Category Archives: பிரியமான தோழி

Vaanam Enna Vaanam Song Lyrics in Tamil

வானம் என்ன வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்ஹரிஹரன்எஸ். ஏ. ராஜ்குமார்பிரியமான தோழி

Vaanam Enna Vaanam Song Lyrics in Tamil


BGM

ஆண் : வானம் என்ன வானம்…
தொட்டு விடலாம்…
வெல்லும் வரை வாழ்க்கை…
வென்று விடலாம்…

ஆண் : வில்லாக வானவில்லை…
கையில் ஏந்த வேண்டும்…
அம்பாக மின்னல்களை…
அள்ளி வரவேண்டும்…

ஆண் : நிலவுக்கு மேலே நின்று…
ஜே போட வேண்டும்…
விண்வெளியின் மேலே…
புல்வெளி வைப்போம்…
புல்வெளியின் மேலே…
பூத்துக் கிடப்போம்…

BGM

ஆண் : வானம் என்ன வானம்…
தொட்டு விடலாம்…
வெல்லும் வரை வாழ்க்கை…
வென்று விடலாம்…

BGM

ஆண் : நெஞ்சிலே இந்த நெஞ்சிலே…
கடல் பொங்குதே ஆனந்தமாய்…
கையிலே இந்த கையிலே…
வெற்றி வந்ததே ஆரம்பமாய்…

ஆண் : அட வாழ்வில் இன்றே…
திறப்பு விழா…
இனி வாழ்க்கை எங்கும்…
வசந்தங்களா…

ஆண் : கடலுக்கிங்கே கைகள் தட்ட…
கற்றுத் தந்திடலாம்…
பூவுக்கெல்லாம் றெக்கை கட்டி…
பறக்கச் சொல்லிடலாம்…

BGM

ஆண் : வானம் என்ன வானம்…
தொட்டு விடலாம்…
வெல்லும் வரை வாழ்க்கை…
வென்று விடலாம்…

BGM

ஆண் : சொந்தமாய் ஒரு சூரியன்…
அந்த வானத்தை கேட்டால் என்ன…
இல்லையேல் நாம் சொந்தமாய்…
ஒரு வானத்தை செய்தால் என்ன…

ஆண் : ஏ பூவே பூவே என்ன சிரிப்பு…
உன் வாசம் எல்லாம் வீட்டுக்கு அனுப்பு…

ஆண் : சிகரம் என்ன சிகரம் எல்லாம்…
சின்னப்புள்ளிகளே…
காற்றுக்கில்லை காற்றுக்கில்லை…
முற்றுபுள்ளிகளே…

BGM

ஆண் : வானம் என்ன வானம்…
தொட்டு விடலாம்…
வெல்லும் வரை வாழ்க்கை…
வென்று விடலாம்…

ஆண் : வில்லாக வானவில்லை…
கையில் ஏந்த வேண்டும்…
அம்பாக மின்னல்களை…
அள்ளி வரவேண்டும்…

ஆண் : நிலவுக்கு மேலே நின்று…
ஜே போட வேண்டும்…
விண்வெளியின் மேலே…
புல்வெளி வைப்போம்…
புல்வெளியின் மேலே…
பூத்துக் கிடப்போம்…

BGM


Notes : Vaanam Enna Vaanam Song Lyrics in Tamil. This Song from Priyamana Thozhi (2003). Song Lyrics penned by Pa. Vijay. வானம் என்ன வானம் பாடல் வரிகள்.


எந்த தேசத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்ஹரிஹரன்எஸ். ஏ. ராஜ்குமார்பிரியமான தோழி

Entha Desathil Song Lyrics in Tamil


BGM

ஆண் : எந்த தேசத்தில் தேசத்தில்…
நீ பிறந்தாய்…
அட இத்தனை பேரழகா…

BGM

ஆண் : எந்த தேசத்தில் தேசத்தில்…
நீ பிறந்தாய்…
அட இத்தனை பேரழகா…

ஆண் : எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில்…
நீ கலந்தாய்…
இனி நீ இன்றி நான் அழகா…

ஆண் : ஏதோ ஒரு மாற்றம் மாற்றம்…
என்னில் என்னில்…
ஏனோ இடை ஏற்றம் ஏற்றம்…
இதயம் தன்னில்…

ஆண் : நீ கால் முளைத்த புஷ்பம்…
கடல் நுரையில் செய்த சிற்பம்…
உன் முன்பு வந்து நின்றால்…
அந்த சொர்க்கம் கூட அற்பம்…

