாய்மரமே…
முா்சான நங்கூரமே…
சரியான மாலுமியும் நான்தானே…

ஆண் : சரக்கே வருது…
சறுக்கி விழுது…
ஹே… ஒத்து நீ ஒத்து…
இவ ஒத்துக்கிட்டா ஓரங்கட்டு…

ஆண் : ரங்கு ரங்கம்மா…
ரத்தம் ஊறும் தங்கமா…
தங்கு தங்கம்மா…
நா ரெட்ட சுழி ஆளம்மா…

பெண் : அட ரங்கா ரங்கய்யா…
ரத்தம் ஊறும் தங்கமையா…
தங்கு தங்கைய்யா…
இனி நீயா நானா பாரய்யா…

BGM

ஆண் : காத்துக்கு ரூட் இருக்கா…
கடலுக்கு பூட்டு இருக்கா…
வா மச்சான் வாழ்க்கையிலே விளையாடு…

ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம்…
ஆளத்தான் நாம் பொறந்தோம்…
ஆனந்த பட்டறைக்கு வழித் தேடு…

ஆண் : மனமே அடங்கு…
மறுநாள் தொடங்கு…
ஹே… வாடா நீ வாடா…
நம் சந்தோஷம் கோலி சோடா…

ஆண் : ரங்கு ரங்கம்மா…
ரத்தம் ஊறும் தங்கமா…
தங்கு தங்கம்மா…
நா ரெட்ட சுழி ஆளம்மா…

பெண் : அட ரங்கா ரங்கய்யா…
ரத்தம் ஊறும் தங்கமையா…
தங்கு தங்கைய்யா…
இனி நீயா நானா பாரய்யா…

ஆண் : ஆயிரத்தில் ஒருத்தி…
ஆசையத்தான் கொளுத்தி…
பாவி நெஞ்ச நிறுத்தி…
கொண்டு போறா கடத்தி…

ஆண் : ஏ வத்திக்குச்சி கண் அடிச்சி…
வங்கக் கடல் பத்திக்கிச்சு…

குழு : ரங்கா ஹே ரங்கா…
நீ அட்ரா விசிலு…
ஜிங்கா ஹே ஜிங்கா…
அடி கிழியும் செவுலு…

குழு : ரங்கா ஹே ரங்கா…
நீ அட்ரா விசிலு…
ஜிங்கா ஹே ஜிங்கா…
அடி கிழியும் செவுலு…

குழு : ரங்கா ஹே ரங்கா…
நீ அட்ரா விசிலு…
ஜிங்கா ஹே ஜிங்கா…
அடி கிழியும் செவுலு…


Notes : Rangu Rangamma Song Lyrics in Tamil. This Song from Bheema (2008). Song Lyrics penned by Pa Vijay. ரங்கு ரங்கம்மா பாடல் வரிகள்.


முதல் மழை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஆர். பிரசன்னா, ஹரிஹரன் & மஹதிஹாரிஸ் ஜெயராஜ்பீமா

Mudhal Mazhai Song Lyrics in Tamil


பெண் : மெகோ மெகோ மெகோ…
லாகி மாகி மா…
மெகோ மெகோ மெகோ…
பாகி லாகி மா…
ஹேய் ஹேய் ஹேய் லோ…
மேஹி… ரோஹிரோனா
மேஹி… ரோஹிரோனா…

BGM

ஆண் : முதல் மழை என்னை நனைத்ததே…
முதல் முறை ஜன்னல் திறந்ததே…
பெயரே தெரியாத பறவை அழைத்ததே…
மனமும் பறந்ததே…
இதயமும்… ஓ… இதமாய் மிதந்ததே…

பெண் : ம்ம்ம்ம்… முதல் மழை நம்மை நனைத்ததே…
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே…
பெயரே தெரியாத பறவை அழைத்ததே…
மனமும் பறந்ததே…
இதயமும்… ஹம்ம்… இதயமாய் மிதந்ததேயே…

பெண் : மெகோ மெகோ மெகோ…
லாகி மாகி மா…
மெகோ மெகோ மெகோ…
பாகி லாகி மா…
ஹேய் ஹேய் ஹேய் லோ…
மேஹி… ரோஹிரோனா…
மேஹி… ரோஹிரோனா…

ஆண் : கனவோடு தானடி நீ தோன்றினாய்…
கண்களால் உன்னை படம் எடுத்தேன்…

ஆண் : என் வாசலில் நேற்று உன் வாசனை…
நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்…

