Category Archives: படைவீட்டு அம்மன்

படைவீட்டு அம்மன் – Padai Veetu Amman (2001)

அடி முத்து முத்து மாரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராம நாராயணன்சுவர்ணலதாஎஸ்.ஏ.ராஜ்குமார்படைவீட்டு அம்மன்

Adi Muthu Muthu Mari Song Lyrics in Tamil


BGM

பெண் : மாயி மகமாயி மணிமந்திர சேகரியே…
ஆயி உமையானவளே ஆதி சிவன் தேவியரே…
சமைத்தால் சமயபுரம் சாதித்தால் கண்ணபுரம்…
அந்த கண்ணபுரத்து எல்லைய விட்டு என் அம்மா…
நீ கடுகு வர வேணுமடி…

BGM

பெண் : அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி…
அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி…
அஞ்சு குடைக்காரி தஞ்சாவூரு மாரி…
தஞ்சம் என வந்தோரை காத்து நிக்கும் தேவி…

பெண் : பம்பை காரியே இந்த வம்பு ஏனடி…
அடி பம்பை காரியே இந்த வம்பு ஏனடி…

பெண் : அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி…
அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி…

BGM

பெண் : வெள்ளிமலை நாயகி வேலனுக்கு தாயடி…
வேம்பு ரதம் ஏறி வந்து வினையை தீர்க்கனும்…

BGM

பெண் : நாராயணன் தங்கச்சி நல்லமுத்து மாரியே…
தங்க ரதம் ஏறி வந்து தாயை காக்கணும்…

பெண் : என் பம்பை சத்தம் கேட்கலையோ கருமாரியே…
இந்த பானகமும் ருசிக்கலையோ பூமாரியே…
என் மாளிகையின் மணிக்கதவும் திறக்கவில்லையோ…

பெண் : அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி…
அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி…

BGM

பெண் : வேம்பினிலே உடையடி வைகையாறு கடையடி…
சாம்பிராணி வாசத்தோடு சங்கரி வாரனும்…

BGM

பெண் : அஞ்சு தலை நாகினி ஆயிரம் கண் நாயகி
முண்டக்கண்ணி மோகினி வந்து முத்து எடுக்கனும்…

பெண் : ஆதி மீனாட்சி தாயே நீ பெண் இல்லையா…
இங்கே பாலன் படும்பாட்டை பார்க்க கண்ணில்லையா…
உன் பாளையத்து ஆலயத்தில் பாசம் இல்லையா…

பெண் : அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி…
அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி…
அஞ்சு குடைக்காரி தஞ்சாவூரு மாரி…
தஞ்சம் என வந்தோரை காத்து நிக்கும் தேவி…

பெண் : பம்பை காரியே இந்த வம்பு ஏனடி…
அடி பம்பை காரியே இந்த வம்பு ஏனடி…

பெண் : அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி…
அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி…

BGM


Notes : Adi Muthu Muthu Mari Song Lyrics in Tamil. This Song from Padai Veetu Amman (2001). Song Lyrics penned by Rama Narayanan. அடி முத்து முத்து மாரி பாடல் வரிகள்.


உடுக்கை பிறந்தது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கே.எஸ். சித்ரா & கீர்த்திஎஸ்.ஏ.ராஜ்குமார்படைவீட்டு அம்மன்

Udukkai Piranthathu Song Lyrics in Tamil


BGM

பெண் : உடுக்கை பிறந்தது என் ருத்ராட்ச பூமியிலே…

BGM

பெண் : பம்பை பிறந்தது மேல் மலையனூரு கோவிலிலே…

பெண் : சூலம் பிறந்தது என் சோட்டானி கரையினிலே…
வேம்பு பிறந்தது என் சமயபுரம் சோலையிலே…

பெண் : எழுந்தேன் காளி இன்று ஏழு வானம் மகிழவே…
நடந்தேன் சூலம் கொண்டு பாவிகளை அழிக்கவே…

பெண் : விண்ணையும் மண்ணையும் காட்டிய…
எனது விஸ்வரூபம் இதுதானே…

பெண் : தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்…

பெண் : ஊராளும் தேவி உன் வாசல் நாடி…
தாயே நீ துணை என்று வந்தேன் அம்மா…
குழு : தாயே நீ மனம் இறங்கி அருள்வாயம்மா…

பெண் : ஆவேச காளி பூவோடு தாலி…
மடிப்பிச்சை உனை கேட்டு நின்றேனம்மா…
குழு : மாங்கல்ய பலம் தந்து காப்பாயம்மா…

BGM

பெண் : பாம்பை ஒலிக்க ஒலிக்க ஒலிக்க…
சாம்பலும் அதில் சொலிக்க சொலிக்க…
படைவீட்டு அம்மன் நான் பவனி வந்தேனே…
என் சத்தியம்தான் ஜெயிக்கும் என்று சொல்ல வந்தேனே…

பெண் : எனது பக்தரை நீ ஏமாற்றிய பாவமே…
அதனால் உன்மீது அடங்காத கோவமே…
இன்னொருத்தி வாழ்வை பறித்த துரோகம் உனது சாபமே…

BGM

பெண் : மீனாட்சி தாயே காமாட்சி மாயே…
பூவோடும் பொட்டோடும் நான் வாழனும்…
தீயான உன் உள்ளம் நீராகனும்…
அடி தண்ணீரில் மானாய் தரைமீது மீனாய்…
கண்ணீரில் நின்றேன் காப்பாற்றம்மா…

BGM

பெண் : உடுக்கை பிறந்தது என் ருத்ராட்ச பூமியிலே…
பம்பை பிறந்தது மேல் மலையனூரு கோவிலிலே…

BGM

பெண் : கங்கு நெருப்பு வெடிக்க வெடிக்க…
தனலை அள்ளி தெளிக்க தெளிக்க…
அக்கினி மேல் தவம் புரியும் வெக்காளி நானே…
எட்டு ஜோதியிலே தோன்றி வந்த காளியும் நானே…

பெண் : கடலின் அலையில் நடக்கும் மாயக்காரி நானடி…
உலகின் தலையில் நின்று நடனம் செய்வேன் பாரடி…
அந்தரத்தில் பள்ளி கொண்ட ஆதி சக்தி நானடி…

BGM

பெண் : அம்மா என் தாயே உன் கோபம் தீர…
பூமாரி தீக்கூட மிதிப்பேன் அம்மா…
மண் சோறு விரதத்தை முடித்தேன் அம்மா…

பெண் : அடி காணிக்கை முடி தந்து வேப்பஞ்சீலை கட்டி…
கண் மூடி அடிபோட்டு நடந்தேன் அம்மா…

BGM

பெண் : உடுக்கை பிறந்தது என் ருத்ராட்ச பூமியிலே…
பம்பை பிறந்தது மேல் மலையனூரு கோவிலிலே…

பெண் : எழுந்தேன் காளி இன்று ஏழு வானம் மகிழவே…
நடந்தேன் சூலம் கொண்டு பாவிகளை அழிக்கவே…

பெண் : விண்ணையும் மண்ணையும் காட்டிய…
எனது விஸ்வரூபம் இதுதானே…

பெண் : தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்…

BGM


Notes : Udukkai Piranthathu Song Lyrics in Tamil. This Song from Padai Veetu Amman (2001). Song Lyrics penned by Kalidasan. உடுக்கை பிறந்தது பாடல் வரிகள்.