BGM

ஆண் : எந்த தேசத்தில் தேசத்தில்…
நீ பிறந்தாய்…
அட இத்தனை பேரழகா…

BGM

ஆண் : வண்ண வண்ண பூவெல்லாம்…
வாசம் வீசி பூ பூக்கும்…
உன்னை போல ஒன்றுக்கும்…
வாசம் வீச தெரியாதே…

ஆண் : கோடி கோடி வார்த்தைகள்…
கோர்த்து கொண்டு வந்தாலும்…
நீ சினுங்கும் ஓசை போல்…
அர்த்தம் எதிலும் கிடையாதே…

ஆண் : ஓ… அழகே நீ வாய் பேச…
கீதம் என்பேனே…
சங்கீதம் என்பேனே…

ஆண் : பேசாத மௌனத்தை…
கவிதை என்பேனே…
புது கவிதை என்பேனே…

ஆண் : கடல் ஓரம் நீயும் வந்தால்…
புயல் வந்ததென்று அர்த்தம்…
நீ என்னை நீங்கி சென்றால்…
உயிர் நின்றதென்று அர்த்தம்…

ஆண் : எந்த தேசத்தில் தேசத்தில்…
நீ பிறந்தாய்…
அட இத்தனை பேரழகா…

BGM

ஆண் : உந்தன் கண்கள் ஓரத்தில்…
தீட்டி வைத்த மை தந்தால்…
ஐந்து அல்ல ஐந்நுாறு…
காப்பியங்கள் உண்டாகும்…

ஆண் : உந்தன் கூந்தல் ஈரத்தை…
தொட்டு போன காற்றைதான்…
கொஞ்ச நேரம் சுவாசித்தால்…
எந்தன் வாழ்வில் வரமாகும்…

ஆண் : ஓ… அன்பே உன் இதழைதான்…
சிறைகள் என்பேனே…
பனி சிறைகள் என்பேனே…

ஆண் : மெலிதான இடையைதான்…
பிறைகள் என்பேனே…
தேய் பிறைகள் என்பேனே…

ஆண் : அடி அன்னபறவை ஒன்று…
அன்று வாழ்ந்ததாக கேட்டேன்…
நான் கேட்ட அந்த ஒன்றை…
இன்று கண்களாலே பார்த்தேன்…

ஆண் : எந்த தேசத்தில் தேசத்தில்…
நீ பிறந்தாய்…
அட இத்தனை பேரழகா…

ஆண் : எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில்…
நீ கலந்தாய்…
இனி நீ இன்றி நான் அழகா…

ஆண் : ஏதோ ஒரு மாற்றம் மாற்றம்…
என்னில் என்னில்…
ஏனோ இடை ஏற்றம் ஏற்றம்…
இதயம் தன்னில்…

ஆண் : நீ கால் முளைத்த புஷ்பம்…
கடல் நுரையில் செய்த சிற்பம்…
உன் முன்பு வந்து நின்றால்…
அந்த சொர்க்கம் கூட அற்பம்…

BGM


Notes : Entha Desathil Song Lyrics in Tamil. This Song from Priyamana Thozhi (2003). Song Lyrics penned by Pa. Vijay. எந்த தேசத்தில் பாடல் வரிகள்.


மான் குட்டியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்ஹரிஹரன் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்பிரியமான தோழி

Maan Kuttiye Song Lyrics in Tamil


ஆண் : மான் குட்டியே…
புள்ளி மான் குட்டியே…
உன் மேனிதான்…
ஒரு பூந்தொட்டியே…

ஆண் : உன் கொழு கொழு கன்னங்கள் பார்த்து…
என் மனசுல தெருக்கூத்து…
உன் ரவிக்கையின் ரகசியம் பார்த்து…
என் நெஞ்சுல புயல் காத்து…

பெண் : மான் குட்டியே…
புள்ளி மான் குட்டியே…
என் மேனிதான்…
ஒரு பூந்தொட்டியே…

BGM

பெண் : உன்னால உன்னால…
எம் மனசு உன்னால…
தறியில் ஓடும் நாடா போல…
ஏன் ஓடுது… அது ஏன் ஓடுது…

ஆண் : உன்னால உன்னால…
உன்னோட நெனப்பால…
கண்ணுக்குள்ள மெளகா வத்தல்…
ஏன் காயுது… அது ஏன் காயுது…