பெண் : எதுவும் புரியா புது கவிதை…
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்…
கையை மீறும் ஒரு குடையாய்…
காற்றோடுதான் நானும் பறந்தேன்…
மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்…

ஆண் : முதல் மழை என்னை நனைத்ததே…

பெண் : லாலாலாலா…

ஆண் : முதல் முறை ஜன்னல் திறந்ததே…

பெண் : லாலாலாலா…

ஆண் : பெயரே தெரியாத பறவை அழைத்ததே…
மனமும் பறந்ததே…
இதயமும்… ஓ… இதமாய் மிதந்ததே…

BGM

பெண் : ஓர்நாள் உன்னை நானும் காணாவிட்டால்…
என் வாழ்வில் அந்த நாளே இல்லை… ஓ…
ஓர்நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்…
அந்நாளின் நீளம் போதவில்லை…

ஆண் : இரவும் பகலும் ஒரு மயக்கம்…
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்…
உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்…
இறந்தாலுமே என்றும் இருக்கும்…
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்…

BGM

ஆண் : பெயரே தெரியாத பறவை அழைத்ததே…

BGM

ஆண் : இதயமும்… ஓ… இதமாய் மிதந்ததே…

பெண் : மெகோ மெகோ மெகோ…
லாகி மாகி மா…
மெகோ மெகோ மெகோ…
பாகி லாகி மா…
ஹேய் ஹேய் ஹேய் லோ…
மேஹி… ரோஹிரோனா…


Notes : Mudhal Mazhai Song Lyrics in Tamil. This Song from Bheema (2008). Song Lyrics penned by Na. Muthukumar. முதல் மழை பாடல் வரிகள்.


எனதுயிரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிநிகில் மேத்யூ, சின்மயி, சாதனா சர்கம் & சௌமியா ராவ் ஹாரிஸ் ஜெயராஜ்பீமா

Enathuyirey Song Lyrics in Tamil


BGM

பெண் : எனதுயிரே எனதுயிரே…
எனக்கெனவே நீ கிடைத்தாய்…
எனதுறவே எனதுறவே…
கடவுளை போல் நீ முளைத்தாய்…

பெண் : நெடுஞ்சாலையில் படும் பாதம்போல்…
சேர்கிறேன் வாழும் காலமே…
வரும் நாட்களே தரும் பூக்களே…
நீளுமே காதல் காதல் வாசமே…

பெண் : எனதுயிரே எனதுயிரே…
எனக்கெனவே நீ கிடைத்தாய்…
எனதுறவே எனதுறவே…
கடவுளை போல் நீ முளைத்தாய்…

BGM

ஆண் : இனி இரவே இல்லை கண்டேன்…
உன் விழிகளில் கிழக்கு திசை…
இனி பிரிவே இல்லை அன்பே…
உன் உளறலும் எனக்கு இசை…

பெண் : உன்னை காணும் வரையில்…
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்…
கண்ணால் நீயும் அதிலே எழுதி போனாய்…
நல்ல ஓவியம்…
சிறு பார்வையில் ஒரு வார்த்தையில் தோன்றுதே…
நூறு கோடி வானவில்…

ஆண் : எனதுயிரே எனதுயிரே…
எனக்கெனவே நீ கிடைத்தாய்…
எனதுறவே எனதுறவே…
கடவுளை போல் நீ முளைத்தாய்…

BGM

பெண் : மரம் இருந்தால் அங்கே என்னை…
நான் நிழலென நிறுத்திடுவேன்…
இலை விழுந்தால் ஐயோ என்றே…
நான் இருதயம் துடித்திடுவேன்…

ஆண் : இனி மேல் நமது இதழ்கள் இணைந்து…
சிரிக்கும் ஓசை கேட்குமே…
நெடுநாள் நிலவும் நிலவின் களங்கம்…
துடைக்க கைகள் கோர்க்குமே…
உருவாக்கினாய் அதிகாலையை ஆகவே…
நீ என் வாழ்வின் மோட்சமே…

பெண் : எனதுயிரே எனதுயிரே…
எனக்கெனவே நீ கிடைத்தாய்…
எனதுறவே எனதுறவே…
கடவுளை போல் நீ முளைத்தாய்…

ஆண் : நெடுஞ்சாலையில் படும் பாதம்போல்…
சேர்கிறேன் வாழும் காலமே…
வரும் நாட்களே தரும் பூக்களே…
நீளுமே காதல் காதல் வாசமே…

BGM


Notes : Enathuyirey Song Lyrics in Tamil. This Song from Bheema (2008). Song Lyrics penned by Yugabharathi. எனதுயிரே பாடல் வரிகள்.