Category Archives: ஒரு கல்லூரியின் கதை

ஒரு கல்லூரியின் கதை – Oru Kalluriyin Kathai (2005)

கண்கள் கண்டது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கே கே & சுஜாதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாஒரு கல்லூரியின் கதை

Kangal Kandadhu Song Lyrics in Tamil


BGM

{ ஆண் : கண்கள் கண்டது கண்கள் கண்டது…
கானல் நீராய் மாறிடுதே…
கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை…
காற்றும் மோதிட கலைகிறதே… } * (2)

{ ஆண் : மரத்தின் கிளைகளில் மலர்கள் கண்டேன்…
வாசம் மட்டும் காணவில்லை…
நடந்த பாதையில் திரும்பி பார்த்தேன்…
காலடி அங்கே தெரியவில்லை… } * (2)

ஆண் : ஒன்றாய் சிரித்து அழுத உறவின்…
விடுகதைகள் புரியவில்லை…

ஆண் : கண்கள் கண்டது கண்கள் கண்டது…
கானல் நீராய் மாறிடுதே…
கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை…
காற்றும் மோதிட கலைகிறதே…

BGM

ஆண் : தோற்றம் திரும்பலாம் தொட்டு நெருங்கலாம்…
நிஜத்தின் காயங்கள் ஆறாதே…
மாற்றம் நேரலாம் மறந்து சிரிக்கலாம்…
மனதில் பெய்யும் மழை அடங்காதே…

ஆண் : அடுத்த நாட்கள் இங்கு பத்திரமாக…
நடந்த நாடகம் முடிகிறதே…
வாழ்ந்த வாழ்க்கையை திருப்பிதான் வாழ்ந்த…
நட்பு என் மனதில் நெகிழ்கிறதே…

ஆண் : அட தொப்புள் கொடியின் உறவைத்தான்…
என் நியாபகம் அறிந்தது இல்லை…
அந்த துயரம் தீர்த்த நண்பர்களே…
இந்த நட்புக்கு வானமே எல்லை…

ஆண் : ஒன்றாய் சிரித்து அழுத உறவின்…
விடுகதைகள் புரியவில்லை…

BGM

ஆண் : கால சங்கிலி மீண்டும் இணையலாம்…
காதல் சங்கிலி இணையாதே…
காற்று பேசித்தான் விதைத்த வார்த்தைகள்…
கரைந்து போனது திரும்பாதே…

ஆண் : பிடித்த கவிதையை எடுத்து படிக்கையில்…
எழுத்து பிழை ஒன்று தெரிகிறதே…
மரணம் என்பது ஒரு முறை கொல்லும்…
காதல் பல முறை கொல்கிறதே…

ஆண் : நான் கனவுகள் வளர்த்து திரிந்தேனே…
பல இரவும் பகலும் இங்கே…
அந்த நினைவுகள் போதும் வாழும் வரை…
என் நெஞ்சில் துயரம் இல்லை…

ஆண் : ஒன்றாய் சிரித்து அழுத உறவின்…
விடுகதைகள் புரியவில்லை…

{ பெண் : கண்கள் கண்டது கண்கள் கண்டது…
கண்ணீர் துளியில் கரையாதே…
கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை…
காற்றும் மோதிட கலையாதே… } * (2)

{ பெண் : மரத்தில் இருந்து பூக்கள் உதிரும்…
மறுபடி பூத்திட மறக்காதே…
மாலையில் சூரியன் மறைந்த பிறகும்…
மறுநாள் உதிக்கும் மறக்காதே… } * (2)

பெண் : ஒன்றாய் சிரித்து அழுத உறவின்…
தொடர் கதைகள் தெரிந்துகொள்வாய்…


Notes : Kangal Kandadhu Song Lyrics in Tamil. This Song from Oru Kalluriyin Kathai (2005). Song Lyrics penned by Na. Muthukumar. கண்கள் கண்டது பாடல் வரிகள்.


காதல் என்பது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஷ் ராகவேந்திரா & சின்மயியுவன் ஷங்கர் ராஜாஒரு கல்லூரியின் கதை

Kadhal Yenbathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் என்பது கடவுள் அல்லவா…
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா…

பெண் : காதல் என்றால் பொய்கள் அல்லவா…
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா…

ஆண் : செல்ல பொய்களும் சுகங்கள் அல்லவா…
இங்கு விழியின் வழிகளும் வரங்கள் அல்லவா…

பெண் : வரங்கள் என்பது அலைகள் அல்லவா…
அது விழுந்து எழுவது துயரம் அல்லவா…

ஆண் : காதல் என்பது கடவுள் அல்லவா…
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா…

பெண் : காதல் என்றால் பொய்கள் அல்லவா…
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா…

ஆண் : கண்கள் மூடி படுத்தால் கனவில் உந்தன் பிம்பம்…
காலை நேரம் எழுந்தால் நினைவில் உந்தன் சுகந்தம்…

ஆண் : உன்னை பார்க்கும் முன்பு நானே…
வெட்ட வெளியிலே திரிந்தேன்…
உன் அருகில் வந்து தான் என்…
வேடந்தாங்கலை உணர்ந்தேன்…

ஆண் : உனக்காக தானே உயிர் வாழ்வேன் நானே…
நீ இன்றி நானே வெறும் கூடு தானே…
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை…
நீயே தந்தாய்…

ஆண் : காதல் என்பது கடவுள் அல்லவா…
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா…

பெண் : காதல் என்றால் பொய்கள் அல்லவா…
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா…

BGM

ஆண் : காற்றில் ஆடும் கைகள் நெருங்கி நெருங்கி துரத்தும்…
விரலை பிடித்து நடக்க விருப்பம் நெருப்பை கொளுத்தும்…

ஆண் : உந்தன் அருகில் நானும் இருந்தால்…
நிமிடம் நொடிகள் என கரையும்…
எனை விலகி நீயும் பிரிந்தால்…
நேரம் பாரமாய் கணக்கும்…

ஆண் : உன் அருகில் இருந்தால் என்ன இனி வேண்டும்…
உலகு கையில் வந்ததாய் எண்ணம் ஒன்று தோன்றும்…
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்…

{ பெண் : காதல் வருவது புரிவதில்லையே…
அதை கடவுள் கூட தான் அறிவதில்லையே…
பூக்கள் பூப்பதே தெரிவதில்லையே…
அதை யாரும் எங்குமே பார்த்ததில்லையே… } * (2)

BGM


Notes : Kadhal Yenbathu Song Lyrics in Tamil. This Song from Oru Kalluriyin Kathai (2005). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் என்பது பாடல் வரிகள்.