பெண் : இது பஞ்சலோக மேனி…
பஞ்சு தலகாணி…
மேல வந்து ஏன் விழுந்த…

ஆண் : நீ செக்கச் செக்க செவந்த…
குங்குமத்த கலந்த…
வண்ணத்துல ஏன் பொறந்த…

பெண் : நீயும் நானும்தான்…
ஒன்னா திரியிறோம்…

ஆண் : தீயே இல்லையே…
ஆனா எரியிறோம்…

பெண் : மான் குட்டியே…
புள்ளி மான் குட்டியே…

ஆண் : உன் மேனிதான்…
ஒரு பூந்தொட்டியே…

BGM

ஆண் : உன்னோடும் என்னோடும்…
உடம்போடு வேர்த்தாலும்…
வேர்த்திடாத இடமும் உண்டு…
நீ சொல்லனும்… அத நீ சொல்லனும்…

பெண் : ஆணோடும் பெண்ணோடும்…
வேர்க்காத இடம் என்ன…
உதட்டு மேல வேர்க்காதைய்யா…
நீ நம்பணும்… அத நீ நம்பணும்…

ஆண் : நீ அங்கக் கொஞ்சம் காட்டி…
இங்கக் கொஞ்சம் பூட்டி…
பாதி உயிர் எடுக்காதே…

பெண் : என்ன கட்டிக் கட்டிப் புடிக்க…
கண்ட இடம் கடிக்க…
உத்தரவு கேட்காதே…

ஆண் : அசந்தா போதுமே…
அரைச்சி பார்க்கலாம்…

பெண் : கசந்தா போய்விடும்…
கலந்தே பார்க்கலாம்…

ஆண் : மான் குட்டியே…
புள்ளி மான் குட்டியே…
உன் மேனிதான்…
ஒரு பூந்தொட்டியே…

பெண் : என் கொழு கொழு கன்னங்கள் பார்த்து…
உன் மனசுல தெருக்கூத்து…
என் ரவிக்கையின் ரகசியம் பார்த்து…
உன் நெஞ்சுல புயல் காத்து…

பெண் : மான் குட்டியே…
புள்ளி மான் குட்டியே…
என் மேனிதான்…
ஒரு பூந்தொட்டியே…


Notes : Maan Kuttiye Song Lyrics in Tamil. This Song from Priyamana Thozhi (2003). Song Lyrics penned by Pa. Vijay. மான் குட்டியே பாடல் வரிகள்.


காற்றே பூங்காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்கே.எஸ். சித்ராஎஸ். ஏ. ராஜ்குமார்பிரியமான தோழி

Katre Poongatre Song Lyrics in Tamil


BGM

பெண் : காற்றே பூங்காற்றே…
ஒரு கவிதை சொல்வாயா…
விண்ணில் செல்லத்தான்…
உன் சிறகுகள் தருவாயா…

பெண் : தென்றலாய் வருகிறேன்…
பூக்களாய் பூக்கவா…
வார்த்தையாய் வருகிறேன்…
பாடலாய் பாடவா…

பெண் : காற்றே பூங்காற்றே…
ஒரு கவிதை சொல்வாயா…
விண்ணில் செல்லத்தான்…
உன் சிறகுகள் தருவாயா…

BGM

பெண் : நதி என்பது ஓர் நாள்…
கடல் என்பதை சேரும்…
எப்போதுமே ஓடும் நதியாகலாம்…

பெண் : ரோஜா செடி போலே…
நீ பூக்கலாம் இங்கே…
காற்றோடு போராடும் குணம் வேண்டுமே…

பெண் : அட உள்ளங்கையால் சூரியனை…
மூடிட முடியாதே…
ஒரு பறவை மோதி கோபுரம்தான்…
சாய்ந்திட கூடாதே…

பெண் : தோழனே தோழனே…
ஓவியன் கை வலி…
சித்திரம் ஆகுது…
ஒவ்வொரு வழியிலும்…
சாதனை உள்ளது…

பெண் : காற்றே பூங்காற்றே…
ஒரு கவிதை சொல்வாயா…
விண்ணில் செல்லத்தான்…
உன் சிறகுகள் தருவாயா…

