பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா.விஜய் | ஹரிஹரன் | எஸ். ஏ. ராஜ்குமார் | பிரியமான தோழி |
Entha Desathil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : எந்த தேசத்தில் தேசத்தில்…
நீ பிறந்தாய்…
அட இத்தனை பேரழகா…
—BGM—
ஆண் : எந்த தேசத்தில் தேசத்தில்…
நீ பிறந்தாய்…
அட இத்தனை பேரழகா…
ஆண் : எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில்…
நீ கலந்தாய்…
இனி நீ இன்றி நான் அழகா…
ஆண் : ஏதோ ஒரு மாற்றம் மாற்றம்…
என்னில் என்னில்…
ஏனோ இடை ஏற்றம் ஏற்றம்…
இதயம் தன்னில்…
ஆண் : நீ கால் முளைத்த புஷ்பம்…
கடல் நுரையில் செய்த சிற்பம்…
உன் முன்பு வந்து நின்றால்…
அந்த சொர்க்கம் கூட அற்பம்…
—BGM—
ஆண் : எந்த தேசத்தில் தேசத்தில்…
நீ பிறந்தாய்…
அட இத்தனை பேரழகா…
—BGM—
ஆண் : வண்ண வண்ண பூவெல்லாம்…
வாசம் வீசி பூ பூக்கும்…
உன்னை போல ஒன்றுக்கும்…
வாசம் வீச தெரியாதே…
ஆண் : கோடி கோடி வார்த்தைகள்…
கோர்த்து கொண்டு வந்தாலும்…
நீ சினுங்கும் ஓசை போல்…
அர்த்தம் எதிலும் கிடையாதே…
ஆண் : ஓ… அழகே நீ வாய் பேச…
கீதம் என்பேனே…
சங்கீதம் என்பேனே…
ஆண் : பேசாத மௌனத்தை…
கவிதை என்பேனே…
புது கவிதை என்பேனே…
ஆண் : கடல் ஓரம் நீயும் வந்தால்…
புயல் வந்ததென்று அர்த்தம்…
நீ என்னை நீங்கி சென்றால்…
உயிர் நின்றதென்று அர்த்தம்…
ஆண் : எந்த தேசத்தில் தேசத்தில்…
நீ பிறந்தாய்…
அட இத்தனை பேரழகா…
—BGM—
ஆண் : உந்தன் கண்கள் ஓரத்தில்…
தீட்டி வைத்த மை தந்தால்…
ஐந்து அல்ல ஐந்நுாறு…
காப்பியங்கள் உண்டாகும்…
ஆண் : உந்தன் கூந்தல் ஈரத்தை…
தொட்டு போன காற்றைதான்…
கொஞ்ச நேரம் சுவாசித்தால்…
எந்தன் வாழ்வில் வரமாகும்…
ஆண் : ஓ… அன்பே உன் இதழைதான்…
சிறைகள் என்பேனே…
பனி சிறைகள் என்பேனே…
ஆண் : மெலிதான இடையைதான்…
பிறைகள் என்பேனே…
தேய் பிறைகள் என்பேனே…
ஆண் : அடி அன்னபறவை ஒன்று…
அன்று வாழ்ந்ததாக கேட்டேன்…
நான் கேட்ட அந்த ஒன்றை…
இன்று கண்களாலே பார்த்தேன்…
ஆண் : எந்த தேசத்தில் தேசத்தில்…
நீ பிறந்தாய்…
அட இத்தனை பேரழகா…
ஆண் : எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில்…
நீ கலந்தாய்…
இனி நீ இன்றி நான் அழகா…
ஆண் : ஏதோ ஒரு மாற்றம் மாற்றம்…
என்னில் என்னில்…
ஏனோ இடை ஏற்றம் ஏற்றம்…
இதயம் தன்னில்…
ஆண் : நீ கால் முளைத்த புஷ்பம்…
கடல் நுரையில் செய்த சிற்பம்…
உன் முன்பு வந்து நின்றால்…
அந்த சொர்க்கம் கூட அற்பம்…
—BGM—
Notes : Entha Desathil Song Lyrics in Tamil. This Song from Priyamana Thozhi (2003). Song Lyrics penned by Pa. Vijay. எந்த தேசத்தில் பாடல் வரிகள்.