BGM

பெண் : புயல் வீசுமே என்று…
கரை ஓரமாய் நின்று…
அணை கட்டினால் அது ஓய்வதில்லை…

பெண் : மழை தூறுமே என்று…
நடுவானிலே வந்து…
திரை கட்டினால் மழை முடிவதில்லை…

பெண் : எாி மலையின் மேலே…
தண்ணீர் ஊற்றி…
அணைத்திட முடியாது…

பெண் : ஒரு மின்னல் கீற்றை…
நூலில் கட்டி…
நிறுத்திட இயலாது…
உன்னை யார் வெல்வது…

பெண் : சிப்பியின் பொறுமைதான்…
முத்து போல் மின்னுது…
இலைகளின் சக்திதான்…
கனிகளை தாங்குது…

பெண் : காற்றே பூங்காற்றே…
ஒரு கவிதை சொல்வாயா…
விண்ணில் செல்லத்தான்…
உன் சிறகுகள் தருவாயா…

பெண் : தென்றலாய் வருகிறேன்…
பூக்களாய் பூக்கவா…
வார்த்தையாய் வருகிறேன்…
பாடலாய் பாடவா…


Notes : Katre Poongatre Song Lyrics in Tamil. This Song from Priyamana Thozhi (2003). Song Lyrics penned by Pa. Vijay. காற்றே பூங்காற்றே பாடல் வரிகள்.


பெண்ணே நீயும் பெண்ணா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்உன்னி மேனன் & கல்பனாஎஸ். ஏ. ராஜ்குமார்பிரியமான தோழி

Penne Neeyum Penna Song Lyrics in Tamil


BGM

ஆண் : பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்…

ஆண் : ஒரு மூன்றாம் பிறையை சுற்றி…
தங்க ஜரிகை நெய்த நெற்றி…
பனிபூக்கள் தேர்தல் வைத்தால்…
அடி உனக்கே என்றும் வெற்றி…

ஆண் : பிரம்மன் செய்த சாதனை…
உன்னில் தெரிகிறது…
உன்னை எழுதும் போது தான்…
மொழிகள் இனிக்கிறது…

ஆண் : பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்…

BGM

ஆண் : புறா இறகில் செய்த…
புத்தம் புதிய மெத்தை…
உந்தன் மேனி என்று…
உனக்கு தெரியுமா…

பெண் : சீன சுவரை போலே…
எந்தன் காதல் கூட…
இன்னும் நீளமாகும்…
உனக்கு தெரியுமா…

ஆண் : பூங்கா என்ன வாசம் என்று…
உந்தன் மீதுதெரியும்…

பெண் : தந்தம் என்ன வண்ணம் என்று…
உன்னை பார்க்க தெரியும்…
காதல் வந்த பின்னாலே…
கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும்…

ஆண் : கம்பன் ஷெல்லி சேர்ந்துதான்…
கவிதை எழுதியது…
எந்தன் முன்பு வந்துதான்…
பெண்ணாய் நிற்கிறது…

ஆண் : பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்…

BGM

பெண் : மழை வந்த பின்னால்…
வானவில்லும் தோன்றும்…
உன்னை பார்த்த பின்னால்…
மழை தோன்றுதே…

ஆண் : பூக்கள் தேடிதானே…
பட்டாம் பூச்சி பறக்கும்…
உன்னை தேடி கொண்டு…
பூக்கள் பறந்ததே

பெண் : மின்னும் விந்தை என்ன என்று…
மின்னல் உன்னை கேட்கும்…
எங்கே தீண்ட வேண்டும் என்று…
தென்றல் உன்னை கேட்கும்…

ஆண் : உன்னை பார்த்த பூவெல்லாம்…
கையெழுத்து கேட்டு நிற்கும்…

பெண் : நீ தான் காதல் நூலகம்…
சேர்ந்தேன் புத்தகமாய்…
நீதான் காதல் பூ மழை…
நனைவேன் பாத்திரமாய்…

ஆண் : பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்…

பெண் : அரை நொடிதான் என்னை பார்த்தாய்…
ஒரு யுகமாய் தோன்ற வைத்தாய்…
பனி துளியாய் நீயும் வந்தாய்…
பாற் கடலாய் நெஞ்சில் நின்றாய்…

ஆண் : பிரம்மன் செய்த சாதனை…
உன்னில் தெரிகிறது…
உன்னை எழுதும் போதுதான்…
மொழிகள் இனிக்கிறது…

BGM


Notes : Penne Neeyum Penna Song Lyrics in Tamil. This Song from Priyamana Thozhi (2003). Song Lyrics penned by Pa. Vijay. பெண்ணே நீயும் பெண்ணா பாடல் வரிகள்.